VIP படம் பண்ண மாட்டேன்னு சொன்னேன்.. ஆனால் தனுஷ் இப்படி பண்ணுவார்னு நினைக்கல- சரண்யா ஓப்பன் அப்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை சரண்யா பொன்வண்ணன் சமீபத்தில் ஒரு பேட்டியில் நான் வேலையில்லா பட்டதாரி படத்தில் அம்மாவாக நடிக்க மாட்டேன் என்று சொன்னேன். ஆனால் தனுஷ் கேட்காமல் என்னை சமாதானப்படுத்தி நடிக்க வைத்து விட்டார் ஆனால் டப்பிங்கில் நான் நடித்திருந்த காட்சிகளை பார்த்து அதிர்ச்சி அடைந்து விட்டேன் என்று பேசி இருக்கிறார்.

முன்னணி நடிகையாக நடித்த பல நடிகைகள் சில வருடங்கள் கழித்து அம்மாவாகவும் அக்காவாகவும் நடித்து வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் பல முன்னணி நடிகர்களின் அம்மாவாக நடிகை சரண்யா பொன்வண்ணன் நடித்து வருகிறார். அதிலும் நடிகர் தனுஷ், உதயநிதி ஸ்டாலின், ஜீவா போன்றவர்களுக்கு சரண்யா பொன்வண்ணன் அம்மாவாக நடித்த பிறகு இவருக்கு கதாநாயகிகளை போலவே அதிகமான வரவேற்பு கிடைக்க தொடங்கி விட்டது.

Actress Saranya Ponvannan about velai illa pattathari film dhanush

இப்போது ரசிகர்களுக்கு கலகலப்பான ஒரு அம்மா கேரக்டர் வேண்டும் என்றால் உடனே கூப்பிடுங்க சரண்யா பொன்வண்ணனை என்று எல்லா இயக்குனர்களும் இவரைத்தான் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த அளவிற்கு அம்மா கேரக்டரில் பலருடைய மனதை கவர்ந்திருக்கிறார். அதிலும் பல பெண்கள் கூட இப்படி ஒரு மாமியார் எங்களுக்கு கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று சொல்கிற அளவிற்கு சரண்யா பொன்வண்ணன் ஜாலியான மாமியாராகவும் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் நாள் வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் அம்மாவாக நடிக்க மாட்டேன் என்று தனுஷிடம் சொன்னேன் என்று சொல்லி இருக்கிறார். அதற்கு காரணம் அந்த படத்தில் எனக்கு நடிப்பதற்கு பெரிய அளவில் காட்சிகள் இல்லை என்று எனக்கு கதை சொல்லும் போது தோன்றியது. அதிலும் பாதியிலே நான் இறந்து போய் விடுவேன் என்று சொன்னாங்க.

அதனால் இந்த படத்தில் நான் நடிச்சா பெருசா தாக்கம் இருக்காது என்று நினைத்திருந்தேன். ஆனால் தனுஷ் தான் விடாமல் என்னை கன்வின்ஸ் செய்தார். உங்களுக்காக நான் ஒரு பாட்டெல்லாம் வச்சிருக்கேன் மேடம் என்று சொல்லி இருந்தார். நான் பாட்டு வச்சிருந்தா சரிதான் எனக்கு அங்க எந்த வேலையுமே இல்லையே என்று சொன்னேன். ஆனாலும் அவர் விடமாட்டேன் என்றார். பிறகு பெரிய அளவில் இன்ட்ரஸ்ட் இல்லாமல் தான் அந்த படத்தில் நடித்தேன்.

படத்தில் நடிக்கும் போது கூட எனக்கு பெரிய அளவில் கஷ்டமே இல்லாமல் தான் நடித்து முடித்தேன். ஆனால் டப்பிங் பேசும் போது தான் நான் நடித்த காட்சிகளை பார்த்து அசந்து போனேன். இப்படியெல்லாம் நாம நடிச்சோமா என்று எனக்கே சந்தேகம் வந்தது. அதற்கு பிறகு அந்த திரைப்படம் வெளியே வந்ததும் என்னுடைய கேரக்டருக்கு பெரிய அளவில் மக்கள் மத்தியில் தாக்கம் இருப்பதை பார்த்து நான் அசந்து போய் விட்டேன் என்று அந்த பேட்டியில் சரண்யா பொன்வண்ணன் பேசியிருக்கிறார்.

அதுபோல வேலையில்லா பட்டதாரி திரைப்படம் வெளியான பிறகு பல இளைஞர்கள் தங்களுடைய அம்மா பாசத்தை வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்களில் காட்டி கொண்டிருப்பதை காண முடிகிறது. அதிலும் அம்மா இறந்து போய்விட்டால் அவர்களுடைய நினைவு வரும் போதெல்லாம் பலருக்கும் இந்த பாடல் தான் ஆறுதலாக இருக்கிறது என்று கூறி வருகிறார்கள். அதுபோல பலர் இந்த பாடல்களை கேட்கும் போது தங்களை மீறி கண்ணீர் வருவதாகவும் உணர்வு பூர்வமாக பேசி இருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+