நொடியில் உயிர் தப்பிய அறந்தாங்கி நிஷா மகளுக்கு பிரம்மாண்டமான விழா.. கண்கலங்கிய தாய் பாசம்
சென்னை: விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பிரபலமான அறந்தாங்கி நிஷா தன்னுடைய மகளின் காதுகுத்து விழாவை பிரம்மாண்டமாக நடத்தி இருக்கிறார். அந்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறந்தாங்கி நிஷா பகிர்ந்து இருக்கும் நிலையில் குழந்தையை பலரும் ஆசிர்வதித்து வருகிறார்கள்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்கு பெற்ற ஆண் போட்டியாளர்களுக்கு டப் கொடுத்துவிட்டு தன்னுடைய திறமையை வெளிக்காட்டி அறந்தாங்கி நிஷா சாதித்திருந்தார். அந்த நிகழ்ச்சியில் கிடைத்த பிரபலம் காரணமாகவே சின்னத்திரை நடிகை, தொகுப்பாளர், வெள்ளித்திரை நடிகை என்று பிசியாக கலக்கிக் கொண்டிருக்கிறார்.

ஆனாலும் அறந்தாங்கி நிஷாவின் குடும்பம் அவ்வளவு வசதி வாய்ப்பு நிறைந்ததாக இல்லை. ஆனாலும் நடுத்தர குடும்பத்தை சார்ந்த அறந்தாங்கி நிஷா ஆரம்பத்திலேயே பட்டிமன்ற பேச்சாளராக இருந்து அதன் மூலம் கிடைத்த பிரபலத்தின் காரணமாகவே விஜய் டிவி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு இப்போது பல முன்னணி நடிகர்களோடு திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
தான் வாங்கும் சம்பளத்தில் தன்னால் முடிந்த அளவிற்கு பலருக்கும் உதவி செய்து வருகிறார். அதிலும் கடந்த புயல் பாதிப்பு ஏற்பட்ட நேரத்தில் அறந்தாங்கி நிஷா அவருடைய கணவரோடு சேர்ந்து பல குடும்பங்களுக்கு ஓடி ஓடி உதவிகளை செய்திருந்தார். அதுபோல மழை பாதிப்பால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மக்களுக்கும் அறந்தாங்கி நிஷா உதவி செய்திருந்தார்.
இந்த அளவிற்கு உதவி செய்யும் அறந்தாங்கி நிஷாவின் வாழ்க்கையிலும் பெரிய அதிர்ச்சிகரமான சம்பவங்கள் நடைபெற்று இருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு அறந்தாங்கி நிஷா தன்னுடைய குழந்தை பிறந்த சில நாட்களிலேயே காரில் போய்க்கொண்டிருக்கும் போது பெரிய ஆக்சிடெண்டில் சிக்கி இருக்கிறார்.
அந்த நேரத்தில் தன்னுடைய மகள் உயிர் பிழைத்தது அபூர்வம் என்றும் அந்த ஆக்சிடென்ட்க்கு பிறகு தன்னுடைய மகள் சின்ன அதிர்ச்சியை கூட தாங்கிக்க முடியாத அளவிற்கு இருக்கிறார் என்றும் பேட்டி ஒன்றில் கண்கலங்க அறந்தாங்கி நிஷா பேசியிருந்தார். அதனாலேயே தன்னுடைய மகளுக்கு தான் இன்னும் காது குத்தவில்லை என்று சொல்லி இருந்தார்.
அதுபோல அறந்தாங்கி நிஷாக்கு ஆக்சிடென்ட் ஆகி இருக்கும்போது அந்தப் பக்கமாக புது காரில் நம்பர் பிளேட் வாங்குவதற்காக சென்று கொண்டு இருந்த இளைஞர்கள் தான் எங்களை தூக்கிக்கொண்டு ஹாஸ்பிடலில் சேர்த்தது, பிறகு எங்களுக்கு ஹாஸ்பிடலில் பல உதவிகளையும் செய்திருந்தார்கள். ஆனால் பிறகு அந்த இளைஞர்கள் எங்கே போனார்கள் அவர்கள் எந்த ஊர்க்காரர்கள் என்று எங்களுக்கு தெரியாது.
என்னுடைய குழந்தைக்கு அந்த தம்பிமார்களின் மடியில் வைத்து காதுகுத்துவேன் என்று அறந்தாங்கி நிஷா கூறியிருந்தார். இந்த நிலையில் நேற்று தன்னுடைய மகளுக்கு அறந்தாங்கி நிஷா காதுகுத்தி இருக்கிறார். அந்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்த நிலையில் குழந்தை இனி நலமுடன் இருக்க வேண்டும் என்று பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து குழந்தையை ஆசீர்வதித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications