என் கணவருக்கு விருப்பமில்லை.. என்னால் அவருக்கு சங்கடம்! திருமண உறவு குறித்து பேசிய கீர்த்தி சுரேஷ்
சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு வருத்தமாக பதில் அளித்து இருக்கிறார். அதில் தன்னுடைய கணவருக்கு தன்னால் சங்கடம் ஏற்படுவதாக கீர்த்தி சுரேஷ் கூறி இருப்பது இணையத்தில் அதிகமாக பேசப்படுகிறது.
நடிகை கீர்த்தி சுரேஷ் பற்றிய செய்திகள் சில மாதங்களாகவே இணையத்தில் அதிகமாக அடிபடுகிறது. 15 வருடங்களாக அந்தோணி தட்டில் என்பவரை காதலித்து வந்த நிலையில் தன்னுடைய காதலை ரகசியமாக வைத்திருந்த கீர்த்தி சுரேஷ் கடந்த டிசம்பர் மாதத்தில் தான் எளிமையாக திருமணம் செய்து கொண்டார்.

அவருடைய திருமணத்திற்கு சில மாதங்களுக்கு முன்புதான் தன்னுடைய காதலரை சமூக வலைதள பக்கத்தில் அறிமுகப்படுத்தியிருந்தார். தன்னுடைய காதலரோடு எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ஆமாம் நாங்கள் திருமணம் செய்யப் போகிறோம். நாங்கள் காதலிக்க தொடங்கி 15 வருடங்கள் ஆகிவிட்டது என்று கூறியிருந்தார்.
அதற்குப் பிறகு கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் நடிகர் விஜய் கலந்து கொண்டது பெரிய அளவில் பேசப்பட்டது. திரைத்துறையில் மிகவும் குறைவானவர்கள் மட்டுமே கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் கலந்து கொண்டனர். திருமணம் முடிந்த கையுடன் மஞ்சள் தாலியுடன் பேபி ஜான் திரைப்பட பிரமோஷனுக்கு சென்று பலருடைய கவனத்தையும் ஈர்த்தார்.
அதற்கு பிறகு பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட போது என்னை திருமணம் செய்து கொண்டதுதான் ஆண்டனிக்கு சங்கடமாக உள்ளது என்று பேசி இருக்கிறார். அதுதான் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் தன்னுடைய கணவரின் பெருந்தன்மையான செயல்பாடுகள் குறித்து கீர்த்தி சுரேஷ் பேசி இருக்கிறார்.
அதில், திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு, திருமணத்திற்கு பிறகு என்னுடைய வாழ்க்கை மாறியதாக தெரியவில்லை. எல்லாமே முன்னாடி எப்படி இருந்தது அது போல தான் இப்போதும் இருக்கிறது. ஆனால் எங்கே சென்றாலும் புகைப்படங்கள் எடுக்கிறார்கள்.
நிறைய அட்டென்ஷன் கிடைக்கிறது. அது மட்டும் இன்றி இது எனக்கு பழகிவிட்டது. ஆனால் என் கணவருக்கு இது பழக்கம் இல்லை. அதனால் அவருக்கு சங்கடமாக இருக்கிறது. ஆனாலும் இது குறித்து எதுவும் சொல்வதில்லை. எனக்காக எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்கிறார்.
எனது கணவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் கணக்கை பிரைவேட்டாக வைத்திருக்கிறார். தன்னுடைய புகைப்படங்களை வெளியிடுவதில் அவருக்கு விருப்பம் கிடையாது. எனக்காக போஸ் கொடுக்கிறார். மீடியா முன்பு வர கூச்ச பட்டாலும் என்னுடைய கேரியருக்கு அது மிகவும் முக்கியமானது என்று அவர் புரிந்து நடக்கிறார் என கீர்த்தி சுரேஷ் சொல்லி இருக்கிறார்.
அதோடு ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ் சில வருடங்களாகவே பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதற்கு அவருடைய கணவரும் முக்கிய சப்போர்ட்டாக இருந்து வருகிறார்.
காதலித்துக் கொண்டிருக்கும் போது உன்னுடைய கனவு ஆசையை நீ எப்போதும் தொடரலாம் என்று அந்தோணி மிகவும் சப்போர்ட்டாக இருந்திருக்கிறார். அதோடு கீர்த்தி சுரேஷ் பற்றி பல வதந்திகள் வந்தபோது கூட கீர்த்தி சுரேஷ்க்கு சப்போர்ட்டாகத்தான் இருந்தாராம். அதனால் தான் எனக்கு எந்த பிரச்சனைகள் வந்தாலும் அதை பற்றி கண்டுகொள்ளாமல் கடக்க முடிகிறது என்று கீர்த்தி சுரேஷ் பேட்டியில் பேசியிருக்கிறார்.
-
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே -
விஜய்க்கு இனிமே தொல்லைகள் அதிகமாக வரும்.. அவங்க வீட்டுக்குள் நடந்த சம்பவம்! நடிகர் ராமராஜன் ஓபன் -
விஜய்க்கு பெண் இனத்தில் மன்னிப்பே கிடையாது.. பெற்றோர், மனைவிக்கு இப்படியா செய்வாங்க? நிர்மலா பெரியசாமி ஆதங்கம் -
பெரம்பூரில் களமிறங்கும் விஜய்.. ஏசி அலுவலகம் ரெடி.. மார்ச் 28 முதல் பிரச்சாரம் -
“விஜய் முதலில் மன்னிப்பு கேட்கணும்”.. பதில் சொல்ல வக்கு இல்லையா? பொன்ராஜ் கொடுத்த ரிப்ளை! -
டிஜிபி அலுவலகத்துக்கு நேரில் போன விஜய்.. பொன்ராஜ் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு! -
பெண்கள் குறித்த பொன்ராஜ் பேச்சுக்கு விஜய் கடும் கண்டனம்.. திமுகவையும் காட்டமாக விமர்சித்த விஜய்! -
விஜய் ஒரு பச்சைத் தமிழர் தான்.. ஆனால் தவெக உடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை.. வேல்முருகன் அறிவிப்பு! -
உங்க விஜய் நான் வறேன்.. களத்தில் இறங்கிட்டாரு விஜய்! ஒரே நாளில் 5 இடத்தில் பரப்புரை! எங்கே? எப்போது? -
வடக்கில் தொடங்கும் விஜய்.. பெரம்பூரில் மாஸ் காட்ட பலே ப்ளான்! 2026ல் கைகொடுக்குமா? திடீர் கோரிக்கை! -
தலைமை செயலகத்திற்கு திடீர் விசிட் வந்த செங்கோட்டையன்.. தேர்தல் அதிகாரியிடம் மனு -
காங்கிரஸில் இருந்து சஸ்பெண்ட்! அடுத்த நாளே விஜய்யை சந்தித்த பிடி செல்வம்! தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications