100 ரூபாய்க்காக கெஞ்சி இருக்கிறேன்..கூட இருப்பவர்களின் அலட்சியம்.. மனம் திறந்த அனிதா சம்பத்
சென்னை: செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத் தன்னுடைய ஆரம்பகால கஷ்டங்கள் குறித்து சமீபத்தில் பேட்டியில் பேசியிருக்கிறார்.
ஆரம்ப காலத்தில் தனக்கு பஸ்சுக்கு கூட பல நேரங்களில் காசு இல்லாமல் தான் தவித்ததாக கூறி இருக்கிறார்.

ஒரு நூறு ரூபாய் பணம் கேட்டு கூட இருப்பவர்களிடம் கெஞ்சி இருக்கிறேன் என்று பல தகவல்களையும் அனிதா சம்பத் மனம் திறந்து பேசி இருக்கிறார்.
செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக பலருக்கும் ஃபேவரைட் ஆக ஆகியிருந்தார். தற்போது பல திரைப்படங்களிலும் முக்கியமான கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார். அது மட்டுமல்லாமல் சின்ன திரையிலும் பல சீரியல்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
அனிதா சம்பத் சில மாதங்களுக்கு முன்புதான் சொந்தமாக வீடு ஒன்றைக் கட்டி அதை குறித்து உருக்கமான பதிவுகளையும் வெளியிட்டு இருந்தார். அனிதா சம்பத்தின் அப்பாவான எழுத்தாளர் சம்பத் அனிதா பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் இருந்து வெளியான சில நாட்களில் கோவிலுக்கு சென்று விட்டு திரும்பும் வழியில் தான் மரணம் அடைந்திருந்தார். அது அனிதா சம்பத்தை பெரிய அளவில் பாதிப்பு இருந்தது.
இந்த நிலையில் தன்னுடைய ஆரம்ப காலம் குறித்து கிடைக்கும் இடங்களில் எல்லாம் அனிதா சம்பத்து பேசி வருகிறார். இதைக் குறித்து ஒரு சிலர் கலாய்த்துக் கொண்டு இருந்தாலும் பலருக்கும் இது மோட்டிவேஷனல் ஆகவும் இருந்து வருகிறது. ஆரம்ப காலத்தில் இவ்வளவு கஷ்டங்களையும் போராட்டங்களையும் தாண்டி இன்று தன்னுடைய வாழ்க்கையில் அடியெடுத்து மகிழ்ச்சியாக பயணிக்கிறார் என்றார் அதற்கு தைரியம் அதிகமாக தான் இருக்க வேண்டும் என்று பாராட்டியும் வருகின்றனர்.
அந்த வகையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் நான் செய்தி வாசிப்பாளராக பணிபுரியும் நேரத்தில் என்னிடம் பஸ்க்கு கூட காசு இல்லாமல் பல நேரம் நான் தவித்து இருக்கிறேன். அந்த நேரத்தில் திடீர் செலவு என்று ஏதாவது வந்துவிட்டால் ஒரு 100 ரூபாய் கூட கையில் இல்லாமல் நான் தவித்து இருக்கிறேன். அப்போது கூட இருப்பவர்களிடம் பணத்துக்காக கெஞ்சி இருக்கிறேன் ஆனால் பலர் என்னை கண்டுகொள்ளாமல் விட்டிருக்கிறார்கள். அவமானப்படுத்தி இருக்கிறார்கள் என்று பல வருத்தத்தை பகிர்ந்து இருக்கிறார்.
மேலும் வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு பெரிய டிவி சேனலில் வேலை பார்க்கிறார். செய்தி வாசிப்பாளர்களாக இருக்கிறார் செய்தி வாசிக்கும் போது சிரித்த முகமாகவும் எந்த கவலையும் இல்லாமல் தானே இருக்கிறார் இவருக்கு என்ன பிரச்சனை இருக்கும் என்று நினைப்பார்கள். ஆனால் நமக்கு இருப்பது நமக்கு தான் தெரியும் என்று தன்னுடைய வேதனையை தெரிவித்திருக்கும் வீடியோ தற்போது தற்போது ரசிகர்கள் அதிகமான கருத்துக்களை குவித்து வருகிறார்கள்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications