கல்யாணம் ஆகி 13 வருடம் ஆகிவிட்டது.. ஆனால் இன்று.. நாயகி சீரியல் நடிகை வித்யா வெளியிட்ட போஸ்ட்
சென்னை: நடிகை வித்யா பிரதீப் தனக்கு திருமணம் ஆகி 13 வருடம் ஆகிவிட்டது என்று தன்னுடைய திருமண நாளில் தன்னுடைய கணவர் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கும் நிலையில் பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். இதுவரைக்கும் இவருக்கு திருமணமானதே தெரியாத ரசிகர்கள் இவரின் போஸ்ட் பார்த்து அதிர்ச்சியாகி இருக்கிறார்கள். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
சில நடிகைகள் சின்னத்திரையில் இருந்து வெள்ளிதிரையில் காலடி எடுத்து வைத்து இருக்கிறார்கள். ஆனால் ஒரு சில நடிகைகள் வெள்ளி திறையில் நன்றாக நடித்து கலக்கி விட்டு வயதான பிறகு சின்னத்திரைக்கு வருகிறார்கள். ஆனால் வித்யா பிரதீப் வெள்ளித்திறையில் நடித்துக் கொண்டிருக்கும் போது சின்னத்திரையில் முக்கிய நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். அதிலும் அவர் டாக்டர் மற்றும் ஆராய்ச்சியாளராகவும் முன்னேறிக் கொண்டிருக்கிறார்.

வித்யா கேரளாவில் பிறந்திருந்தாலும் இவருடைய தந்தை ஒரு மிலிட்டரி மேன் என்பதால் பல இடங்களுக்கு சென்று வந்திருக்கிறார். இதனால் அவர் மலையாளம் மட்டுமல்ல தமிழும் மிக அழகாகவே பேசுகிறார். இவருடைய நடிப்பை முதலில் இவருடைய வீட்டில் ஒத்துக் கொள்ளவில்லை. அதனால் கல்லூரி முடிக்கும் வரை மாடலிங் மற்றும் நடிக்க கூடாது என்று வீட்டில் கண்டிப்பாக சொல்லி இருக்கிறார்கள்.
பிறகு காலேஜ் படித்து முடித்ததும் தான் இவர் ஆசையாக மாடலிங்கில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். டாக்டராகவும் ஆராய்ச்சியாளராகவும் பிசியாக இருக்கும் நேரத்திலும் மாடல்ங்கில் விதவிதமான புகைப்படங்களை எடுத்து குவித்திருக்கிறார். அதிலும் சினிமாவில் நடிப்பதற்கு முன்பே வித்யா 200க்கும் மேற்பட்ட நகை விளம்பரங்களிலும், புடவை விளம்பரங்களிலும் விதவிதமாக நடித்திருக்கிறார்.

அதிலிருந்து தான் இவருக்கு சினிமா பட வாய்ப்புகள் கிடைத்து இருக்கிறது. முதல் முதலில் ஜெய்டன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனாலும் அந்த படம் அவருக்கு பெரிய அளவில் பிரபலத்தை கொடுக்கவில்லை. அதற்குப் பிறகு சைவம் படத்தில் இவர் ஒரு குட்டி பாப்பாவுக்கு அம்மாவாக நடித்திருந்தார். அந்த படத்தில் இவருடைய நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதற்கு பிறகு பல படங்களில் நடித்திருக்கிறார்.
அதிலும் அருண் விஜய், கிருஷ்ணா, ஜெய், சமுத்திரக்கனி போன்ற பல ஹீரோக்களுடன் இவர் நடித்திருக்கிறார். அந்த நேரத்தில் தான் இவருக்கு சன் டிவியில் ஒளிபரப்பான நாயகி சீரியலிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியலில் இவர் ஆனந்தி கேரக்டரில் நடித்திருந்தார். ஆனால் சீரியலில் அதிகமான நாட்கள் இவர் நடிக்கவில்லை. இவர் அந்த சீரியலில் இருந்து விலகியதும் அந்த நேரத்தில் அதிகமாக பேசப்பட்டது. இந்த நிலையில் நாயகி சீரியலுக்கு பிறகும் வழக்கம் போல சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

ஆனால் இவருக்கு திருமணமான செய்தி ரசிகர்கள் பலருக்கும் தெரிந்திருக்காது. ஆனால் அவர் இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்று வெளியிட்டு இருக்கிறார். அதில் 13 வருடங்களுக்கு முன்பே மைக்கேல் பிரதீப் என்பவரை திருமணம் செய்துள்ளேன். அவர் அமெரிக்காவில் போட்டோகிராபராக பணியாற்றி வருகிறார் என்று குறிப்பிட்டு இருக்கும் வித்யா அவருடைய கணவர் குறித்தும் அந்த பதிவில் பகிர்ந்திருக்கிறார்.
அதில், இந்த நேரத்தில் என் வாழ்க்கையில் நீங்கள் கொண்டு வந்த அழகையும் அர்த்தத்தையும் படம் பிடிக்க வார்த்தைகள் போதாது. எண்ணற்ற நினைவுகளை என்றென்றும் போற்றும் வகையில் உருவாக்கியுள்ளோம். நீங்கள் எப்போதும் எனக்காக இருந்திருப்பீர்கள். என்னை உங்கள் முன்னுரிமை ஆக்கி என்னை மிகவும் முழுமையாக உணர செய்தீர்கள்.

உங்கள் நிபந்தனை அற்ற அன்பு என்னை அளவு கடந்த பணக்காரராக உணர வைக்கிறது. நீங்கள் என்னை ஒரு விலை உயர்ந்த குழந்தையை போல கவனித்து கொள்கிறீர்கள். கடவுளே இந்த 13 அழகான வருடங்களுக்கும் இன்னும் பல வருடங்களுக்கும் நன்றி.. உன்னுடன் என் வாழ்க்கை அழகாக இருக்கிறது என்று தன்னுடைய கணவர் குறித்து வித்யா பகிர்ந்து இருந்த நிலையில் அவருக்கு பல பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.













Click it and Unblock the Notifications