100 ரூபாய்க்காக கெஞ்சி இருக்கிறேன்..கூட இருப்பவர்களின் அலட்சியம்.. மனம் திறந்த அனிதா சம்பத்
சென்னை: செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத் தன்னுடைய ஆரம்பகால கஷ்டங்கள் குறித்து சமீபத்தில் பேட்டியில் பேசியிருக்கிறார்.
ஆரம்ப காலத்தில் தனக்கு பஸ்சுக்கு கூட பல நேரங்களில் காசு இல்லாமல் தான் தவித்ததாக கூறி இருக்கிறார்.

ஒரு நூறு ரூபாய் பணம் கேட்டு கூட இருப்பவர்களிடம் கெஞ்சி இருக்கிறேன் என்று பல தகவல்களையும் அனிதா சம்பத் மனம் திறந்து பேசி இருக்கிறார்.
செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக பலருக்கும் ஃபேவரைட் ஆக ஆகியிருந்தார். தற்போது பல திரைப்படங்களிலும் முக்கியமான கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார். அது மட்டுமல்லாமல் சின்ன திரையிலும் பல சீரியல்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
அனிதா சம்பத் சில மாதங்களுக்கு முன்புதான் சொந்தமாக வீடு ஒன்றைக் கட்டி அதை குறித்து உருக்கமான பதிவுகளையும் வெளியிட்டு இருந்தார். அனிதா சம்பத்தின் அப்பாவான எழுத்தாளர் சம்பத் அனிதா பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் இருந்து வெளியான சில நாட்களில் கோவிலுக்கு சென்று விட்டு திரும்பும் வழியில் தான் மரணம் அடைந்திருந்தார். அது அனிதா சம்பத்தை பெரிய அளவில் பாதிப்பு இருந்தது.
இந்த நிலையில் தன்னுடைய ஆரம்ப காலம் குறித்து கிடைக்கும் இடங்களில் எல்லாம் அனிதா சம்பத்து பேசி வருகிறார். இதைக் குறித்து ஒரு சிலர் கலாய்த்துக் கொண்டு இருந்தாலும் பலருக்கும் இது மோட்டிவேஷனல் ஆகவும் இருந்து வருகிறது. ஆரம்ப காலத்தில் இவ்வளவு கஷ்டங்களையும் போராட்டங்களையும் தாண்டி இன்று தன்னுடைய வாழ்க்கையில் அடியெடுத்து மகிழ்ச்சியாக பயணிக்கிறார் என்றார் அதற்கு தைரியம் அதிகமாக தான் இருக்க வேண்டும் என்று பாராட்டியும் வருகின்றனர்.
அந்த வகையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் நான் செய்தி வாசிப்பாளராக பணிபுரியும் நேரத்தில் என்னிடம் பஸ்க்கு கூட காசு இல்லாமல் பல நேரம் நான் தவித்து இருக்கிறேன். அந்த நேரத்தில் திடீர் செலவு என்று ஏதாவது வந்துவிட்டால் ஒரு 100 ரூபாய் கூட கையில் இல்லாமல் நான் தவித்து இருக்கிறேன். அப்போது கூட இருப்பவர்களிடம் பணத்துக்காக கெஞ்சி இருக்கிறேன் ஆனால் பலர் என்னை கண்டுகொள்ளாமல் விட்டிருக்கிறார்கள். அவமானப்படுத்தி இருக்கிறார்கள் என்று பல வருத்தத்தை பகிர்ந்து இருக்கிறார்.
மேலும் வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு பெரிய டிவி சேனலில் வேலை பார்க்கிறார். செய்தி வாசிப்பாளர்களாக இருக்கிறார் செய்தி வாசிக்கும் போது சிரித்த முகமாகவும் எந்த கவலையும் இல்லாமல் தானே இருக்கிறார் இவருக்கு என்ன பிரச்சனை இருக்கும் என்று நினைப்பார்கள். ஆனால் நமக்கு இருப்பது நமக்கு தான் தெரியும் என்று தன்னுடைய வேதனையை தெரிவித்திருக்கும் வீடியோ தற்போது தற்போது ரசிகர்கள் அதிகமான கருத்துக்களை குவித்து வருகிறார்கள்.
-
இதுவும் கடந்து போகும்.. பாடலாசிரியர் கார்த்திக் நேத்தாவின் மறுபக்கம்.. நீயா நானாவில் கண் கலங்கிய அம்மா -
நீயா நானாவில் யாமினி சொன்ன காதல் கதை.. கண்கலங்கி நின்ற கோபி நாத்.. கடைசியில் சொன்ன ‘நச்’ அட்வைஸ் -
சித்திரை திருநாளில் கிடைத்த பரிசு.. இரண்டு வருடம் கழித்து பிறந்த குழந்தை.. பிரதீப் ஆண்டனி நெகிழ்ச்சி பதிவு -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
விஜய்யின் தவெக கட்சியில் இணைந்த பிக் பாஸ் தினேஷ்.. அதற்கு அவர் சொன்ன காரணம் தான் ட்விஸ்ட் -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ்












Click it and Unblock the Notifications