பிறந்தநாளில் ரச்சிதா மகாலட்சுமி சொன்ன குட் நியூஸ்.. இனி தனிமை கிடையாதாமே.. குவியும் வாழ்த்துக்கள்
சென்னை: நடிகை ரச்சிதா மகாலட்சுமி தன்னுடைய பிறந்தநாளில் தான் புதியதாக வாங்கியிருக்கும் வீட்டின் வீடியோவை வெளியிட்டு தன்னுடைய தற்போதைய நிலை குறித்து அதில் பகிர்ந்து இருக்கிறார்.
அதே நேரத்தில் புது வீட்டில் கையில் ஒயின் கிளாஸ் வைத்துக் கொண்டு, தன்னுடைய தனிமையை தான் எப்படி போக்குகிறேன் என்று தகவல்கள் கேட்டு ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

நடிகை ரச்சிதா மகாலட்சுமி சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பெரிய அளவில் பிரபலமடைந்திருந்தாலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான "பிரிவோம் சந்திப்போம்" என்ற சீரியல் மூலமாகத்தான் தமிழில் அறிமுகம் ஆகி இருக்கிறார். ஆரம்பத்தில் கன்னடத்தில் ஒரு லோக்கல் சேனலில் தொகுப்பாளராக இருந்த ரச்சிதா முதல்முறையாக தமிழ் சீரியலில் அறிமுகமானதும் அவருக்கு அதிகமான வரவேற்பு கிடைக்க தொடங்கியது.
அதைத் தொடர்ந்து சரவணன் மீனாட்சி சீரியலில் எந்த நடிகையும் செய்யாத சாதனையை இவர் செய்திருந்தார். அதாவது தொடர்ச்சியாக பல சீசன்களில் இவர்தான் மீனாட்சி ஆகவே நடித்துக் கொண்டிருந்தார். எல்லா சீரியல்களிலும் கதாநாயகி தான் மாறிக் கொண்டிருப்பார்கள். ஆனால் கதாநாயகன் ஒருவர்தான் இருப்பார்.
ஆனால் இவருக்கு மட்டும் அதான் பல கதாநாயகர்கள் ஜோடியாக நடித்திருந்தனர். அப்படியான நிலையில் சரவணன் மீனாட்சி சீரியலுக்கு பிறகு நடித்த சீரியல்கள் பெரிய அளவில் ஹிட்டாகவில்லை. சரவணன் மீனாட்சி சீரியலுக்கு பிறகு நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் என்ட்ரி கொடுத்தார். அதற்கு பிறகு அந்த சீரியல் முடிவடைந்த பிறகு கலர்ஸ் தமிழில் சொல்ல மறந்த கதை என்ற சீரியலில் நடித்திருந்தார்.கதை நல்லபடியாக போய்க்கொண்டிருந்தது.
ஆனால் எதிர்பார்க்காத வகையில் திடீரென்று அந்த சீரியல் முடிவடைந்துவிட்டது. ஆனால் அந்த சீரியலில் முடிவு குறித்து ரசிகர்கள் எவ்வளவு ஃபீல் பண்ணினார்களோ அதைவிட ரச்சிதா ரொம்பவே ஃபீல் பண்ணி இருந்தார். அதற்கு பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரச்சிதா கலந்து கொண்டு இருந்த நிலையில் 90 நாட்களுக்கு மேலாக அந்த நிகழ்ச்சியில் இருந்தார்.
இந்த நிலையில் ரச்சிதா தன்னுடைய 33 வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்த ரச்சிதா அதில், உங்களை ரச்சிதா காஸ்டலுக்கு வரவேற்கிறேன். தனிமையின் அமைதி இப்படித்தான் இருக்கும். தனது சொந்த வழியில் 33வது வயதில் அடி எடுத்து வைக்கிறேன். எனது ஒய்னுடன் நானும் எனது சிறிய வீடும்.
எங்க வீடு வாங்கி ஒரு வருடம் ஆகிறது. எனக்கு 33வது ஆண்டு பிறந்தநாள் வாழ்த்துக்களும், என்னுடைய வீட்டின் முதல் வருட பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று தனக்குத்தானே பிறந்தநாள் வாழ்த்து ரச்சிதா தெரிவித்திருக்கிறார். இந்த வீடியோ வைரல் ஆகி வரும் நிலையில் ரசிகர்கள் பலரும் ரச்சிதாவிற்கு வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம












Click it and Unblock the Notifications