எங்க அப்பா, அண்ணா கூட அதை பண்ணலாம்.. ஆனால் நான் பண்ண மாட்டேன்! இப்போ மாறிட்டேன்! வனிதா எமோஷனல்
சென்னை: நடிகை வனிதா விஜயகுமார் பேட்டி ஒன்றில் தன்னுடைய பக்கத்தில் தன்னுடைய தந்தையோ அல்லது அருண் விஜய் அண்ணாவையோ நீங்கள் உட்கார வைத்தால் அவர்கள் எழுந்து போய் விடுவார்கள். ஆனால் நான் அப்படியெல்லாம் பண்ண மாட்டேன், ஏனென்றால் நான் இப்போ ரொம்ப புரிந்து கொண்டேன் என்று அந்த பேட்டியில் சில விஷயங்களை பேசி இருக்கிறார். இது இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.
நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா விஜயகுமாருக்கு அவருடைய குடும்பத்தினரோடு ஏற்பட்ட குடும்ப பிரச்சனை பலருக்கும் தெரிந்ததுதான். விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மூத்த மகள்தான் வனிதா விஜயகுமார். மஞ்சுளா உயிரோடு இருக்கும்போது தன்னுடைய அம்மா சொத்துக்களை தன்னுடைய அப்பா ஏமாற்றி வாங்கி விட்டார் என்று வனிதா சில வருடங்களுக்கு முன்பு புகார் கொடுத்தது பெரிய அளவில் பேசப்பட்டது.

அதற்கு பிறகு வனிதா தன்னுடைய குடும்பத்தை பிரிந்து தனியாகத்தான் வாழ்ந்து வருகிறார். விஜயகுமாரின் மற்ற மகள்கள் மற்றும் மகன் எல்லோரும் ஒற்றுமையாக இருக்கின்றனர். வனிதா அவர்களுடைய குடும்ப பங்க்ஷனில் எதிலும் கலந்து கொள்ளவில்லை. தன்னுடைய மகளோடு தனியாக வாழ்ந்து வந்தாலும் இப்போது பல திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் வனிதா கதாநாயகியாக நடிக்கும் திரைப்படத்திற்கான பூஜை போடப்பட்டிருக்கிறது. அந்த திரைப்படத்திற்கான சூட்டிங் வெளிநாட்டில் நடந்து கொண்டிருப்பதாக வனிதா கூறி இருக்கிறார். அதோடு அவருடைய மூத்த மகன் விஜய் ஸ்ரீஹரியும் கதாநாயகனாக திரைப்படத்தில் கமிட் ஆகி இருக்கிறார். அந்த திரைப்படத்திற்கான சூட்டிங் நடந்து கொண்டிருக்கிறது.

வனிதாவின் மகன் அவருடைய தாத்தா விஜயகுமாரின் கண்காணிப்பில் அவருடைய அப்பா ஆகாஷ் தான் வளர்த்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் நடிகை வனிதா ஒரு திரைப்படத்திற்கான பிரஸ் மீட்டிங்கில் கலந்து கொண்ட போது அவரோடு நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனும் அதே மேடையில் அமர்ந்திருந்தார். லட்சுமி ராமகிருஷ்ணன் ஏற்கனவே வனிதா பீட்டர் பாலை திருமணம் செய்த போது அதிகமாக விமர்சித்து இருந்தார்.
அதனால் வனிதா மற்றும் லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு இடையே பெரிய அளவில் சண்டை நடந்தது. இருவரும் லைவில் சண்டை போட்டது பார்ப்பவர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. ஆனால் தற்போது திரைப்படத்திற்கான ப்ரமோஷன் நிகழ்ச்சியில் பக்கத்து பக்கத்தில் இருவரும் அமர்ந்திருந்தது பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த நிலையில் இது குறித்து வனிதா ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார்.

அதில் அவர் பேசுகையில் நான் என்னை வேண்டாம் என்று யார் சொன்னாலும் அவர்களை பற்றி கவலைப்பட போவது கிடையாது. நான் ஒரு இடத்தில் இருக்கிறேன் என்றால் என் பக்கத்தில் என்னுடைய அப்பா விஜயகுமாரோ அல்லது அருண் விஜய் அண்ணாவையோ உட்கார வைத்தால் அவர்கள் வேண்டுமென்றால் என் பக்கத்தில் உட்கார மாட்டேன் என்று எழுந்து போகலாம். என்னுடைய தங்கை, அக்கா கூட அப்படி செய்தால் அதற்கு ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
ஆனால் நான் அப்படி செய்ய மாட்டேன். ஏனென்றால் நான் எதார்த்தத்தை புரிந்து கொண்டேன். நான் எப்போதுமே ஒருவர் மீது கோபம் இருந்தால் அது என்னுடைய மனதில் இருந்து அவர் மீது கோபத்தை காட்ட மாட்டேன். அன்னைக்கு அந்த நேரத்தில் என்ன தோன்றுகிறதோ அதை அப்படியே பேசி விடுவேன் அவ்வளவுதான். அதுபோல என்னுடைய அப்பா குடும்பத்தினர் அன்னைக்கு அந்த காலகட்டத்தில் பண்ணுனது தவறு. அதை நான் நேரடியாகவே சொல்லி விட்டேன்.
இன்னைக்கு அவங்களுக்கும் எனக்கும் சம்பந்தம் கிடையாது. இன்னைக்கு அவங்க என் வாழ்க்கைக்கு வந்து எந்த பிரச்சனையும் பண்ணல. அவங்க கிட்ட எனக்கு கேட்க எந்த கேள்வியும் கிடையாது. அதனால அவங்கள பார்த்தால் டிப்ளமேட்டிக்கா தான் நடந்துக்குவேன். அன்னைக்கு ஒரு நாள் அந்த மாதிரி பேசுனியே என்று மனதில் வைத்து நான் எதுவும் நடந்துக்க மாட்டேன்.
ஆனால் ஒரு சில மனுசங்க எதையோ நெனச்சு அந்த சிந்தனையில் இருக்கிறாங்க தெரியுமா...! அவங்களை எல்லாம் நாம் மதிக்கிறது கிடையாது என்று பதிலடி கொடுத்திருக்கிறார். இந்த பேட்டி இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications