நடிகர் ஜெய்சங்கருடன் நடிக்காதது ஏன்? பல வருடம் கழித்து உண்மையை உடைத்த நடிகை சரோஜா தேவி
சென்னை: பழம்பெரும் நடிகை சரோஜாதேவி தன்னுடைய திரைப்பட வாழ்க்கை குறித்து சமீபத்தில் மனம் திறந்து பேசி இருக்கிறார்.
இத்தனை வருடங்களாக தன்னுடைய திரைப்பயணம் நீண்டு கொண்டிருக்கும் நிலையில் தன்னோடு நடித்த நடிகர்கள் பற்றி அதில் பேசி இருக்கிறார்.
சரோஜாதேவி ஒரு முறை கூட நடிகர் ஜெய்சங்கர் உடன் ஜோடியாக நடிக்கவில்லை அது குறித்து பதிலையும் கூறி இருக்கிறார்.
தமிழ் ரசிகர்களால் கன்னடத்து பைங்கிளி என்றும் அபிநய சரஸ்வதி என்றும் பாசத்தோடு கொண்டாடப்படும் சரோஜாதேவி 70ஸ், 80ஸ் கிட்ஸ்களில் ஃபேவரட் கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவருக்கு கதாநாயகியாக வாய்ப்பு ஒன்றும் எளிதாக கிடைக்கவில்லையாம்.

இப்போது இருப்பது போன்று அப்போது இணையதள வசதிகளும் போட்டோ சூட் வசதிகளும், சிபாரிசுகளும் கிடையாது அந்த காலகட்டத்தில் கன்னட திரை உலகின் ஜாம்பவான் ஹென்னப்ப பாகவதரின் கண்டுபிடிப்பு தான் சரோஜாதேவி. ஒரு இசை நிகழ்ச்சி ஒன்றில் அவரது குரலை கேட்டு பாடகியாக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறார்.
அவருடைய தோற்றத்தை பார்த்து பிறகு ஹீரோயினாக மாற்றி இருக்கிறார். சிம்ரன் நடித்த ஜோடி திரைப்படத்தில் திரிஷா தலை காட்டியது போல, அப்போது முன்னணி கதாநாயகி ஆக இருந்த வைஜெயந்தி மாலாவுக்கு தோழியாக பார்த்திபன் கனவு என்னும் திரைப்படத்தில் சரோஜாதேவி நடித்திருக்கிறார்.
அது மட்டும் இல்லையாம் தொடக்க காலத்தில் பி.ஆர். பந்தலு இயக்கிய தங்கமலை ரகசியம் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருக்கிறார். தமிழில் அவருக்கு முதல் ஹீரோயின் வாய்ப்பு அந்த அளவிற்கு எளிமையாக கிடைக்கவில்லையாம். தங்கமணி ரகசியம் படத்தில் 250 ரூபாய் சம்பளத்தில் ஆட வந்தவர் தான் பிறகு எம்ஜிஆருக்கு ஜோடியாக ஹீரோயின் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
கிட்டத்தட்ட 200 படங்களுக்கு மேலே நடித்த சரோஜாதேவி, எம்ஜிஆர், சிவாஜி கணேசன் போன்ற நடிகர்களோடு ஜோடியாக நடித்திருக்கிறார். ஆனால் அந்த நேரத்தில் புகழின் உச்சத்தில் இருந்த ஜெய்சங்கர் உடன் மட்டும் அவர் ஜோடியாக நடிக்கவில்லை. அது பலரும் எழுப்பும் கேள்வியாக இருக்கிறது. எதனால் சரோஜாதேவி ஜெய்சங்கர் உடன் மட்டும் ஜோடியாக நடிக்கவில்லை என்று கேள்வி எழுப்பி வந்திருந்தனர். அதற்கு சமீபத்தில் பேட்டி ஒன்றில் சரோஜாதேவி விளக்கம் கொடுத்திருக்கிறார்.

ஜெய்சங்கர் உடன் நடிப்பதற்காக எனக்கு பல வாய்ப்புகள் வந்தது. ஆனால் அந்த நேரத்தில் எனக்கு கால் சீட் கொடுக்க முடியாமல் பிரச்சனை இருந்தது. ஒரே நேரத்தில் நான் பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தேன். அதனால் ஜெய்சங்கர் திரைப்படங்கள் வாய்ப்பு வரும்போது கால்ஷீட் கொடுக்க முடியாத அளவிற்கு நான் பிஸியாக இருந்ததால்தான் நடிக்க முடியவில்லை என்று கூறி இருக்கிறார்.
நடிகர் ஜெய்சங்கர் நடித்த திரைப்படத்தில் நான் ஒரே ஒரு படத்தில் நடித்திருக்கிறேன். ஆனால் அது அவருக்கு ஜோடியாக இல்லை. அவரோடு நான் நடிக்காததற்கு வேறு எந்த காரணமும் இல்லை. நடிப்பதற்காக நானும் முயற்சி செய்தேன். ஆனால் எனக்கு கால் சீட் பிரச்சனை மற்றும் அடுத்தடுத்த படங்கள் காரணமாக அந்த ஒரு வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது என்று கூறியிருக்கிறார்.
-
“ ஹோட்டல் சாப்பாடு நடிகையைப் போல”.. சிவகுமார் சொன்ன உவமை.. பின்னணியில் இப்படி ஒரு சம்பவம் இருக்கா? -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
நடிகைகளை ஹோட்டல் சாப்பாடோடு ஒப்பிட்ட சிவகுமார்.. வரிந்து கட்டிய ப்ளூ சட்டை மாறன்! ஜோதிகாவை வைத்து செக்! -
சிம்பு பற்றி நடிகை யோகலட்சுமி போட்ட ஒரே போஸ்ட்.. இப்போ சோசியல் மீடியாவே அதிருது.. தரமான சம்பவம் -
“அந்த பாவம் நிம்மதியா வாழ விடாது…” பெத்தவங்களை தவிக்க விடாதீங்க.. உருக்கமாக பேசிய சிவகுமார்! பின்னணி சம்பவம் -
கென் கருணாஸ்க்கு வாழ்வில் மறக்க முடியாத சம்பவம் செய்த சிம்பு.. யூத் பட நடிகை நெகிழ்ச்சி போஸ்ட் -
Youth Box Office: டாப் ஹீரோக்களை மிரள வைத்த கென் கருணாஸ்.. யூத் படத்தின் ஐந்து நாள் வசூல் இத்தனை கோடியாம்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications