Ayudha Ezhuthu Serial: சப் கலெக்டருக்கு இந்த புரபோஸல் கற்பனைதான்... நல்லாருக்கா?
சென்னை: விஜய் டிவியின் ஆயுத எழுத்து சீரியலில் ஒரு சப் கலெக்டருக்கு,ம், ஊரையே தனது கைக்குள் வைத்து அடிமைப்படுத்தும் காளி அம்மாவுக்கும் ஏற்படும் போட்டிதான் கதை.
காளி அம்மாவின் புருஷன், காளி அம்மா மீது உயிராக இருந்தாலும், அவள் செய்யும் அடாவடி செயல்கள் பிடிக்காமல் தனியாக வாழ்ந்துகிட்டு இருக்கார்.
இருவருக்கும் நான்கு ஆம்பளை பசங்க இருந்தாலும், கடைசி பையன் சக்தி மட்டும்தான் அப்பாவிடம் நன்றாக பேசுபவன், பாசமாக இருப்பவன்.

சப் கலெக்டர்
அந்த ஊரின் சப்கலெக்டர் இந்திராவுக்கு, காளி அம்மாவின் கடைசி பையன் சக்திக்கும் கிட்டத்தட்ட காதல் உண்டாகும் சூழ்நிலைகள் உருவாக்கி வருது. உடன் படித்த ஒருவன் தன்னை காதலிப்பதாகவும், வீட்டுக்கு வருவதாகவும் சொல்ல, அவனை தவிர்க்க, சக்தியை காதலிப்பது போல, கல்யாண ஏற்பாடுகள் நடப்பது போல டிராமா பண்ணலாம் என்று ஐடியா கொடுப்பது சக்தியின் அப்பா.

புருஷனாக சக்தி
வரும் கால புருஷனாக சக்தி நடிக்க, இந்திராவின் நண்பனால் இதை ஏத்துக்கவே முடியலை. சரி உங்க புரபோஸல் பத்தி சொல்லுங்கன்னு கேட்க, சக்தி கற்பனையில் சொல்ல ஆரம்பிக்கிறான். அதாவது ஒரு கோயில்.அங்கதான் இது நடக்குது. இருவரும் கற்பனை என்றாலும் அதில் சந்தோஷமாக ஆழ்ந்துதான் போகிறார்கள்.

பத்து பொருத்தமும்
இந்திரா கோயிலுக்கு போறா.. அப்போ அங்கே வந்த ஒரு அம்மா பூ வச்சுக்கோம்மான்னு சொல்லிட்டு, நீ மகாலட்சுமி மாதிரி இருக்கேம்மான்னு சொல்றாங்க. யாரு நீங்கன்னு கேட்கையில்,கையை நீட்டி ஒரு திசையை காமிக்கறாங்க. அங்கே பார்த்தால் ஐயர் ஒருத்தர் வர்றார். அவர் ஒரு பேப்பரை கொடுத்து பத்து பொருத்தமும் சரியா இருக்குன்னு சொல்றார். அவரும் கையை ஒரு திசை நோக்கித் திருப்ப அங்கே சக்தி நிற்கிறான்.

இல்லை அணைச்சுருங்க
உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்.உங்களுக்கும் எனக்கும் எல்லா விதத்திலும் ரசனை ஒத்துப் போகாதுதான். ஆனால், ரெண்டு பேரும் சேர்ந்து நல்லா வாழ்வோம்ன்னு தோணுது. உங்களுக்கு என்னை பிடிச்சு இருந்தா பக்கத்துல இருக்க விளக்கை ஏத்தி வைங்க. இல்லேன்னா நான் ஏத்தி வச்சு இருக்கும் இந்த விளக்கையும் அணைச்சுருங்கன்னு சொல்றான் சக்தி.
விளக்கை ஏத்தி வைக்கிறாள் இந்திரா. இது கற்பனை புரபோஸல்தான். ஆனால், இந்திரா நண்பன் போனவுடன் இப்படி புரபோஸ் செய்தா நான் நிச்சயம் ஏத்துப்பேன்னு சொல்றா.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications