விஜய் தான் உங்க கணவரை விட சிறந்தவர்.. ரசிகர் போட்ட கமெண்டுக்கு ஜோதிகா கொடுத்த பதிலடி
சென்னை: நடிகை ஜோதிகா சோசியல் மீடியாவில் பயங்கர ஆக்டிவாக இருக்கிறார். அதிலும் சில நாட்களாக போட்டோ சூட் புகைப்படங்களை பகிர்ந்து கொண்டே இருக்கிறார். இந்த நிலையில் ஜோதிகாவின் போஸ்ட் ஒன்றுக்கு ரசிகர் ஒருவர் கொடுத்த கமாண்ட் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் சினிமாவில் ஒரு சில ஜோடிகள் தான் காதலித்து திருமணம் செய்து மகிழ்ச்சியாக தங்களுடைய திருமண வாழ்க்கையை தொடர்ந்து கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் நடிகை ஜோதிகா மற்றும் சூர்யா தம்பதியும் ஒன்று. இவர்கள் இருவரும் இணைந்து பூவெல்லாம் கேட்டுப்பார், மாயாவி, காக்க காக்க, பேரழகன், ஜில்லுனு ஒரு காதல் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்கள்.

அதிலும் இவர்களுடைய நடிப்பில் பூவெல்லாம் கேட்டுப்பார் படம் பெரிய அளவில் ஹிட் அடித்தது. அப்போது இருந்து இவர்கள் காதலிக்க தொடங்கினர். அதைத் தொடர்ந்து ஏழு வருட காதல் வாழ்க்கைக்கு பிறகு கடந்த 2006 ஆம் ஆண்டு செப்டம்பர் பதினொன்றாம் தேதி இருவரும் ரெண்டு குடும்பத்தினரின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களின் திருமணம் அந்த நேரத்தில் பெரிய அளவில் பேசப்பட்டது. இவர்களுடைய திருமணத்திற்கு சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு ஜோதிகா மற்றும் சூர்யா தம்பதிக்கு தியா மற்றும் தேவ் என்ற இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.

திருமணத்திற்கு பிறகு அதிக நாட்கள் நடிக்காமல் இருந்த ஜோதிகா 36 வயதினிலே என்ற படத்தின் மூலமாக தான் ரீ என்ட்ரி கொடுத்தார். அந்த திரைப்படம் பெண்களை மையமாக எடுக்கப்பட்ட கதைக்களம் நிறைந்ததாக இருந்தது. அதற்கு பிறகு அது போன்ற பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கேரக்டரிலேயே ஜோதிகா தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் கூட ஒரு பேட்டியில் ஹீரோ மற்றும் ஹீரோயின் கதைகளில் நடித்து தனக்கு போர் அடித்து விட்டது இப்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கேரக்டரில் தான் நான் நடித்துக் கொண்டிருக்கிறேன் என்று பேசி இருந்தார். குடும்பத்தோடு மும்பையில் செட்டிலாகி இருக்கும் ஜோதிகா தற்போது Dabba Cartel என்ற வெப் சீரிஸில் நடித்திருக்கிறார்.

இந்த வெப் சீரிஸ் வரும் 28ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் சில தினங்களாகவே போட்டோ சூட்டில் ஜோதிகா கலக்கிக் கொண்டிருக்கிறார். தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை தான் சமூக வலைதள பக்கங்களில் ஜோதிகா பகிர்ந்து வருகிறார் அதற்கு ரசிகர் ஒருவர் வெளியிட்ட கமெண்டுக்கு ஜோதிகா அதிரடியான பதில் கொடுத்து இருக்கிறார்.

அதில் ரசிகர் "விஜய் தான் உங்க கணவரை விட சிறந்தவர்" என்று கூறியிருக்கிறார். அதற்கு ஜோதிகா பதிலடி கொடுக்கும் விதமாக சிரிக்கும் எமோஜியை மட்டும் கமாண்டாக கொடுத்திருக்கிறார். இதற்கு ரசிகர்கள் அதிகமான லைக் கொடுத்து வருகிறார்கள்.

-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications