நடிகை சினேகாவுக்கு போட்டியாக “கயல்” சைத்ரா தொடங்கிய பிசினஸ்.. ஆரம்பமே அமோகம்.. குவியும் வாழ்த்து
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் நடிகை சைத்ரா ரெட்டி தான் புதியதாக புடவை கடை தொடங்கப் போவதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களிடம் பகிர்ந்து இருக்கும் நிலையில் அவருக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
ஒரு சில நடிகைகளுக்கு தான் சீரியலில் நடித்தாலும் வெள்ளித்திரை நடிகைகளுக்கு போன்று ரசிகர்கள் இருக்கின்றார்கள். அந்த வகையில் ஒருவர் தான் நடிகை சைத்ரா ரெட்டி. சைத்ரா தமிழில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடிகை பிரியா பவானி சங்கருக்கு பதிலாக நடிக்க தொடங்கி இருந்தாலும் முதல் சீரியலிலேயே இவருக்கு அதிகமான ரசிகர்கள் கிடைத்தனர்.

பொதுவாக நடிகைகள் ஒரு சீரியலில் கதாநாயகியாக அறிமுகம் ஆகிவிட்டால் தொடர்ந்து அது போன்றே கேரக்டரில் நடிக்க விரும்புவார்கள். ஆனால் சைத்ரா மட்டும்தான் முதல் சீரியலில் கதாநாயகியாக நடித்துவிட்டு அதைத் தொடர்ந்து வில்லியாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு யாரடி நீ மோகினி சீரியல் வில்லியாகவும் நடித்திருந்தார். அந்த நேரத்தில் தான் நடிகர் அஜித்துடன் வலிமை படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைக்க அந்த படத்திலும் நடித்திருந்தார்.
அதுபோல அந்த நேரத்திலேயே கயல் சீரியலிலும் பட்டி தொட்டி எல்லாம் ரசிகர்களை உருவாக்கி விட்டது. இப்போது இந்த சீரியலில் கயலுக்கு திருமணம் நடக்க இருக்கிறது. இந்த திருமணம் நடக்குமா? இல்லையா? என்ற எதிர்பார்ப்போடு மக்கள் இருக்கின்றனர். இந்த நேரத்தில் சைத்ரா ரெட்டி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீண்ட ஒரு பதிவு போட்டு இருக்கிறார். அது அதிகமான லைக்களை பெற்று வருகிறது.

அதில் சைத்ரா பெங்களூரில் புடவை கடை ஆரம்பிக்க இருப்பதாக கூறப்படுகிறது. நிலவரசி என்ற பெயரில் இவர் புடவை கடையை ஆரம்பிக்க இருப்பதாகவும் இவர் கடையில் விற்பனைக்கு இருக்கும் புடவைகள் எல்லாமே பிரத்யேகமாக நெய்தது என்றும் கூறியிருக்கிறார் அதோடு இவரே ஆர்டர் கொடுத்து நெய்து வந்த புடவைகளை மட்டுமே இவர் தன்னுடைய கடையில் விற்கப் போவதாகவும் அந்த பதிவில் கூறியிருக்கிறார்.
அதோட ஆகஸ்டு ஒன்பதாம் தேதி சைத்ரா தன்னுடைய கடையை திறக்க உள்ளதாக இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ள நிலையில் நண்பர்கள் சக நடிகர்கள், ரசிகர்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். வெள்ளி திரையில் சினேகா உட்பட பல நடிகைகள் புடவை கடை திறந்து கொண்டிருக்கும் நிலையில் அந்த வரிசையில் இப்போது நடிகை சைத்ராவும் இடம் பிடித்திருக்கிறார்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications