Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராஜா ராணி 2 சீரியலில் அடுத்த சந்தியா இவர்தானா? போலீசாக இனி இவர் தான்.. ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்

ராஜா ராணி 2 சீரியலில் சந்தியா கேரக்டரில் இனி நடிகை ஆஷா கவுடா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீசன் 2 சீரியலில் இருந்து சந்தியா கேரக்டரில் நடித்து வந்த ரியா விலகி இருப்பதாக அவரே கூறி இருந்தார்.

இதைத்தொடர்ந்து அவருடைய கேரக்டரில் இனி யார் நடிக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் இந்த கேரக்டரில் ஜீ தமிழ் சீரியலில் நடித்த நடிகை ஆஷா கௌடா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

நடிகை ஆஷா கவுடா சமீபத்தில் ஜீ தமிழில் முடிவடைந்த கோகுலத்தில் சீதை என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

முதல் சந்தியா

முதல் சந்தியா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீசன் 2 சீரியல் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. இந்த சீரியலில் தொடர்ந்து பல கேரக்டர்களில் நடிகர்கள் இவருக்கு பதில் இவர் என மாறிவிட்டனர். ஆரம்பத்தில் கதாநாயகியாக நடித்து வந்த சந்தியா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்த காரணத்தால் இந்த சீரியலில் இருந்து விலகி இருந்தார். கர்ப்பமாக இருந்த கடைசி மாதம் வரைக்கும் இவர் இந்த சீரியலில் நடித்துவிட்டு தான் விலகி இருந்தார்.

இரண்டாவது சந்தியாவும் விலகல்

இரண்டாவது சந்தியாவும் விலகல்

கதாநாயகியை தொடர்ந்து அவருக்கு அடுத்ததாக வில்லி கேரக்டரில் நடித்து வந்த அர்ச்சனா கேரக்டரில் விஜே அர்ச்சனா நடித்து வந்தார். அவரும் திடீரென இந்த சீரியலை விட்டு தான் விலக இருப்பதாக கூறிவிட்டு விலகி விட்டார். ஆனால் அதற்கான காரணத்தை பற்றி அவர் எந்த தகவலையும் கூறியவில்லை என்ற நிலையில், தற்போது அர்ச்சனா திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதைத்தொடர்ந்து தற்போது இரண்டாவது முறையாக சந்தியா கேரக்டரில் நடித்து வந்த ரியா விஸ்வநாதன் இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் இந்த சீரியலில் இருந்து விலகி விட்டதாக உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

அடுத்தது யார்

அடுத்தது யார்

இதைத்தொடர்ந்து சந்தியா கேரக்டரில் இனி யார் நடிக்கப் போகிறார்கள் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் எகிறி வருகிறது. காரணம் பல போராட்டங்களுக்குப் பிறகு இப்போது தான் சந்தியா ஐபிஎஸ் அதிகாரியாக சொந்த மாவட்டத்திலேயே பொறுப்பு ஏற்று இருக்கிறார். இனி தான் பல்வேறு பிரச்சனைகளும் இந்த சீரியலில் அடுத்தடுத்து வர இருக்கிறது. ஏற்கனவே பிரச்சனைகளுக்கும் சந்தியாவுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அடிக்கடி பிரச்சினைகளில் மாட்டிக் கொண்டிருப்பது தான் சந்தியா கேரக்டருடைய வேலை. இதில் தற்போது நடித்து வந்த ரியா நன்றாக நடித்து வந்தாலும் இவர் விலகி விட்டதால் இனி யார் அந்த கேரக்டரில் சரியாக பொருந்துவார் என்று பலர் கேள்வி எழுப்பி வந்தனர்.

மூன்றாவது சந்தியா

மூன்றாவது சந்தியா

இந்த நிலையில் இந்த கேரக்டரில் ஜீ தமிழில் கோகுலத்தில் சீதை சீரியலில் நடித்து வந்த ஆஷா கவுடா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே ஆஷா கவுடா போலீஸ் கெட்டப்புக்கு அப்படியே பொருத்தமாக இருப்பார். அதனால் இந்த சீரியலில் ஐபிஎஸ் அதிகாரியாக இனி மிரட்டப் போக இருக்கிறார் என்று ரசிகர்கள் கருத்து கூற, சரவணனுக்கு இரண்டு ஜோடி ஏற்கனவே இருந்த நிலையில் தற்போது மூன்றாவது ஜோடி வந்துவிட்டதை வைத்து நெட்டிசன்கள் சரவணன் கேரக்டரை கலாய்த்து வருகிறார்கள். ஆஷா கவுடா நடித்த எபிசோடுகள் இன்னும் இரண்டு நாட்களில் இருந்து ஒளிபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+