அந்தரங்க வீடியோ கால் செய்ய லட்சத்தில் டீலிங்..தனக்கு வந்த மெசேஜ் பற்றி அம்பலப்படுத்திய சீரியல் நடிகை
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஆனந்த ராகம் சீரியல் நடிகை ரீஹானா தனக்கு வந்த மெசேஜ் குறித்து பேசி இருக்கிறார்.
அந்தரங்க வீடியோ கால் செய்வதற்கு லட்சக்கணக்காக குறிப்பிட்ட ஒரு நபர் நடிகை ரீஹானாவிடம் பேரம் பேசி இருக்கிறார்.
சமூக வலைதளத்தில் நடிகை ரீஹானா கூறிய தகவலைக் கேட்டு ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

சன் டிவி சீரியல் நடிகை
சன் டிவியில் கடந்த வருடம் தொடங்கிய ஆனந்த ராகம் சீரியல் தற்போது ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலில் ஒரு நடிகையாக நடித்துவரும் ரீஹானா தனக்கு நடந்த மோசமான ஒரு நிகழ்வு பற்றி பேசி இருக்கிறார். நடிகை ரீஹானா பொதுவாகவே சில சர்ச்சையான விஷயங்களை மிகவும் வெளிப்படையாக பேசுபவர். இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் பல தடுக்கிடும் உண்மைகளை கூறியிருக்கிறார்.

சர்ச்சையான பேச்சு
அவர் கூறியது என்னவென்றால், நடிகை ரேகா நாயருக்கு பிறகு என்னைத்தான் சர்ச்சைக்குரிய நடிகையாக பார்க்கின்றனர். அவர் என்னுடைய தோழிதான், நானும் அவரும் எதார்த்தமான விஷயங்களை தான் பேசுவோம். திரையின் முன்பு அதிகமாக நடிப்பதினால் வாழ்க்கையில் உண்மையாக இருக்கலாம் என்று தோன்றியது. அதனால் தான் நாங்கள் எதார்த்தமாக பேசினோம். அதனை சர்ச்சையாக மாற்றுவார்கள் என்று தெரியாது. நாங்கள் சில நேர்காணல்களில் கூறியதை வைத்து எங்களை குறைவாக பேசுகிறார்கள்.

யாரையும் நம்ப முடியாது
நான் நல்லவரா கெட்டவரா என்று எனக்கு தெரியும். மற்றவர்களுக்கு தெரியாது கதாநாயகனாக சினிமாவில் நடிக்கிறார்கள் என்றால் அவர்கள் உண்மையில் கதாநாயகன் கிடையாது. அதேபோல தான் வில்லன்களுக்கு நிஜ வாழ்க்கையில் வில்லனாக கிடையாது. ஆண்கள் சிலர் உணர்வுபூர்வமாக பேசி மயக்குவார்கள். சிலர் பணம் கொடுத்து கூப்பிடுவார்கள் அப்படி அந்த விஷயத்தில் ஏமாற்றப்படும் பெண்களின் முடிவு அவர்களுடையது என்று கூறி இருக்கிறார்.

தப்பான ரசிகர்கள்
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு சீரியல் நடிகர் அர்னாவ் மற்றும் திவ்யா ஸ்ரீதர் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் அர்னாவிற்கு எதிராக பல்வேறு தகவல்களை சமூக வலைதளத்தில் தைரியமாக ரீஹானா கூறி இருந்தார். அது பற்றியும் தற்போது அவர் அந்த வீடியோவில் பேசியிருக்கிறார். அதில் என்னை பலர் கூறி குறை கூறினார்கள். அவருடைய ரசிகர்கள் என்ற பெயரில் சிலர் என்னிடம் பல கொச்சையான வார்த்தைகளை கொண்டு பேசினார்கள். நீ மட்டும் நல்லவளா? நீ மட்டும் பத்தினியா? என்று அவர்கள் எனக்கு பிச்சை போடுவது போல பேசுகின்றனர். ரசிகர் என்று கூறிக்கொண்டு கீர்த்தரமாக பேசுகிறார்கள் என்று கூறி இருக்கிறார்.

ஆபாச மெசேஜ்
மேலும் பெண்களுக்கு சோசியல் மீடியாக்களில் ஏற்படும் பிரச்சனை குறித்தும் பேசிக்கொண்டிருந்தார். அப்போது தாங்கள் நடிகைகள் என்றும் அதனால் ப்ரொபைல் பிக்சரில் தங்களுடைய போட்டோவை வைக்கிறோம் ஆனால் பெண்கள் அப்படி செய்ய வேண்டாம். சோசியல் மீடியாக்கள் மூலம் பல விதமான சர்ச்சையான விஷயங்கள் வந்து கொண்டிருக்கிறது என்று அவர் தனக்கு நடந்த விஷயம் ஒன்றையும் கூறியிருக்கிறார். அதில் தனக்கு ஒருவரிடம் இருந்து மெசேஜ் வந்ததாகவும், அந்த மெசேஜில் நிர்வாண வீடியோ எடுத்து அனுப்பு என்றும் சில பாகங்களை வீடியோ எடுத்து அனுப்பு என்றும் சில கேவலமான செயல்களையும் செய்து அனுப்பு என்றும் அப்படி செய்தால் 15 லட்சம் ரூபாய் தருகிறேன். அக்கவுண்ட் நம்பரை அனுப்பு என்று அந்த நபர் தெரிவித்தாராம். இந்நிலையில் இந்த நபரை சிக்க வைக்கும் பொருட்டு உங்களை சந்திக்க வேண்டும் என்றும் ரீஹானா கூறினாராம். ஆனால் அந்த நபர் இப்போ வரைக்கும் என்னிடம் சிக்கவில்லை என்று ரீஹானா கூறி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications