Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வெறுப்பேற்றினாரா? தனுஷூக்கு மறுமணமா? சிம்பு மாதிரி குணம் கிடைக்காது: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மிருணாள் தாகூரும் தனுஷும் டேட்டிங் செய்து வருவதாக தகவல்கள் கசிந்து கொண்டிருக்கின்றன. ஆனால், இதனை அவர்கள் மறுக்கவும் இல்லை.. தனுஷிற்கு 42 வயது, மிருணாளுக்கு 33 வயதாகிறது. அதாவது, 9 வயது வித்தியாசம் உள்ளதாக சொல்கிறார்கள்... தனுஷின் 2 சகோதரிகளையும் மிருணாள் அவர்களது இன்ஸ்டாவில் ஃபாலோ செய்து வருகிறார். இதனால், தனுஷ் குடும்பத்துடனும் மிருணாள் நெருக்கமாகிவிட்டதால், அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள போவதாக தகவல்கள் வலம் வருகின்றன. இந்நிலையில், டைரக்டர் நந்தவனம் நந்தகுமார் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.

KingWoods TV என்ற சேனலுக்கு பேட்டி தந்துள்ள டைரக்டர் நந்தவனம் நந்தகுமார், :"ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தை காதலித்து திருமணம் செய்து, 2 குழந்தைகளையும் பெற்று வாழ்ந்து சலித்தவர் தனுஷ், இப்போது மிருணள் தாகூரையும் ஐஸ்வர்யாவையும் பக்கத்தில் பக்கத்தில் நிற்க வைத்தால் ஒரே உயரம், ஒரே உருவத்தில் இருப்பார்கள்,. இதுக்கு ஐஸ்வர்யாவுடனேயே தனுஷ் வாழ்ந்திருக்கலாமே?

Television Aishwarya Rajinikanth Simbu

தனுஷூக்கு திருமணமா

மிருணாள் - தனுஷ் இவர்களுக்குள் திருமணம் நடப்பதாக, மீடியாவில்தான் பரபரப்பட்டு வருகிறது. ஆனால், இதுவரை சம்பந்தப்பட்ட 2 பேருமே எதுவுமே பேசவில்லை.. அமைதியாக இருக்கிறார்கள் என்பதற்காக அதை ஆமோதிப்பதாக அர்த்தம் இல்லை..

மிருணாள் என்றில்லை தனுஷ் யாரையுமே திருமணம் செய்து கொள்ள மாட்டார்.. திருமணம் என்பது சொத்தில் பங்கு தருவது போல என்பதால், திருமணத்தையெல்லாம் லேசில் செய்துவிட மாட்டார்கள்.

ஐஸ்வர்யாவை திருமணம் செய்ததுகூட, கோடிக்கணக்கான சொத்து, தமக்கு வரும் என்ற நோக்கம்தான் என்று அந்த காலகட்டத்தில் சொல்லப்பட்டது. எனவே, லாப நோக்கம் இல்லையென்றால் பெரும்பாலும் யாரும் யாரையும் திருமணம் செய்ய மாட்டார்கள்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மறுமணம்?

அதேபோல, ஐஸ்வர்யாவை வெறுப்பேற்றுவதற்காகவே இப்படி மிருணாள் தாகூருடன் தனுஷ் சுற்றுகிறார் என்று சொல்வதையும் ஏற்க முடியாது. வெறுப்பேற்றும் செயலை எந்த ஆணும் செய்ய மாட்டார்கள்.. பெண்கள்தான் வெறுப்பேற்றும் செயலை செய்வார்கள். அதற்காக மறுதிருமணத்தையும் செய்வார்கள். ஆனால், ஐஸ்வர்யா மறுமணம் செய்து கொள்ள மாட்டார் என்றே தெரிகிறது.

சபாஷ் ரஜினிகாந்த்

எப்போதுமே ஒருவரிடம் பழக்கம் என்பது வேறு, ஒழுக்கம் என்பது வேறு.. ஒருவர் ஆயிரம் பேருடன் பழகினாலும், ஒழுக்கம் தனியாக தெரியும்.. ரஜினிகாந்த் மீது ஆயிரம் விமர்சனம் வைத்தாலும், அவரிடம் நேர்மையான சில விஷயங்கள் இருக்கின்றன..

இல்லாவிட்டால், இவ்வளவு வயதுக்க, இத்தனை வருடத்துக்கு, இவ்வளவு உயரத்துக்கு, யாராலும் நிற்க முடியாது.. ஒழுக்கத்தையும், பழக்கத்தையும் மக்கள் போட்டுக் குழப்பிக் கொள்கிறார்கள்..

சிம்பு தந்த வாழ்க்கை

சிம்புவை ஐஸ்வர்யா ரஜினிகாந்த், திருமணம் செய்வதாக இருந்ததாக அன்றைய காலத்தில் சலசலப்பு இருந்தது.. அப்போது சிம்பு, தனுஷ் இருவரிடமும் ஆரம்பத்திலிருந்தே ஒரு போட்டி நிலவியது.. அதிலும், காதல் கொண்டேன், மன்மதன் இரு படங்களுக்கும் அன்று போட்டியே நடந்தது..

சிம்புவை வெறுப்பேற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காகவே தனுஷை ஐஸ்வர்யா திருமணம் செய்தார்.. அந்த நேரத்தில் தனுஷ் பெரிய நடிகரும் கிடையாது.. எனவே, முழுக்க முழுக்க சிம்புவால், தனுஷூக்கு தரப்பட்ட வாழ்க்கை இதுவாகும்.. இது சிம்பு தந்த வாழ்க்கை.. தனிப்பட்ட முறையில் சிம்புவிடம் பழகினால், உலகிலேயே இனிய நண்பன் என்று சொல்லலாம்.. அவ்வளவு அன்பானவர்" என்றெல்லாம் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+