அதெப்படிப்பா! எனக்கே தெரியாம இப்படி நடக்கும்? பொய் சொன்னாலும் பொருந்த சொல்லுங்க.. அறந்தாங்கி நிஷா
சென்னை: சென்னையில் அறந்தாங்கி நிஷா புதிய பங்களா டைப்பில் ஒரு வீட்டை வாங்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு நிஷா அளித்த பதில் என்ன தெரியுமா?
சின்னத்திரை நயன்தாரா என தன்னைபாசிட்டிவ்வாகவே கூறிக் கொள்பவர் அறந்தாங்கி நிஷா. இவர் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் ஸ்டான்ட் அப் காமெடி செய்து பிரபலமானார்.
இவர் பழனியுடன் சேர்ந்து செய்த காமெடி நிகழ்ச்சிகள் ஹிட் அடித்தன. இவர் கருப்பாக இருந்தாலும் தனது பாசிட்டிவ் ஆட்டிட்யூட்டால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்திருககிறார்.

விஜய் டிவி
இவர் விஜய் டிவியில் தற்போது நிறைய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். சில நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார். இதனால் அவ்வப்போது ஷூட்டிங் நடக்கிறது. இதனால் ஒவ்வொரு முறையும் அறந்தாங்கியிலிருந்து வந்து போக கடினமாக இருக்கும் என்பதால் இவர் சென்னையில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்தார்.

கருப்பு ரோஜா யூடியூப் சேனல்
இதை அவருடைய கருப்பு ரோஜா யூடியூப் சேனலில் தெரிவித்திருந்தார். மேலும் வீட்டையும் ரசிகர்களுக்கு சேனல் வழியாக சுற்றிக் காட்டினார். மேலும் இது வாடகை வீடு என்பதையும் தெரிவித்துவிட்டார். சென்னையில் ஷூட்டிங் இருக்கும் போது இங்கு வந்து தங்கி கொள்வேன் என்றும் மற்ற நாட்களில் அறந்தாங்கியில் தான் இருப்பேன் என்றும் தெரிவித்திருந்தார்.

புதிய வீடு
இந்த நிலையில் இந்த விஷயத்தை தவறாக புரிந்து கொண்ட சில செய்தி நிறுவனங்கள் சென்னையில் அறந்தாங்கி நிஷா புதிய வீட்டை வாங்கி விட்டார் என்றே செய்தி போட்டன. அதிலும் அவர் பங்களா டைப் வீட்டை வாங்கிவிட்டதாக ஒரு சூப்பர் பங்களா புகைப்படத்தை போட்டனர். இது வைரலான நிலையில் இதை கண்டு நிஷாவே ஷாக்கானார்.

எனக்கே தெரியாமல் பங்களாவா
இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாவில் கூறுகையில் அது எப்படிப்பா எனக்கே தெரியாம நான் பங்களா கட்டுவேன், பொய் சொன்னாலும் கொஞ்சம் பொருந்த சொல்லுங்கப்பா, இத பாத்துட்டு நிறைய பேரு எனக்கு வாழ்த்து சொன்னீங்க, நிறைய பேரு என்ன கிண்டல் பண்ணீங்க, இது வதந்தி தான், ஆனா முயற்சி செஞ்சா முடியாதது எதுவுமே இல்ல சீக்கிரமா இப்படி ஒரு பங்களா கட்டுவோம்.. சத்தியமா சொல்றேன் இது என் வீடு இல்லங்கோ.. என நிஷா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications