அர்னவ் வெளியேற்றம்! உள்ளே அன்ஷிதா! மல்லுக்கட்ட வரும் அந்த நடிகை! சவுண்ட் சரோஜாவும் வராராமே!
சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் 5 பேர் வைல்ட் கார்டு போட்டியாளர்களாக செல்லவிருக்கிறார்களாம். அவர்களில் 4 பேர் குறித்த விவரங்கள் வெளியான நிலையில் அந்த 5 ஆவது நபர் மட்டும் சஸ்பென்ஸ்ஸாக வைத்திருக்கிறார்கள்.
பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சி கடந்த 6ஆம் தேதி 18 போட்டியாளர்களுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். இவர் முதல் வாரத்திலிருந்தே போட்டியாளர்களின் வயிற்றில் புளியை கரைக்க வைத்து வருகிறார்.

இந்த நிகழ்ச்சியில் இருந்து ரவீந்தர் வெளியேறிவிட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் டிஆர்பிக்காக நிறைய தகிடுதத்தங்கள் செய்யப்படுவதாக சொல்லப்படுவதுண்டு. அந்த வகையில் பிக்பாஸில் தேவையற்ற கண்டென்ட்கள் உருவாக்கப்படும்.
இருவருக்குள் உப்பு சப்பில்லாத விஷயங்களுக்கெல்லாம் முட்டிக் கொள்ளும். எவிக்ஷன் பிராசஸே டிஆர்பியை வைத்துதான் முடிவு செய்யப்படுகிறதே தவிர மக்களின் வாக்குகளை வைத்து அல்ல என பலர் விமர்சிக்கிறார்கள். இதெல்லாம் கமல்ஹாசன் ஏற்று நடத்திய நிகழ்ச்சியில் நடந்தது. ஆனால் தற்போது விஜய் சேதுபதி நிகழ்ச்சியில் எவிக்ஷன் பிராசஸ் எப்படி இருக்கும் என்பது போக போகத்தான் தெரியும்.
கடந்த வாரம் முழுக்க நிகழ்ச்சி மந்தமாகவே இருந்த நிலையில் நேற்றைய தினம்தான் சாச்சனாவும் அன்ஷிதாவும் குழாய் அடி சண்டை போல் கத்தி கூப்பாடு போட்டனர். இவர்கள் கத்தும் சப்தம் இடியை விட அதிகமாகவே இருந்தது. பொதுவாக இந்த நிகழ்ச்சியில் சுவாரஸ்யம் குறைந்தால் எடுங்க அந்த வைல்ட் கார்டை என பிக்பாஸ் எடுப்பார்.
அந்த வகையில் இந்த வாரம் அர்னவ் எலிமினேட் ஆகியுள்ள நிலையில் தற்போது தீபாவளிக்கு 5 வைல்டு கார்டு போட்டியாளர்களை களமிறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சீசனில் களமிறக்கப்பட்ட போது 5 பேரில் ஒருவரான சீரியல் நடிகை அர்ச்சனா டைட்டிலை பெற்றார்.
அந்த வகையில் இந்த முறை யாரெல்லாம் வைல்டு கார்டில் என்டரியாக போகிறார்கள் என்பதை பார்க்கலாம். அதன்படி செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதர், இவர் அர்னவ்வின் மனைவி, ஆனால் இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடால் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். மிமிக்ரி ஆர்டிஸ்ட் டிஎஸ்கே, வினோத் பாபு ஆகிய விஜய் டிவி பிரபலங்கள் கலந்து கொள்கிறார்கள்.
டிஎஸ்கே, கலக்கப் போவது யார் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் அண்மையில் வெளியான லப்பர் பந்து படத்திலும் நடித்துள்ளார். அது போல் வினோத் பாபு, தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் நாயகனாக நடித்திருந்தார். அது போல் லட்சுமியின் மகள் ஐஸ்வர்யாவும் கலந்து கொள்கிறார் என தெரிகிறது. மற்றொரு 5-ஆவது போட்டியாளர் யார் என தெரியவில்லை. ஐஸ்வர்யா அதிரடி ஆட்டக்காரர். அன்ஷிதாவுக்கும் திவ்யா ஸ்ரீதருக்கும் இடையே ஏற்கெனவே வாய்த்தகராறு ஏற்பட்ட ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications