பல பேர் முன்பு அந்த இடத்தில் கை வைத்து.. விசித்திராவை அடுத்து சன் டிவி சீரியல் நடிகை பகிர்ந்த பகீர்
சென்னை: சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை விசித்ரா தனக்கு சினிமா துறையில் நடந்த பாலியல் தொல்லை குறித்து வெளிப்படையாக பேசி இருந்தார்.
அதைத்தொடர்ந்து பல நடிகைகள் தாங்கள் அனுபவித்த அட்ஜஸ்மென்ட் பிரச்சனை குறித்து பேசிக் கொண்டிருக்கின்றனர்.
அந்த வரிசையில் சீரியல் நடிகை ரிஹானா தான் நடிக்க வருவதற்கு முன்பு பஸ்ஸில் ஏற்பட்ட பாலியல் தொல்லை குறித்து பேசி இருக்கிறார்.

பொதுவாக அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை சினிமா துறையில் மட்டுமல்லாமல் பல துறைகளில் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. ஆனால் பலரும் அதை வெளிப்படையாக சொல்வது கிடையாது. இப்போது ஒரு சில பிரபலங்கள் தாங்கள் அனுபவித்த வேதனைகள் குறித்தும் அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனைகள் குறித்தும் பேச துணிந்திருக்கின்றனர்.
அந்த மாதிரி தான் கடந்த வாரத்தில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் நடிகை விசித்திரா 25 வருடத்திற்கு முன்பு தெலுங்கு நடிகர் ஒருவர் தனக்கு கொடுத்த தொந்தரவு, அதற்கு பிறகு தான் பட்ட வேதனை சினிமாவை விட்டு விலக காரணமானது என்பதை பற்றி பேசி இருந்தார். இது சமூக வலைத்தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில் அதைத்தொடர்ந்து ஒரு சில நடிகைகள் தாங்கள் அனுபவித்த பிரச்சினைகள் குறித்து பேசிக் கொண்டிருக்கின்றனர்.
அந்த வகையில் இது குறித்து சீரியல் நடிகை ரிஹானா தன்னுடைய வாழ்க்கையில் அனுபவித்த பிரச்சனை பற்றியும் பேசி இருக்கிறார். ரிஹானா ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மீனாட்சி பொண்ணுங்க என்ற சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதற்கு முன்பு சன் டிவியில் ஆனந்த ராகம் என்ற சீரியல் மூலம் பிரபலமடைந்திருந்தார்.
இப்படி இருக்கையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தனக்கு நடந்த கசப்பான சம்பவத்தை பகிர்ந்து இருக்கிறார். அதில் சினிமாவுக்கு நடிக்க வருவதற்கு முன்பு செவிலியர் ஆக பணிபுரிந்து வந்தேன். அப்போது ஒரு நாள் வேலைக்கு பஸ்ஸில் சென்று கொண்டிருக்கும் போது என் பின்னாடி இருந்த ஒரு நபர் என் பின்பக்கத்தை தடவிக் கொண்டே இருந்தார்.
உடனே நான் உனக்கு தடவ வேண்டுமா எனக்கு நீ ஒரு பக்கமாக தடவுவதால் எரிகிறது இந்த பக்கம் வந்து தடவிக்கொள் என்று கூறினேன். நான் சத்தமாக பேசியதை பேருந்தில் இருந்து அனைவரும் பார்த்தனர். ஆனால் யாருமே அவனை தட்டி கேட்கவில்லை. உடனே நான் நடத்துனரை கூப்பிட்டு எனக்கு நடந்த அனைத்தையும் கூறினேன்.
உடனே அவர் பேருந்தை நிறுத்தி அந்த நயவஞ்சகனை பேருந்தில் இருந்து இறக்கி விட்டார் என்று பேசியிருக்கிறார். இது குறித்து ரசிகர்கள் சினிமாவில் மட்டுமல்ல எல்லா துறையிலும் எல்லா இடங்களிலும் இப்படி பிரச்சனை நடக்கத்தான் செய்கிறது. இது போல பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் தொந்தரவுகள் இருக்கத்தான் செய்கிறது. எல்லோருமே தங்களுக்கு நடப்பதை பொறுத்துக் கொள்ளாமல் தைரியமாக அதை எதிர்க்க வேண்டும்.. அப்போதுதான் இப்படிப்பட்டவர்களுக்கு பயம் வரும் என்றும் கருத்து கூறி வருகிறார்கள்.
-
எல்லாமே பொய்! விஜய்க்கு குழந்தைகள் ரொம்ப பிடிக்கும்! பர்சனல் விஷயத்தை ஓபனாக பேசிய ரம்பா! வதந்திகளுக்கு பதிலடி -
இந்தியன் பாகிஸ்தானில் உளவாளியானால் ஹீரோ.. அவங்க இங்க வந்தா தீவிரவாதியா? துரந்தர் பற்றி அமீர் சர்ச்சை பேச்சு -
மோசமான ப்ரொபோசல்.. மிஸ் ஆன விஜய் படம்.. தலையெழுத்து படி தான் நடக்கும்.. நடிகர் அப்பாஸ் உருக்கம் -
பட விழாவில் ஜனநாயகன் மற்றும் துரந்தர் படத்தை விமர்சித்த வெற்றிமாறன்.. இவ்வளவு ஓபனா பேசிட்டாரே! -
Happy Raj Review: ஹேப்பி ராஜ் கதை இதுதான்.. ஆனால் இப்படி பண்ணலாமா? ப்ளூ சட்டை மாறன் ஓபன் ரிவ்யூ -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு!












Click it and Unblock the Notifications