Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எந்த அம்மாவிற்கும் என் நிலைமை வரக்கூடாது.. எல்லோருக்கும் குறை இருக்கும்.. மகன் பற்றி வனிதா எமோஷனல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை வனிதா விஜயகுமார் சமீபத்தில் பிரஸ் மீட்டிங்கில் தன்னுடைய மகன் குறித்து எமோஷனலாக பேசி இருக்கிறார். அதில் தன்னுடைய முதல் திருமண வாழ்க்கை மற்றும் தன்னுடைய மகன் விஜய் ஸ்ரீஹரி பற்றி சில விஷயங்களை வனிதா பகிர்ந்து இருக்கிறார். அப்போது எந்த அம்மாவிற்கு என்னுடைய நிலைமை வரக்கூடாது என்று வனிதா பீல் பண்ணி பேசியிருக்கிறார். இதற்கு இணையத்தில் பலரும் அவருக்கு கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

நடிகர் விஜயகுமாரின் வீட்டில் அவருடைய மகன், மகள்கள் என்று பலரும் சினிமா துறையில் இருக்கின்றனர். அந்த வகையில் அவருடைய பேரன் அதாவது விஜயகுமாரின் மகள் வனிதாவின் மகன் விஜய் ஸ்ரீஹரியும் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகம் ஆகி இருக்கிறார். பிரபு சாலமன் இயக்கும் மாம்போ என்ற திரைப்படத்தில் விஜய் ஸ்ரீஹரி கதாநாயகனாக அறிமுகம் ஆகி இருக்கிறார்.

Television Vanitha Vijayakumar

இந்த நிலையில் தன்னுடைய மகன் பற்றி வனிதா சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். வனிதா விஜயகுமார் சந்திரலேகா திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமாகி இருந்தாலும் அந்த நேரத்தில் ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்தார். அப்போது 2000 ஆண்டில் ஆகாஷ் என்பவரை கல்யாணம் செய்திருந்த நிலையில் ஆகாஷ்க்கும் வனிதாவிற்கும் விஜய் ஸ்ரீஹரி என்ற ஒரு மகன் பிறந்திருந்தார்.

ஆனால் ஆகாஷோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வனிதா அவரை விவாகரத்து செய்து விட்டார். அதற்கு பிறகு இரண்டு திருமணம் செய்து இருந்தாலும் அதுவும் விவகாரத்தில் தான் முடித்து இருந்தது. அதே நேரத்தில் விஜய் ஸ்ரீஹரி தன்னுடைய தந்தையோடு தான் வாழ்ந்து வருகிறார். சில வருடங்களுக்கு முன்பு விஜய் ஸ்ரீ ஹரியின் instagram பக்கத்தில் ரசிகர் ஒருவர் நீங்கள் வனிதாவின் மகன் தானே என்று கேட்ட கேள்விக்கு கூட இல்லை நான் ஆகாஷின் மகன் என்று பதில் கொடுத்திருந்தார்.

வனிதாவோடு விஜய் ஸ்ரீஹரி பேசிக் கொள்வது கிடையாது. இந்த நிலையில் விஜய் ஸ்ரீஹரி திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இது பற்றி வனிதா பேசுகையில் என்னுடைய மகன் இப்போது கதாநாயகனாக மாறி இருக்கிறார். நானும் இப்பவும் ஹீரோயினியாக நடித்துக் கொண்டிருக்கிறேன். என்னுடைய மகனும் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த பாக்கியம் எல்லாம் என்னுடைய அம்மாவிற்கு கூட கிடைக்கவில்லை.

அதே நேரத்தில் என்னுடைய மனதில் பெரிய குறை இருக்குது. எல்லாருடைய வாழ்க்கையிலும் ஒவ்வொரு விதத்தில் ஒரு குறை இருக்கு. அதுபோல்தான் என்னுடைய வாழ்க்கையிலும் என்னுடைய மகனை நினைத்து எனக்கு வருத்தமாக இருக்கிறது. எனக்கு முதல் திருமணம் 18 வயதிலேயே நடைபெற்று விட்டது. அந்த 18 வயதில் இறுதியில் எனக்கு மகனும் பிறந்து விட்டான். அந்த திருமண வாழ்க்கை நான் மெச்சூரிட்டி இல்லாமல் எடுத்த முடிவாக இருந்தாலும் அதில் பிறந்த என்னுடைய மகன் பற்றி நான் எப்போதும் பெருமையாக தான் சொல்வேன்.

அந்த திருமண வாழ்க்கையில் என்னுடைய மகன் பிறந்ததால் தான் இப்போது அவர் இவ்வளவு பெரிய நடிகராக மாறி இருக்கிறார். நான் தாய்லாந்தில் இருக்கும் போது தான் என்னுடைய மகனின் திரைப்படத்திற்கான சூட்டிங் தாய்லாந்தில் நடந்தது. அப்போது அவர் சிங்கத்துடன் நடிக்கிறார் என்று செய்தி கேட்டு நான் ரொம்பவே பயந்து போனேன். என்னுடைய மகனின் கண்கள் என்னைப் போலவே இருக்கும்.

என்னுடைய மகன் பார்ப்பதற்கு அருண் விஜய் அண்ணாவை போலவும் என்னை போலவும் தான் இருப்பார். அது எனக்கு சந்தோஷம்தான். இப்போதைக்கு நானும் என்னுடைய மகனும் பக்கத்தில் இருந்தும் கூட தூரமாக இருக்கிறோம். இந்த மாதிரி நிலைமை எந்த அம்மாவுக்கும் வரக்கூடாது என்று அந்த பேட்டியில் வனிதா எமோஷனலாக பேசியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+