Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Arundhathi Serial: பாலையும் குடிக்கலை புத்தகமும் படிக்கலை... ஏன் மாமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியின் அருந்ததி சீரியலில் திகில் இருக்கிறது.பதிலுக்கு தெய்வானை, சண்முகத்தின் ரொமான்ஸ் காட்சிகளை கூட்டி இருக்கிறார்கள். எப்படி இருவரும் இவ்வளவு நெருக்கமானார் என்பது கொஞ்சம் இடிக்கும் லாஜிக்தான்.

திடீரென்று தெய்வானை சண்முகத்தை மாமா மாமா என்று கூப்பிடுவதும், பதிலுக்கு அவன் தெய்வானை என்று உருகுவதும் செயற்கைத் தனமான காதலாகத்தான் இருக்கிறது.

அமெரிக்க ரிட்டர்னான சண்முகம் தெய்வானையை பிடிக்கலை என்று ஒரு எபிஸோடில் சொன்னவன், அடுத்த எபிசோடில் தெய்வானை சொன்ன அருந்ததியின் கதையை கேட்டு ,உடனடியாக தெய்வானையை உசிருக்கு உசிராக காதலிக்கிறான்.

தெய்வானை உடல்

தெய்வானை உடல்

அருந்ததியின் ஆவிக்கு தற்போதைக்கு தெய்வானையின் உடல் தேவைப்படுகிறது என்று நம்பூதிரி சொல்ல, சண்முகம் மறுத்துவிட்டு, அவளை வீட்டுக்கு அழைச்சுட்டு வந்துடறான். ஆனால், புருஷனுக்கு தெரியாமல் அருந்ததிக்கு எப்படியும் நல்லது செய்ய வேண்டும் என்று தனது உடலை கொடுக்கிறாள்.

தெய்வானை அருந்ததி

தெய்வானை அருந்ததி

தெய்வானையின் உடலில் இருக்கும் அருந்ததிக்கு சண்முகம் தெய்வானை என்று அவளை நெருங்கும் போது எல்லாம் அருந்ததிக்கு சண்முகத்தின் மேலாசை வந்துவிடுகிறது. இதுவும் ஆவிகள், பேய்கள் விஷயத்தில் உண்மைதானோ என்னவோ. சண்முகம் தெய்வானை என்று கொஞ்ச வரும்போது எல்லாம் அருந்ததி சண்முகத்தின் செயலை ரசிக்கிறாள்,அவன் தனக்கு மட்டும் சொந்தமாக வேண்டும் என்று ஆசைப்படுகிறாள்.

விலகியவுடன் ஆசை

விலகியவுடன் ஆசை

தெய்வானையை விட்டு, அருந்ததி ஆவி முழு வடிவில் வெளியானவுடன், சண்முகம் தெய்வானை தெய்வானை என்று ஆசை காட்டும்போது எல்லாம், அருந்ததிக்கு தனக்கு உதவி செய்த தெய்வானைக்கே துரோகம் செய்ய எண்ணம் வந்துருது. நிரந்தரமாக சண்முகத்தை விட்டு, தெய்வானையை பிரிச்சு,சண்முகத்தை நான் அடையப்போறேன்னு கத்தறா.

பால் புத்தகம்

பால் புத்தகம்

தெய்வானை இரவு நேரத்தில் சண்முகத்துக்கு பால் கொண்டு வர. புத்தகம் படித்துக் கொண்டு இருந்த சண்முகம் புத்தகத்தையும் படிக்கலை, பாலையும் குடிக்கலை. தெய்வானையையே பார்த்துகிட்டு இருக்கான்.என்ன மாமா..பால் வச்சு இருக்கேன்..அதையும் குடிக்கலை. புத்தகத்தையும் படிக்காம மூடி வச்சுட்டீங்கன்னு தெய்வானை கேட்கறா.

பாலை ரெண்டு பேரும் குடிக்கலாம்..புத்தகம் வேண்டாம்..இன்னிக்கு பிராக்டிகலா உன்னை படிக்கணும்னு இருக்கேன்னு சொல்றான். தெய்வானை வெட்கப் பட்டுக்கொண்டே மாமான்னு கிட்டே போகிறாள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+