Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாந்தோப்பில் கல்லை விட்டெறிந்து மாங்காய்களை பறித்த நடிகை சுஜிதா.. அய்யய்யோ ஓனர் பார்த்தா என்னவாகும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை சுஜிதா மாந்தோப்பில் கல்லை வீசி மாம்பழங்களை பறிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

பூவிழி வாசலிலே படத்தில் லாலா லாலா என வாய் பேச முடியாத குழந்தையாக ஆண் வேடத்தில் நடித்தவர் நடிகை சுஜிதா. 41 நாள் குழந்தையாக இருந்த போது கே.ஆர்.விஜயாவின் பேத்தியாக அப்பாஸ் என்ற படத்தில் நடித்திருந்தார்.

Actress Sujithas mango farm house in Chennais outskirt

அது போல் முந்தானை முடிச்சு படத்தில் பாக்கியராஜின் குழந்தையாக நடித்திருப்பார். 1990 கள் வரை குழந்தை நட்சத்திரமாகவே சுஜிதா நடித்திருந்தார். அவர் 2021 ஆம் ஆண்டு நடித்த படம் ஐந்து உணர்வுகள். அது போல் சுஜிதா டப்பிங் ஆர்டிஸ்ட் ஆவார்.

இவர் மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனனுக்கு வாய்ஸ் கொடுத்திருந்தார். தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வருகிறார். தனம் கேரக்டர் அத்தனை ஆப்ட்டாக பொருந்தியுள்ளது. மேலும் கதை கேளு கதை கேளு எனும் யூடியூப் சேனலையும் தொடங்கியுள்ளார்.

அதில் சூட்டிங் குறித்த அப்டேட்டுகள், மேக்கப் போடுவது உள்ளிட்டவைகளை ஒளிபரப்புவார். மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் வீடு எப்படி இருக்கிறது, புதிய வீடு எது என்பதையெல்லாம் தாண்டி அந்த சீரியலுக்காக தான் எங்கு புடவை வாங்குகிறேன் உள்ளிட்டவை குறித்து விவாதிப்பார். அந்த கடைகளுக்கே நேரடியாக சென்று புடவை பிரித்து காட்டுவதுடன் அதன் ரேட்டையும் சொல்லிவிடுவார்.

இதனால் அவருடைய சேனலுக்கு நிறைய பேர் ரசிகர்கள் உள்ளனர். அழகான மாந்தோப்புக்கு சென்று மாங்காய்களை பறிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். சுஜிதா தனது மாந்தோப்புக்கு சென்றார். அங்கு அவருக்கு சொந்தமாக 5 மாமரங்கள் உள்ளன. ரூமானி, கிளி மூக்கு மாங்காய், பங்கனப்பள்ளி மாம்பழம் என சில மரங்களை வளர்த்து வருகிறார்.

Actress Sujithas mango farm house in Chennais outskirt

சுஜிதாவுக்கு மிகவும் பிடித்த பழம் முக்கனிகளில் ஒன்றான மாம்பழம்தானாம். நிறைய மாம்பழங்களை பறித்துக் கொண்டு சென்னை திரும்பியுள்ளார். ஒவ்வொரு வீடியோவிலும் சுஜிதா ஒரு குட்டி ஸ்டோரியை சொல்லி முடிப்பது வழக்கம். அந்த வகையில் இந்த வீடியோவில் பேராசை பெருநஷ்டம் என்ற கதையை சொல்லியுள்ளார். மேலும் தகுதிக்கு மீறி ஆசைப்படக் கூடாது என்றும் அது நமது காலையே வாரி விட்டுவிடும் என்றும் தெரிவித்திருந்தார். 4 அல்லது 5 மரங்கள்தான் இருக்கிறது. இது மாந்தோப்பா என சிலர் நினைக்கலாம். என்னை பொருத்தவரை இதுவும் மாந்தோப்புதான் என்றார்.

அது போல் மாங்காய் சாப்பிட மார்க்கெட்டுக்குதான் போக வேண்டும் என்றில்லை. மாந்தோப்புக்கும் செல்லலாம். இனி எங்கள் வீட்டில் மாங்காய் குழம்பு, மாங்காய் ஊறுகாய், மாங்காய் பச்சடிதான் என்கிறார். கல்லை விட்டு எறிந்து எறிந்து மாங்காய்களை சுஜிதா பறித்தார். விஜயகாந்த் சார் வீட்டு எதிரே இருந்த போது பிரேமலதா மேடம் அவர்கள் வீட்டு தோட்டத்தில் காய்த்த மாம்பழங்களை எனக்கு கொடுப்பார். சாப்பிட ருசியாக இருக்கும் என்ற தகவலையும் சுஜிதா தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+