அனிதாவுக்கா இப்படி நடக்கணும்.. ரசிகர்கள், பிக் பாஸ் பிரபலங்கள் வேதனை
சென்னை: அனிதா சம்பத் வீட்டில் நடந்துள்ள துயரம் அனைவரையும் சோகத்தில் மூழ்கடித்துள்ளது .அனிதா சம்பத்தை கடுமையாக விமர்சித்து வந்தவர்கள் கூட இந்த சோகச் செய்தியால் கலங்கிப் போயுள்ளனர்.
Recommended Video

அனிதா சம்பத் தனது தந்தை மீதும், குடும்பத்தினர் மீதும் ரொம்ப பாசம் வைத்திருப்பவர் .பிக் பாஸ் வீட்டிலேயே அதை பலமுறை எடுத்துக் காட்டியுமிருந்தார்.
அடிக்கடி அழுதது அவர்தான் .அதுவும் குடும்பத்தினரை நினைத்து, தன்னை வளர்த்து ஆளாக்க அப்பா பட்ட கஷ்டம் ஆகியவற்றை சொல்லிச் சொல்லி அழுதவர் அவர்தான் .அப்படிப்பட்டவர் அப்பாவை இழந்திருப்பது மிகப் பெரிய வேதனைதான்.

தந்தை சம்பத்
அனிதாவின் கணவர் பிரபாதான் இந்த சோகச் செய்தியை உலகுக்கு சொன்னவர் .அவர் சொன்ன அடுத்த நிமிடமே அனைவரும் அதிர்ந்து போய் விட்டனர் .அனிதாவுக்கா இப்படி ஒரு சோகம் .அதுவும் இப்போதுதான் சந்தோஷமாக பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்தார். வந்த நேரம் பார்த்து இப்படியாக நடக்க வேண்டும் என்று அனைவருமே சோகமாகியுள்ளனர்.

உயிரையே வைத்திருப்பார்
அனிதா சம்பத் உண்மையிலேயே அழகான தமிழ் உச்சரிப்பாளர், செய்தி வாசிப்பாளர், கொடுத்த வேலையை திறம்பட செய்க் கூடியவர். எந்த அளவுக்கு அழுகிறாரோ அதே அளவுக்கு உற்சாகமாகவும் இருக்கக் கூடியவர் . கணவர் மீதும் நிறைய பாசம் வைத்திருப்பவர் .குடும்பத்தினர் மீது உயிரையே வைத்திருப்பவர். அவருக்கு இவ்வளவு பெரிய சோகம் சரியல்ல என்பதுதான் அனைவரின் கவலையாக இருக்கிறது.

லாஸ்லியாவைப் போலவே
இப்படித்தான் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த லாஸ்லியாவின் தந்தையும் சமீபத்தில் மரணமடைந்தார். அந்த சோகமே இன்னும் தீராத நிலையில் அனிதாவுக்கு இப்படி நடந்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியும் சோகமும் அடைய வைத்துள்ளது. லாஸ்லியா போலவே அனிதாவும் ஒரு நியூஸ் ரீடர்தான். இப்படி அடுத்தடுத்து இரு பிரபல பிக் பாஸ் பிரபலங்களின் தந்தையர் மரணமடைந்திருப்பது இந்த வருடத்தின் இன்னொரு மிகப் பெரிய சோகம்தான்.

மோசமான வருஷம்
அது என்னவோ தெரியலே. இந்த வருடமே ரொம்ப மோசமாகத்தான் இருக்கிறது. பலரை கண்ணீரில் தவிக்க விட்டு விட்டது. இப்படி ஒறு வருஷத்தப் பார்க்கவா இத்தனை காலம் உயிரோடு இருந்தோம் என்று பலரையும் கண்ணீர் விட வைத்து விட்டது. அன்று லாஸ்லியா அழுதார்.. இன்று அனிதா சோகக் கடலில் மூழ்கியுள்ளார் .நிச்சயம் யாருமே இப்படி ஒரு சோகத்தை எதிர்பார்க்கவில்லை.

கடவுள் இப்படியா செய்வார்
அனிதாவின் தந்தை மரணச் செய்தியால் ரசிகர்களும் சோகமாகியுள்ளனர். பலரும் அவருத இன்ஸ்டா பக்கத்தில் இரங்கல் தெரிவித்து போஸ்ட் போட்டு வருகின்றனர். என்னதான் அனிதாவை பலர் விமர்சித்தாலும் இந்த துயரமான நேரத்தில் அனைவருமே ஒன்றிணைந்து அவருக்கு ஆறுதல் சொல்லி வருகின்றனர் . மிகவும் இளகிய மனம் படைத்தவரான அனிதா விரைவில் அதிலிரு்ந்து மீண்டு பலம் பெற வேண்டும் என்று பலரும் சொல்லி வருகின்றனர்.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications