Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தாமரையை ஏற்றிவிடும் அக்ஷரா...அறிவுரை கூறும் ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அக்ஷரா ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் பின்னாலிருந்து ஏற்றிவிடும் செயலை செய்து வருகிறார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

தனக்கு பிடிக்காதவர்களை பற்றி புறம் பேசுவதில் அக்ஷராவிற்க்கு ஆனந்தம் அதிகம் என்று ஒரு சிலர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

தாமரையிடம் அக்ஷரா பல்பு வாங்கியதை பார்த்து ரசிகர்கள் கலாய்த்து தள்ளி வருகின்றனர்.

வழக்கமானதாக தான் இருக்கிறது

வழக்கமானதாக தான் இருக்கிறது

பிக் பாஸ் சீசன் களில் வழக்கமாக ஒவ்வொரு சீசனிலும் நடக்கும் செயல்கள் தான் தற்போதைய சீசனிலும் நடந்து கொண்டு வருகிறது. இதில் எந்த ஒரு மாற்றமும் இல்லாவிட்டாலும், ஆரம்பத்தில் இந்த சீசன் வேற மாதிரி இருக்கப்போகிறது என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர். வழக்கத்திறகு மாறாக இந்த சீசனின் அதிகமான பெண் போட்டியாளர்கள் அறிமுகமாகி இருந்தது ஒரு காரணமாக இருந்தாலும், போட்டியாளர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருந்து வந்தனர். இவர்களைப் பார்த்ததும் இந்த சீசன் செமையாக களைகட்டும் என்று நினைத்தவர்களுக்கு ஒரு சில வாரங்களில் போட்டியாளர்களின் சுயரூபம் தெரிய ஆரம்பித்துவிட்டது.

பல செயல்கள் வைரலாகி இருக்கிறது

பல செயல்கள் வைரலாகி இருக்கிறது

என்னதான் பலர் இதற்கு முந்தைய சீசன் களை பார்த்து நன்றாக பிரிப்பர் ஆகி இந்த சீசனுக்கு வந்திருந்தாலும் ஒரு சில இடங்களில் தங்களுடைய உண்மையான முகத்தை காட்டி வாழ்கின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு மாடல் அழகியாக அறிமுகமாகியிருக்கும் அக்ஷராவும் ஆரம்பத்திலிருந்து இப்ப வரைக்கும் பல இடங்களில் தன்னுடைய ரசிகர்களை கவர்வதற்காக இவர் செய்யும் செயல்கள் பல வைரலாகி வருகிறது. இவர் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று உள்ளார். அதே நிலையில் இவருக்கும் நெகட்டிவ் கமெண்ட்கள் வந்து கொண்டுதான் இருக்கிறது.

பற்ற வைக்கிறாரா அக்ஷரா

பற்ற வைக்கிறாரா அக்ஷரா

ஆரம்பத்தில் சத்தமாகப் பேசுவது எனக்கு பிடிக்காது என்று கூறிவந்த அக்ஷரா தற்போது ஒரு சில நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டு இவர் பேசியதை பார்த்ததும் ரசிகர்கள் கலாய்த்து வந்தனர். இந்த நிலையில் தற்போது தன்னால் பிரியங்காவிற்கு முன்னாடி பேச முடியாததால் அவர் பிரியங்காவை தைரியமாக எதிர்க்கும் தாமரையிடம் பிரியங்காவை பற்றி சில நேரங்களில் பற்றவைத்து வருகிறார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஒரு சில நேரங்களில் தாமரையும், அக்ஷரா உசுப்பேற்றியதும் காண்டாகி விடுகிறார் என்றும் பலர் கவனித்து வருகிறார்கள்.

சூழ்ச்சி எடுபடவில்லையோ

சூழ்ச்சி எடுபடவில்லையோ

ஆனால் ஒரு சில நேரங்களில் யார் சொன்னாலும் தாமரை அதை பற்றி கண்டு கொள்ளாமல் தன்னுடைய கருத்தில் கவனமாக இருந்து வருகிறார். அது நேற்று இரவு கூட நடந்திருக்கிறது. அதில் ஏற்கனவே தாமரை மற்றும் பிரியங்கா இருவரும் காரசாரமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது தாமரை பிரியங்காவை கண்ட மேனிக்கு திட்டி தன்னுடைய மனதில் இருப்பதை எல்லாம் கொட்டி விட்டார். ஆனாலும் அடுத்த நிமிடம் அனைவரும் சாப்பிடும்போது தாமரைக்கு பிரியங்கா அழுத்தமாக முத்தம் கொடுத்து சென்றிருந்தார். இதை பார்த்ததும் ரசிகர்கள் மட்டுமல்லாமல் அக்ஷராவும் முகம் சுளித்து இருந்தார். அதைப்பற்றி நேற்றைய எபிசோட்டில் தாமரை இடம் அக்ஷரா பற்ற வைத்திருக்கிறார். ஆனால் அதற்கு ஒரே வார்த்தையில் தாமரை நான் செய்த சமையல் நன்றாக இருந்தது என்று தான் அப்படி பண்ணினார். என்று பிரியங்காவிற்கு சப்போர்ட்டாக பேசிவிட்டார். இதனால் அக்ஷரா அப்படியே அமைதியாக மாறிவிட்டார். இதைப்பார்த்த ரசிகர்கள் பங்கமாக கலாய்த்து வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+