அப்பா வயசு டைரக்டர் என்னிடம் தப்பா நடந்துக்கிட்டாரு.. தற்கொலை முயற்சி எடுத்தேன்! நடிகை அஸ்வினி ஓபன்
சென்னை: புது நெல்லு புது நாத்து, கிழக்கு சீமையிலே போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்த நடிகை அஸ்வினி நம்பியார் என்ற ருத்ரா பேட்டி ஒன்றில் தான் தற்கொலை முயற்சி எதற்காக எடுத்தேன் என்று பேசி இருக்கிறார். அதில் அப்பா வயது உள்ள டைரக்டர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்று எமோஷனலாக பேசியிருக்கிறார்.
தற்போது செய்தி சேனல்களில் அதிகமான செய்திகள் பாலியல் தொல்லைகள் குறித்ததாக தான் இருக்கிறது. பெண்களுக்கு மட்டும் அல்லாமல் ஆண்களுக்கும் பாலியல் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. பிறந்த குழந்தையில் இருந்து 80 வயது பாட்டி வரைக்கும் இந்த தொல்லைக்கு ஆளாகிறார்கள்.

நடிகை அஸ்வினி பேட்டி
இந்த தப்பு செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்பது பலருடைய குரலாக இருந்தாலும் நாளுக்கு நாள் பாலியல் தொந்தரவுகளில் சிக்குபவர்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறார்கள். அதுபோல சினிமா துறையிலும் அட்ஜஸ்மென்ட் பிரச்சனை, பாலியல் தொல்லை தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்கிறது. இது குறித்து நடிகை அஸ்வினி சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் பேசி இருக்கிறார்.
தமிழில் அறிமுகம்
அதில் நான் புது நெல்லு புது நாத்து திரைப்படத்தின் மூலமாகத்தான் தமிழில் பிரபலமானேன். அதற்குப் பிறகு கிழக்கு சீமையிலே போன்ற ஹிட்டான திரைப்படங்களும் எனக்கு கிடைத்தது. அந்த நேரத்தில் எனக்கு சில கசப்பான சம்பவங்களும் நடைபெற்றது. சூட்டிங்கிற்கு எப்போதும் என்னுடைய அம்மாவோடு தான் வருவேன்.

பாலியல் தொல்லை
ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது ஒரு நாள் அம்மாவால் ஷூட்டிங்கிற்கு வர முடியாமல் இருந்தது. அதனால் நான் என்னுடைய மேக்கப் ஆர்டிஸ்ட் உடன் வந்து இருந்தேன். அப்போது நான் தனியாக இருக்கும்போது அந்த திரைப்படத்தின் டைரக்டர் என்னிடம் தவறாக நடந்து கொண்டார். எனக்கு அதை வெளியே சொல்லுவதற்கே பயமாக இருந்தது. நானும் டீன் ஏஜ் பருவத்தில் இருந்ததால் இதில் எது தவறு எது சரி என்று எனக்கு யோசிக்க முடியவில்லை.
மன குழப்பம்
அந்த இடத்தில் என்ன நடந்தது என்பது மட்டும்தான் என்னுடைய மண்டையில் ஓடிக்கொண்டு இருந்தது. ஒருவேளை நான் செய்ததுதான் தவறா? நான் இங்கே தனியா வந்திருக்கக் கூடாதா? இந்த டைரக்டர் என்னிடம் தப்பாக நடந்து கொள்ளும்போது நாம் அதற்கு எப்படி மறுப்பு சொல்லி இருக்க வேண்டும்? என்றெல்லாம் யோசித்து யோசித்து எனக்கு ரொம்பவும் மனக்கஷ்டமாகிவிட்டது.

தற்கொலை முயற்சி
இதைப்பற்றி என்னுடைய அம்மாவிடம் கூட நான் சொல்லவில்லை. நான் தூக்க மாத்திரைகளை நிறைய சாப்பிட்டு தற்கொலை முயற்சி எடுத்தேன். அதற்கு பிறகு தான் என்னுடைய அம்மா என்ன நடந்தது என்று விசாரித்தார். அப்போது நடந்த விஷயத்தை சொன்னேன். அதில் உன்னுடைய தவறு எதுவும் இல்லை என்று என்னுடைய அம்மா எனக்கு புரிய வைத்தார். அதற்குப் பிறகு நான் சினிமாவில் நடிப்பதை குறைத்து இருந்தேன்.
சுழல் வெப் சீரிஸ்
இப்போது மீண்டும் சுழல் வெப் சீரிஸ் மூலமாக நான் நடிக்க வந்திருக்கிறேன். இதற்கு குடும்பத்தினர் எல்லோரிடமும் பேசி நடிக்க வந்திருக்கிறேன். இந்த திரைப்படத்திற்குப் பிறகு எனக்கு சரியான வாய்ப்புகள் வந்தால் தொடர்ந்து நடிப்பேன் இல்லை என்றால் மீண்டும் என்னுடைய கணவரின் சொந்த ஊரான சிங்கப்பூருக்கு சென்று விடுவேன்.

மற்ற மொழிகளில் நடிப்பு
நான் தமிழ் திரைப்படங்களில் இப்போது அதிகமாக நடிக்கவில்லை என்றாலும் மற்ற மொழிகளில் நடித்துக் கொண்டிருக்கிறேன். மற்ற மொழிகளில் சீரியல்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறேன். இப்போது பல வருடம் கழித்து நான் மீண்டும் தமிழ் சினிமாவில் அடி எடுத்து வைத்திருக்கிறேன். மக்கள் இப்போதும் என்னை கிழக்கு சீமையிலே படத்தில் இடம் பிடித்த ஆத்தங்கர மரமே என்ற பாடலை வைத்து அடையாளப்படுத்துகிறார்கள். இது சந்தோஷமாக இருக்கிறது.

மன தைரியம்
ஆனாலும் இந்த சில மனக்கசப்புகள் என் மனதிற்குள் இருந்து கொண்டே இருக்கிறது. ஆரம்பத்தில் இருந்தது போல இப்போது நான் இல்லை. இப்போது தைரியமாக மாறிவிட்டேன். எதையும் பார்த்துக் கொள்ளலாம் என்று மன தைரியம் இருக்கிறது. என்னிடம் தவறாக நடந்து டைரக்டர் என் முன்பு வந்தால் கூட அவரிடம் என்னால் இப்போது பேச முடியும் என்று அந்த பேட்டியில் நடிகை அஸ்வினி நம்பியார் என்ற ருத்ரா பேசியிருக்கிறார்.

-
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள் -
வாரத்தில் 4 நாள் தான் வேலை.. 3 நாள் லீவு! எரிபொருள் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த இலங்கை அதிரடி முடிவு -
சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன 4 பேரை கவனிச்சீங்களா? விஜய்யை முளையிலேயே ஆஃப் செய்து? எங்கேயோ கேட்ட குரல் -
கூட்டணி சேர விடாமல் விஜய்யை தடுக்கும் "அந்த" 2 பேர்? பணத்திற்கு எங்க போறது? குமுறும் தவெகவினர் -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல்












Click it and Unblock the Notifications