என் அக்கா கல்பனா வாழ்க்கையில் நடந்த விஷயம்.. நான் அதை மறக்கல.. எமோஷனலாக ஊர்வசி சொன்ன வார்த்தை

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை ஊர்வசி தன்னுடைய அக்கா கல்பனா குறித்து சில விஷயங்களை பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வரும் நிலையில் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அந்த வீடியோவில் ஊர்வசி தன்னுடைய அக்கா கல்பனாவிற்க்கு தன்னைவிட அதிகமான திறமை இருந்தும் அதற்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று வேதனைப்பட்டு இருக்கிறார்.

சினிமாவில் ஒரு சில நடிகைகள் ஒரே குடும்பத்தில் இருந்து நடிக்க வந்திருக்கிறார்கள். ஆனால் அதில் ஒருவருக்கு கிடைத்த அங்கீகாரமும் பிரபலமும் இன்னொருவருக்கு கிடைப்பது கிடையாது. அதுபோல நடிகை ராதா -அம்பிகா, நக்மா- ஜோதிகா என்று பல நடிகைகள் அக்கா தங்கச்சியாக இருந்தாலும் சினிமாவில் தொடர்ச்சியாக ஜெயிக்க முடியாமல் இருந்து வருகிறார்கள்.

Television

அதுபோலத்தான் நடிகை ஊர்வசியும் அவருடைய அக்கா கல்பனாவின் வாழ்க்கையும் இருந்து இருக்கிறது. இது குறித்து ஊர்வசி சமீபத்தில் அளித்த பேட்டியில் என்னுடைய அக்கா கல்பனாவிற்கு பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் அதில் நான்தான் நடித்தேன். அதற்காக என்னுடைய அக்கா கோபப்பட்டது கிடையாது. என்னுடைய வளர்ச்சியை பார்த்து அவர் ரொம்பவே சந்தோஷம்தான் படுவார்.

என்னுடைய அக்காவிற்கு அதிகமான திறமைகள் இருந்தாலும் மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் மரியாதை கொடுக்கவில்லை. அக்கா தான் என்னைவிட திறமைசாலி. அவருக்கு பல விருதுகள் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் கிடைக்கவில்லை அதுபோல அக்காவோடு நான் ஏதாவது நிகழ்ச்சிகளுக்கு சென்று விட்டால் அக்காவை விட எனக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து விடுவார்கள்.

இதனால் நான் பல பட விழாக்களில் கலந்து கொள்ளாமல் இருந்தேன். என்னுடைய அக்காவின் மறைவிற்குப் பிறகு அவருக்கு பல விருதுகள் கொடுத்தார்கள். அதை நான் வாங்கவில்லை என்று அது பேட்டியில் எமோஷனலாக ஊர்வசி பேசி இருந்தார். ஊர்வசிக்கு கல்பனா, கலரஞ்சனி என்ற இரண்டு சகோதரிகள் இருப்பது பலருக்கும் தெரிந்திருக்கும். இவர்கள் இருவருமே சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்தவர்கள்.

அதில் கல்பனா தமிழ், மலையாளம் மொழிகளில் அதிகமான படங்களில் நடித்திருந்தார். ஊர்வசி போலவே காமெடி சென்டிமென்ட் என்று எல்லா விதத்திலும் கல்பனா கலக்கி இருப்பார் ஆனாலும் அவரால் முன்னணி நடிகையாக இடம் பிடிக்க முடியவில்லை அதுபோல உடல்நிலை சரியில்லாமல் கல்பனா இறந்து விட்டார்.

அதுபோல புகழின் உச்சத்தில் இருந்த ஊர்வசி சொந்த வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்தித்து இருக்கிறார். நடிகை ஊர்வசி முதலில் நடிகர் மனோஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருந்த நிலையில் எட்டு வருடங்களுக்குள் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர். பிறகு ஊர்வசி சிவப்பிரசாத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு ஒரு மகள் இருக்கிறார்.

முந்தானை முடிச்சு திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான ஊர்வசி இப்ப வரைக்கும் பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ஜே பேபி, அப்பத்தா போன்ற படங்கள் இப்போதைய தலைமுறையாலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+