சீதா என்னுடைய அக்கா தான்.. ஆனால் எங்கேயும் அதை சொல்ல மாட்டேன்! தெய்வமகள் சீரியல் நடிகை ஓபன்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியல் மூலம் பலருக்கும் பிரபலமான நடிகை சுஹாசினி பேட்டி ஒன்றில் கலந்து கொண்டிருக்கிறார். அதில் நடிகை சீதா தன்னுடைய அக்கா தான், ஆனால் நான் வாய்ப்புக்காக அக்கா பெயரை எந்த இடத்திலும் பயன்படுத்தியது கிடையாது என்றும் கூறியிருக்கிறார். அது பற்றி பார்க்கலாம்.
சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியல் 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் சீரியல்களில் ஒன்று. இந்த சீரியல் கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக ஒளிபரப்பாகி வந்தது. இந்த சீரியலில் நடிகை வாணி போஜன் தான் கதாநாயகியாக சத்யா கேரக்டரில் நடித்து வந்தார்.

அவருக்கு ஜோடியாக நடிகர் கிருஷ்ணா, பிரகாஷ் கேரக்டரில் நடித்து வந்தார். இவர்கள் இருவருடைய ஜோடி பொருத்தம் பெரிய அளவில் பேசப்பட்டது. இருவரும் நிஜத்தில் கணவன் மனைவியா? என்று கூட பலர் கேட்டு வந்தனர். ஆனால் கிருஷ்ணா நடிகை சாயா சிங்கை காதலித்து திருமணம் செய்திருந்தார்.
அதுபோல இந்த சீரியலுக்கு பிறகு தான் வாணி போஜனுக்கு திரைப்பட வாய்ப்புகளும் கிடைத்தது. அதுபோல இந்த சீரியலில் நடித்த பிரபலங்கள் ஒரு சிலர் இப்போது எந்த சீரியலிலும் காணப்படவில்லை. அதில் ஒருவர் தான் நடிகை சுஹாசினி. இவர் தெய்வமகள் சீரியலில் வினோதினி கேரக்டரில் நடித்திருந்தார். அதாவது கதாநாயகன் பிரகாஷின் அண்ணியின் தங்கையாக சுஹாசினி நடித்திருந்தார்.
இந்த சீரியலில் இவரை பார்த்து ரசிகர்கள் திட்டாமல் இருந்திருக்க மாட்டார்கள். ஆனால் கடைசியில் இவர் மனம் திருந்திய பிறகு இவரை பாராட்டாத ரசிகர்களும் இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு தன்னுடைய அக்கா மீது அளவுகடந்த பாசம் வைத்திருந்த வினோதினி கடைசியில் மனமாறி இருப்பார்.

ஆனால் இவர் சமீபத்தில் எந்த சீரியலிலும் காணவில்லை. இந்த நிலையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டிருக்கிறார். அதில் நான் நடிகையாக மட்டுமல்ல எனக்கு பாடுவது ரொம்ப பிடிக்கும் என்று பாடி காட்டி இருக்கிறார். அதோடு நடிகை சீதா தன்னுடைய அக்கா தான் என்று கூறி இருக்கிறார். அக்கா என்றால் தன்னுடைய அப்பாவும் சீதாவின் அப்பாவும் கூட பிறந்த அண்ணன் தம்பி.
என்னுடைய பெரியப்பாவின் மகள் தான் சீதா ஆனால் நான் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று முயற்சி செய்தபோது என்னுடைய அக்கா பெயரை எந்த இடத்திலும் நான் பயன்படுத்தியது கிடையாது. அக்கா ஆரம்பத்திலேயே சினிமாவில் நடிக்க வந்துட்டாங்க. அவர்களுடைய பெயரை எந்த இடத்திலுமே பயன்படுத்தக் கூடாது என்று நான் முடிவாக இருந்தேன்.
நம்முடைய திறமையால் நான் ஜெயிக்க வேண்டும் என்று நினைத்தேன். அதுபோல எனக்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்தது. தெய்வமகள் சீரியலில் நான் நடித்துக் கொண்டிருக்கும் போதெல்லாம் தான் வெளியே போகும்போது பலர் என்னை பாராட்டி இருக்கிறார்கள்.

அதுபோல அந்த நேரத்தில் நான் மேடைகளிலும் பாடல் பாடி கொண்டிருப்பேன். அதனால் ரொம்பவும் பிசியாக இருந்தேன் என்றும் சுஹாசினி பேசியிருக்கிறார். இவருடைய காமெடி கலந்த வில்லத்தனத்தை ரசிகர்கள் கண்டிப்பாக மிஸ் பண்ணுவார்கள். சீக்கிரமாக இவர் சீரியலில் வந்தால் நன்றாக இருக்கும் என்பது அவருடைய எதிர்பார்ப்பு. இவர் மீண்டும் சீரியலில் ரீ என்ட்ரி கொடுக்க நம்முடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications