Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காலேஜில் பாக்கியா செய்த கிறுக்குத்தனம்.. அதிர்ச்சி கொடுத்த பழனிச்சாமி.. ஈஸ்வரி எடுக்கப் போகும் முடிவு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் காசிக்கு போயிருந்த ஈஸ்வரி மீண்டும் வீட்டிற்கு வந்திருக்கிறார்.

அதே நேரத்தில் காலேஜில் முதல் நாளில் பாக்கியா அங்கிருக்கும் மாணவர்களிடமும் நன்றாக பழகி அவர்களுக்கு சமையல் செய்து எடுத்து வருவதாக சொல்லிக் கொண்டிருக்கிறார்.

Baakiyalakshmi Serial 2023 August 8th Episode full update

இந்த நிலையில் பாக்கியா காலேஜுக்கு போவது தெரிந்தால் இனி ஈஸ்வரி என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.

இந்த நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் ஆகஸ்ட் 8ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம். அந்த வகையில் சாமியார் கெட்டப்பில் வீட்டு வாசலில் நின்று இருந்த ஈஸ்வரியை பார்த்த ராமமூர்த்தி, ஜெனி இருவரும் அதிர்ச்சியாகி இருக்கின்றனர். அதோடு ஈஸ்வரி மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே இருப்பதோடு அவருடைய பேச்சும் மாறி இருக்கிறது.

இருந்தாலும் இருவரும் ஈஸ்வரியை வீட்டுக்குள் அழைத்து செல்கின்றனர். வீட்டுக்குள் வந்து ஈஸ்வரியை பார்த்ததும் அமிர்தாவும் அதிர்ச்சி அடைகிறார். பிறகு அமிர்தா காபி வேணுமா? என்று கேட்க, வேண்டாம் என்று சொல்லி துளசி போட்ட நீரை வாங்கி குடிக்கும் ஈஸ்வரியின் நடவடிக்கைகளை பார்த்து அனைவரும் வியப்பில் இருக்கின்றனர். இந்த நிலையில் அதைத்தொடர்ந்து பாக்யா காலேஜில் தன்னுடைய கிளாஸ் ரூமுக்குள் செல்கிறார்.

Baakiyalakshmi Serial 2023 August 8th Episode full update

அங்கிருக்கும் மாணவர்கள் எல்லோரும் பாக்கியாவை வித்தியாசமாக பார்க்க, பாக்கியா எதையும் கண்டு கொல்லாமல் அவர்களோடு போய் உட்கார்ந்து இருக்க பிறகு மிஸ் வந்ததும் எல்லோரிடம் சேர்ந்து தன்னையும் அறிமுகம் செய்து கொள்கிறார். அதே நேரத்தில் கேண்டினில் சாப்பிட வரும் ராதிகா எனக்கு தோசை வேண்டும் என்று கேட்க, செல்வி தோசையை கொண்டு வர போகும்போது அவரோடு வேலை செய்பவர்கள் அங்கு கேஸ் தீர்ந்து போச்சு என்று சொல்ல, செல்வி திட்டிக்கொண்டு பிறகு லேட்டாக தோசை எடுத்துக் கொண்டு வருகிறார்.

இதனால் கோபமான ராதிகா ஆர்டர் பண்ணி 15 நிமிஷம் ஆச்சு எங்க உங்க பாக்கியா மேடம் என்று கேட்க, செல்வி ஓனர் வெளியில போயிட்டாங்க மேடம் என்று சொல்ல, ராதிகா காண்ட்ராக்ட் கிடைக்கும் வரைக்கும் அதை செய்வேன், இதை செய்வேன் என்று சொல்ல வேண்டியது. பிறகு காண்ட்ராக்ட் கிடைத்தது ஓனராகிட்டாங்களா? என்று நக்கலாக திட்டுகிறார்.

அடுத்ததாக பாக்கியா தன்னுடைய கிளாஸில் இருக்கும் எல்லோரிடமும் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது ஒவ்வொருவருடைய பெயரை சொல்லி அவர்களோடு அறிமுகம் ஆகிவிட்டு ஒரு நாள் எல்லோருக்கும் சேர்த்து சாப்பாடு செய்து கொண்டு வருகிறேன் என்று பேசிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் பாக்கியாவை பார்ப்பதற்காக பழனிச்சாமியும் அவருடைய அம்மாவும் வந்து நிற்கின்றனர். பாக்யா கிளாஸிலிருந்து வந்து இவர்கள் இருவரிடமும் பேசிக் கொண்டிருக்கிறார்.

அதைத் தொடர்ந்து வீட்டில் ஈஸ்வரியின் நடவடிக்கையை பற்றி எழிலும், இனியாவும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது எழில் அம்மா வந்தாங்க என்றால் பாட்டியை பார்த்து அதிர்ச்சி அடைய போறாங்க என்று சொல்ல, இனியா பாட்டிக்கு தான் அம்மா காலேஜ் போறது தெரியாதே என்று சொல்ல அதைக் கேட்டு எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர். இத்துடன் இன்று எபிசோடு முடிவடைகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+