நடிகை ஷோபாவை அழித்த பாலு மகேந்திரா! மூடுபனி ஷூட்டிங்கில் நடந்தது என்ன? சீரியல் நடிகை பேட்டி
சென்னை: நடிகை ஷோபாவின் இறப்பு குறித்து பிரபல சீரியல் நடிகை சாந்தி வில்லியம்ஸ் பல விஷயங்களை தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ஷோபா தற்கொலை செய்து கொண்ட செய்தி அறிந்ததும் எனக்கு உயிரே போய்விட்டது என்றும் சாந்தி வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.

சீரியல்களில் நடித்து வருபவர் சாந்தி வில்லியம்ஸ். இவர் தனது 12 ஆவது வயதில் வியத்நாம் வீடு என்ற திரைப்படத்தின் மூலம் நடிக்க வந்தார். இதைத் தொடர்ந்து மெட்டி ஒலி சீரியலில் சரோவின் மாமியாராக நடித்திருந்தார்.
அவரை அத்தனை பாடுபடுத்தும் கேரக்டரில் நடித்தார். அது போல் தென்றல் படத்திலும் தமிழின் அம்மாவாக நடித்திருந்தார். இவர் தமிழ், மலையாள படங்களிலும் நடித்துள்ளார். இவர் ஒளிப்பதிவாளர் வில்லியம்ஸை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 4 குழந்தைகள். வில்லியம்ஸ் பார்ப்பதற்கு கரடு முரடாக இருப்பார்.
எனினும் சாந்தியை தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டியே திருமணம் செய்து கொண்டார். ஆனாலும் வில்லியம்ஸிற்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்ததாகவும் சாந்தி பல பேட்டிகளில் தெரிவித்திருந்தார். கடைசியில் 2005 ஆம் ஆண்டு அவர் இறந்ததாகவும் தெரிவித்தார். மேலும் தான் சேர்த்து வைத்த சொத்துகளை அழித்தார். இதனால் குழந்தைகளுடன் நடுத்தெருவுக்கு வந்து பின்னர் மீண்டு வந்தேன் என்றும் கண்ணீர் மல்க தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இவர் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் பல விஷயங்களை பேசியுள்ளார். அப்போது நடிகை ஷோபா தற்கொலை குறித்தும், பாலு மகேந்திரா குறித்தும் சாந்தி பல்வேறு கருத்துகளை பேசியுள்ளார். அவர் கூறுகையில் நானும் ஷோபாவும் தோழிகள். இருவரும் சிறு வயதில் நடிக்கும் போது ஷூட்டிங் முடிந்ததும் விளையாடுவோம்.
என் கணவர் வில்லியம்ஸுக்கு ஷோபாவின் குடும்பத்தினர் என்றால் மிகவும் பிடிக்கும். நானும் அவர்களுக்கு ஒரு மகளாகவே பார்க்கப்பட்டேன். இந்த நிலையில் ஒரு நாள் மூடுபனி படத்தின் ஷூட்டிங்கிற்கு சோபா வந்திருந்தார். அப்போது அவர் மிகவும் சோர்வாக இருந்தார். சோகமாகவும் இருந்தார். நான் ஏன் இப்படி இருக்கிறாய் என கேட்டதற்கு, அதெல்லாம் ஒன்றும் இல்லை என கூறிவிட்டார்.
பிறகு மூடுபனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டார். இதை கேள்விப்பட்டதும் எனக்கு உயிரே போய்விட்டது. என் கணவர்தான் கதவை உடைத்து ஆட்களை மேலே ஏற்றி தூக்கு போட்ட சேலையிலிருந்து அவரது சடலத்தை இறக்கினார். பாலு மகேந்திராதான் ஷோபாவின் வாழ்க்கையை அழித்துவிட்டார். அவரை கண்டாலே எனக்கு பிடிக்காது, நான் முகத்தை திருப்பிக் கொண்டுதான் செல்வேன். இவ்வாறு சாந்தி வில்லயம்ஸ் தெரிவித்தார்.
-
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
கோவை ஈஷா யோகா மையத்தில் எஸ்.பி.வேலுமணியுடன் பேசியது என்ன? உடைத்து பேசிய பிரேமலதா












Click it and Unblock the Notifications