முடிவுக்கு வரும் பாக்கியலட்சுமி முதல் பாகம்..2வது பாகத்தில் இவர்கள் தான் நடிக்கிறார்களா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் முதல் பாகம் முடிவுக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இந்த நிலையில் வயதான தோற்றத்தில் கோபி கேரக்டரில் நடிகர் சதீஷ் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

பாக்கியலட்சுமி சீரியல் பலதரப்பட்ட ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று யோசிக்க முடியாமல் இருக்கும் பல பரபரப்பான தருணங்கள் இந்த வாரத்தில் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த சீரியலில் பற்றி பல அதிர்ச்சிகரமான செய்திகளும் வெளியாகி இருக்கிறது.
இன்றைய எபிசொட்டில் ஜெனி தவறி கீழே விழுந்து வயிற்றில் அடிபட்டு வயிற்றுவலியில் துடிக்கிறார். இதே நேரத்தில் இனி ஜெனியை மருத்துவமனையில் ராதிகா தான் சேர்க்க இருக்கிறார் என்ற பிரமோவும் வெளியாகி இருக்கிறது. வீட்டில் யாரும் இல்லாததால் ஜெனியை ராதிகா தான் கொல்ல முயற்சி செய்து விட்டார் என்று இனி ஈஸ்வரி புது பிரச்சனையை கிளப்ப இருக்கிறாராம்.
ஏற்கனவே கோபி மற்றும் ராதிகா செய்யும் பிரச்சனைகளுக்கு பெரிய அளவில் பாக்கியா எந்த பதிலும் கொடுக்காமல் இருந்து வருகிறார். இதனால் இனி பாக்கியா என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்று எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருக்கிறது. கோபி எப்படியாவது ராதிகாவை வீட்டை விட்டு கிளம்பி மீண்டும் பழைய வீட்டிற்கு போகவேண்டும் என்று ஒவ்வொரு நாளும் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.
அதே நேரத்தில் ராதிகாவை மட்டும் அனுப்பி வைத்துவிட்டு கோபியை மீண்டும் பழையபடி தங்களோடு வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஈஸ்வரி ஒரு பக்கமாக ஆசையோடு முயற்சி செய்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் ராதிகா மீது ஈஸ்வரி சுமத்தி இருக்கும் குற்றச்சாட்டுகளை கோபி எப்படி எடுத்துக் கொள்ளப் போகிறார் இனி கோபி என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.
இந்த நிலையில் இந்த சீரியலில் கோபி கேரக்டரில் நடிக்கும் நடிகர் சதீஷ் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வயதான ரூபத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இதுதான் வயதான கோபி என்று பதிவிட்டு இருக்கிறார். ஏற்கனவே பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்து என்ன வரப்போகிறது என்பது பற்றி ஃக்ளூ அடிக்கடி கொடுத்து வருபவர். அதனால் இனி இந்த சீரியல் முதல் பாகம் முடிவடைந்து விரைவில் இரண்டாவது பாகம் ஒளிபரப்பாக இருக்கிறது என்று கன்ஃபார்ம் ஆகி இருக்கிறது.

ஏற்கனவே இந்த சீரியலில் இருந்து தான் 10, 15 எபிசோட்டில் விலகப் போவதாக கோபி தெரிவித்து இருந்தார். அதைத் தொடர்ந்து ராதிகாவும் நானும் இந்த சீரியலில் இனி இருப்போமா இல்லையா என்பது தெரியாது என்றும் கூறியிருந்தார். அதனால் இனி இரண்டாவது பாகத்தில் ராதிகா கேரக்டர் இருக்காதா? அப்போ கோபி மட்டும் இருக்கிறாரே என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இரண்டாவது பாகத்தில் இனி கோபி மட்டும் கன்ஃபார்ம் ஆகி இருக்கிறது. அதே நேரத்தில் பாக்யா இனி எப்படி இருப்பார் என்றும் பலர் எதிர்பார்க்கின்றனர்.
-
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக! -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ












Click it and Unblock the Notifications