மாத்திரையை...குளிகையை....மாத்தி வச்சு... என்ன பிழைப்பு!
சென்னை:சன் டிவியின் நாயகி சீரியலில் ஆனந்தி, கண்மணி ரெண்டு பேரும் நெருங்கிய தோழிகள். அதற்கேற்ற மாதிரியே இருவருக்கும் சோதனைகளும் வந்துகொண்டே இருக்கின்றன.
ஆனந்தி புருஷன் திரு முருகன் மேல அனன்யாவுக்கு ஆசை.கண்மணி புருஷன் செழியன் மேல சுகாசினிக்கு ஆசை.
இதனால் ரெண்டு பேரும் எவ்வளவு கஷ்டப்படறாங்க என்பது கதையின் ஒரு பகுதி. இதுக்கு நடுவுல பெரும் பிரச்சனையாக சொத்து பிரச்சனை.

திரு எனக்குத்தான்
சின்ன வயசிலிருந்தே திருவும், அனன்யாவும் குடும்ப நண்பர்களாக பழகியவர்கள். ஆனால், அனன்யா தன்னை காதலிப்பது அமெரிக்காவுக்கு படிக்க சென்றுவிட்ட திருவுக்கு தெரியாது. அனன்யாவின் காதலை திருவால் ஏத்துக்கவும் முடியலை.

வேலைக்காரி ஆனந்தியை
வீட்டில் வேலை செய்துகொண்டு இருக்கும் ஆனந்தியை திருவுக்கு பிடிச்சு போயி, ஏகப்பட்ட கெடுபிடிகள்.... அனன்யாவுக்கும், திருவுக்கு கல்யாண ஏற்பாடு..இப்படி போயி, கடைசி நேரத்தில் ஆனந்தியை கை பிடிக்கிறான் திரு.

திரு மறுபடியும்
திருமுருகன் மண்டையில் பந்து பட்டு,பழைய நினைவுகளை மறந்து போகிறான் .குறிப்பாக ஆனந்தியை கல்யாணம் செய்துகொண்டது அறவே நினைவில்லை. இப்போது இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள். ஆனந்தி கர்ப்பமாக இருக்க. இதைக்கூட கணவனிடம் சொல்ல முடியாத நிலையில் ஆனந்தி..

அடாவடி அனன்யா
இந்த சமயத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திகிட்டு, ஆனந்தின் கர்ப்பத்துக்கு யார் காரணம்னு கேளு திரு. அவ ஒரு நடத்தை கெட்டவன்னு திருவை நம்ப வச்சு..இப்போ திருவுக்கும் அனன்யாவுக்கும் கல்யாணம் நடக்க போகுது. திருவை கல்யாணம் செய்துக்க அனன்யா செய்யும் திருட்டுத்தனம்...அடாவடி எல்லாம் அசர வைக்குது.

தானாக திருவுக்கு
திருவுக்கு மறந்து போனவைகள் தானாக நினைவுக்கு வருவதற்கு முன்பாக நீங்களாக எதையும் செய்யாதீர்கள் என்று அமெரிக்க டாக்டர்கள் சொல்லியிருப்பதால் ,திருவுக்கும் ஆனந்திக்கும் கல்யாணம் ஆன விஷயத்தை ஆனந்தியாலும், திருவின் அம்மாவாலும் சொல்ல முடியாமல் போகிறது.

அடாவடி அனன்யா
அனன்யா மாத்திரைகளை மாத்தி வைப்பதும், ஆனந்தி அதை திரும்பவும் மாத்தி வைப்பதும், சித்தர் குளிகை வாங்கி வந்தால்,அதை திருவின் அப்பா மாத்தி வைப்பதும் என்று திருவின் பழைய நினைவுகள் திரும்பாதபடி பார்த்துக்கறாங்க.
இதை முறியடிப்பதே ஆனந்திக்கும் ,திருவின் அம்மாவுக்கும் வேலையாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications