சுங்கத்துறையிடம் மறைத்து ரம்பா கொண்டு வந்த பொருள்..! வாயை கொடுத்து வம்பில் சிக்கிட்டாரே!
சென்னை: 90ஸ் சினிமாவில் கதாநாயகியாக வலம் வந்த நடிகை ரம்பா இப்போது சின்னத்திரையில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக கலந்து கொண்டு வருகிறார். சமீபத்தில் அவர் ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார். அது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. விமானத்தில் தான் மறைத்துக் கொண்டு வந்த பொருள் பற்றி அவர் வெளிப்படையாக பேசியது பலரையும் அதிர வைத்திருக்கிறது.
90ஸ் கிட்ஸ்கள் பலருக்கும் பரீட்சையமானவர்தான் நடிகை ரம்பா அதிலும் சமீபத்தில் ட்ரெண்டான அழகிய லைலா பாடல் மூலம் 2கே கிட்ஸ்களுக்கும் தெரிந்திருக்கும். தொடை அழகி என்று இவரை வர்ணித்த இளைஞர்கள் கூட்டம் ஏராளம். ஆனாலும் புகழின் உச்சத்தில் இருக்கும்போது திடீரென்று திருமணம் செய்து குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார்.

சினிமா குறித்து விளக்கம்
திருமணத்திற்கு பிறகு பல வருடங்களாக நடிக்காமல் இருந்த ரம்பா இப்போது மீண்டும் சின்ன திரையில் அடி எடுத்து வைத்திருக்கிறார். சமீபத்தில் இவரிடம் நீங்கள் மீண்டும் திரைப்படத்தில் நடிப்பீர்களா என்று கேட்டபோது இப்போது உள்ள தமிழ் சினிமாவில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுப்பது போன்று எந்த திரைப்படமும் வரவில்லை. நான் பார்த்தவரையில் பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு அப்படி குறிப்பிட்டு சொல்லும் அளவிற்கு எந்த திரைப்படமும் இல்லை.
கணவருக்கு உதவி
கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இல்லாத படங்களில் நான் எப்படி நடிக்க முடியும்? என்னுடைய குழந்தைகள் கூட நான் அப்படிப்பட்ட படங்களில் நடித்தால் சிரிப்பார்கள் என்று பேசி இருந்தார். அதுபோல தன்னுடைய கணவர் தொடங்கும் கிச்சன் ப்ராடக்ட் பிசினஸ்க்கு உதவியாக இருந்து வருகிறார்.

சின்னத்திரையில் அறிமுகம்
சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஜோடி ஆர் யூ ரெடி நிகழ்ச்சியில் இவரும் நடுவராக கலந்து கொண்டு இருக்கிறார். அதுபோல சோசியல் மீடியாவில் பயங்கர ஆக்டிவாக இருக்கும் ரம்பா அடிக்கடி ரீல்ஸ் வீடியோக்கள் மற்றும் தன்னுடைய குடும்ப புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார். சில மாதங்களுக்கும் முன்பு நடிகர் விஜய்யுடன் அவர் எடுத்த புகைப்படம் அதிகளவில் வைரல் ஆனது.
ஹோம் டூர் வீடியோ
அதைத் தொடர்ந்து சமீபத்தில் அவர் ஒரு பேட்டியில் பேசிய விஷயம் பலரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. அதாவது அந்த பேட்டியில் தன்னுடைய சென்னை வீட்டை சுற்றி காட்டி இருக்கிறார். அப்போது அங்கு விதவிதமாக வைக்கப்பட்டிருக்கும் மரம் செடிகளையும் சுற்றி காட்டி இருக்கிறார். அதில் கருவேப்பிலை செடி, செம்பருத்தி, துளசி, மருதாணி என பல செடிகள் வைக்கப்பட்டிருக்கிறது.

மருதாணி செடி ரகசியம்
அங்கு வைக்கப்பட்டிருக்கும் ஒரு மருதாணி செடியை காட்டி இந்த செடி நான் இலங்கையில் இருந்து கொண்டு வந்தது என்று கூறியிருக்கிறார். பொதுவாக விமானத்தில் அடுத்த நாட்டிலிருந்து மரம் செடி கொண்டு வர அனுமதி கிடையாது என்று கூறப்படுகிறது. ஆனால் ரம்பா இலங்கையில் இருந்து மருதாணி செடியை எப்படி கொண்டு வந்திருப்பார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
ரம்பாவின் சர்ச்சை பேச்சு
அதற்கு அந்த வீடியோவில் ரம்பா பதில் சொல்லியிருக்கிறார். அதாவது ஒரு பாட்டிலில் தண்ணீர் நிரப்பி அதில் மருதாணி செடியின் வேரை சிறிதாக வெட்டி எடுத்து போட்டுக் கொண்டு வந்ததாக கூறுகிறார். அந்த மருதாணி இப்போது மரமாக வளர்ந்து நிற்கிறது என்று இவர் பேசி உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

அரண்மனை போன்ற வீடு
இலங்கையை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட ரம்பா கனடாவில் குடும்பத்தோடு செட்டில் ஆகி இருக்கிறார். அப்போது விடுமுறைக்கு தான் சென்னைக்கு வந்து தங்குவார்களாம். விடுமுறையில் சென்னையில் தங்குவதற்காக அரண்மனை போன்ற ஒரு வீட்டை கட்டி இருக்கிறார். அந்த வீட்டிற்கு எதிரே தான் நடிகர் கமல்ஹாசன் வீடு கட்டி கொண்டு இருப்பதாக அந்த பேட்டியில் ரம்பா கூறி இருந்தார்.
-
Siragadikka Aasai serial: ரோகிணிக்கு எதிராக மனோஜ்க்கு கிடைத்த ஐடியா.. விஜயாக்கு சிக்கல்! முத்து எடுத்த முடிவு -
"அப்படியே ஓடிடுங்க.." தங்கம் அவுட், கேஷ் இன்.! ஆனந்த் சீனிவாசன் சொன்ன மேட்டர் இதுதான் -
ஆரோவில் நிலம் 350 கோடி.. ஆளுநர் ஆர்.என்.ரவி, பெண் ஐஏஎஸ் அதிகாரி மீது பறந்த புகார்.. முழு விவரம் -
2025க்கு முன் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கும் ஜாக்பாட் வருமா? பென்சன் வழக்கில் ஐகோர்ட் நோட்டீஸ் -
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
ஒவ்வொன்றும் ஒரு வெடி குண்டுக்கு சமம்.. சங்கீதா கையில் அந்த வீடியோ ஆதாரம்.. வசமாக சிக்கும் விஜய்! -
பல்லாவரம் ஜிஎஸ்டி சாலை ஸ்தம்பித்தது.. என்ன காரணம்.. தாம்பரம் போலீசாருக்கு பறந்த கோரிக்கை -
ஈரானை தாக்க.. இந்திய துறைமுகத்தை பயன்படுத்தியதா அமெரிக்கா? மத்திய அரசு மறுப்பு -
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம்












Click it and Unblock the Notifications