வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. ஆனால் அதற்கு பிறகு வாழ்க்கை மாறிடுச்சு! தேவயானி எமோஷனல்
சென்னை: நடிகை தேவயானி தன்னுடைய கணவர் மற்றும் குழந்தைகள் குறித்து பேட்டி ஒன்றில் பல தகவல்களை பகிர்ந்திருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் அதிகமாக கருத்துக்களை பெற்று வருகிறது. அதில் தேவயானி தன்னுடைய கணவர் ராஜகுமாரன் பற்றி மனம் திறந்து பேசி இருக்கிறார். அது பற்றி பார்க்கலாம்.
சின்னத்திரையாக இருந்தாலும் சரி, வெள்ளி திரையாக இருந்தாலும் சரி ஒன்றாக நடித்தவர்கள் பலர் காதலித்து திருமணம் செய்து இருக்கிறார்கள். ஆனால் அதில் ஒரு சிலர் மட்டும்தான் திருமண வாழ்க்கையில் பல பிரச்சனைகள் வந்தாலும் எதிர்த்து பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் வெள்ளி திரையில் பலரையும் வியக்க வைத்த ஜோடிகளில் ஒன்றாக தேவயானி மற்றும் அவருடைய கணவர் ராஜகுமாரன் இருந்து வருகின்றனர்.

தேவயானி காதல் கோட்டை திரைப்படத்திற்கு பிறகு நடித்த பல திரைப்படங்கள் சூப்பர் டூப்பராக வெற்றி அடைந்தது. அந்த நேரத்தில் தான் இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் அந்த நேரத்தில் அதிகமாக பேசப்பட்டது. தேவயானியின் திருமணத்தில் இரண்டு வீட்டிலும் சம்மதம் இல்லாமல் இருந்த நிலையில் வீட்டின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு ராஜகுமாரன் வீட்டில் சம்மதம் தெரிவித்திருந்த நிலையில் தேவயானியின் வீட்டில் சில வருடங்கள் கழித்து தான் சம்மதம் சொல்லி இருக்கிறார்கள். ஆனாலும் தேவயானியின் குடும்ப பங்க்ஷனில் அதிகமாக ராஜகுமாரன் கலந்து கொண்ட மாதிரி எந்த புகைப்படங்களும் செய்திகளும் வெளியே வந்தது கிடையாது. ஆனாலும் தேவயானிக்கு இனியா மற்றும் பிரியங்கா என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர்.
இந்த நிலையில் தன்னுடைய மகள்கள் மற்றும் கணவர் ராஜகுமாரனுடன் சேர்ந்து தேவயானி பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். அந்த வீடியோ இப்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதில் தேவயானி பேசுகையில் நான் கல்யாணம் பண்ணுனா ராஜகுமாரனை தான் கல்யாணம் பண்ணுவேன்னு சொல்லி காதலிச்சு கல்யாணம் பண்ணினேன். ஆனால் கல்யாணம் பண்ணின பிறகு வாழ்க்கை அவரை சுத்தி எனக்கு வேறு விதமான ஒரு உணர்வை தந்தது.
கல்யாணத்திற்கு முன்பு அம்மா அப்பாவோடு அரவணைப்பில் இருந்தேன். ஆனால் கல்யாணத்திற்கு பிறகு ஒரு மனைவியா நடந்துக்கணும், குடும்பத்தை பார்த்துக்கணும் என்ற ஒரு பெரிய பொறுப்பு வந்தது. மனைவி என்ற உணர்வு எனக்கு வித்தியாசமாக இருந்தது. அதற்கு பிறகு வாழ்க்கை மாறி இருந்தது. இப்ப வரைக்கும் எங்களுடைய திருமண வாழ்க்கை நன்றாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது.கல்யாணம் முடிந்து 22 வருடம் ஆகிறது. ஆனாலும் அவர் என்னை நன்றாகவே பார்த்துக் கொள்கிறார் என்று அந்த பேட்டியில் தேவயானி பேசி இருக்கிறார்.
-
பிரபுவின் ‘டூயட்’ நாயகி மீண்டும் வருகிறார்... 30 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-என்ட்ரி! எந்த ஹீரோவுடன் கம்பேக்? -
‘கருப்பு ஸ்டார்’ பட்டம் கொடுத்த ரசிகர்... உடனே திரிஷா கொடுத்த பதில்... இவ்வளவு இறங்கி பேசிட்டாரே! -
22 வயசுல அமலா பாலுக்கு அம்மா.. இப்போ அரசு வேலையில் கலக்கும் நடிகை! மைனா பூவிதாவின் மறுபக்கம் -
நயன்தாரா என்னை மாதிரி கஷ்டப்பட்டவங்க.. விக்னேஷ் சிவன் பழசை மறந்துட்டாரு! ஓபனாக பேசிய நடிகை சோனா -
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
குடும்பங்களுக்குள் புகுந்து அவதூறு.. ‘குற்றம் நிரூபித்தால் உயிரோட விடக்கூடாது!’ குஷ்பு ஆவேச பேட்டி -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம்












Click it and Unblock the Notifications