பாக்கியலட்சுமி சீரியலில் என்ட்ரியாகும் "தாடி பாலாஜி”.. கதையே மாறிப்போச்சு.. இப்படி ஒரு முடிவா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இன்று எபிசோடில் நடிகர் தாடி பாலாஜி அறிமுகம் ஆகி இருக்கிறார்.
பழனிச்சாமியின் நண்பனாக தாடி பாலாஜி அறிமுகம் ஆகி இருப்பதால் இனி அடுத்து என்ன பிரச்சனை வரப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.
தாடி பாலாஜி பாக்யாவின் சபதத்தை ஜெயிக்க விடுவாரா? இல்லையா? என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த சீரியலில் கதை இப்போது விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. பாக்கியாவிடம் இந்த வீட்டில் உனக்கு உரிமை இல்லை இந்த வீட்டை விட்டு போக வேண்டும் என்று கோபியும் ராதிகாவும் திட்டியதால் பாக்கியா கோபியிடம் மீண்டும் சபதம் போட்டிருக்கிறார்.
ஏற்கனவே கோபி இந்த வீட்டை என்னிடம் விற்க போகிறேன் என்று சொல்லி இருக்கிறார். அதற்கு 2 லட்சம் ரூபாய் கொடுத்து இருக்கிறேன். ஆனால் இன்னும் ஒரு மாதத்திற்குள் மீதம் இருக்கும் 18 லட்சம் ரூபாயும் நான் முகத்தில் தூக்கி எறிந்ததும் கோபியும் அவருடைய குடும்பமும் இந்த வீட்டை விட்டு போக வேண்டும் என்று பாக்யா சொல்லி இருக்கும் நிலையில் இந்த சவாலுக்கு கோபியும் தயார் என்று கூறியிருக்கிறார்.
அதே நேரத்தில் பழனிச்சாமி தன்னுடைய நண்பர் இல்ல திருமண பங்ஷனுக்கு சமையல் செய்ய வேண்டும், மூன்று நாட்கள் பெரிய அளவில் 5000 பேருக்கு சமைக்க வேண்டும் என்று சொன்னதற்கு ஆரம்பத்தில் முடியாது என்று சொன்ன பாக்கியா கோபியிடம் தான் போட்ட சவாலில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக அதை ஏற்றுக் கொண்டு சமையல் செய்வதற்காக பாண்டிச்சேரிக்கு வந்து இருக்கிறார்.
இந்த நிலையில் பழனிசாமியின் நண்பராக பாண்டிச்சேரியில் நடிகர் தாடி பாலாஜி இன்றைய எபிசோடில் அறிமுகம் ஆகி இருக்கிறார். அதே நேரத்தில் பாக்யா தான் இங்கே சமையல் செய்யப் போகிறார் என்று பழனிச்சாமி சொன்னதும் தாடி பாலாஜிக்கு பிடிக்கவில்லை இவர் எப்படி மூன்று நாட்களுக்கு மூன்று நேரம் சாப்பாடும் செய்ய முடியும் என்று சந்தேகப்படுகிறார்.

ஆனாலும் பழனிச்சாமி என் மீது உனக்கு நம்பிக்கை இல்லையா? பாக்கியா நல்லா சமைப்பாங்க அதனால தான் அவங்கள வர சொல்லி இருக்கிறேன் என்று சொல்ல, முழு மனதாக தாடி பாலாஜி சம்மதம் தெரியவில்லை. இதே நேரத்தில் அதே கல்யாணத்துக்கு கோபியும் ராதிகாவும் வருகின்றனர். இந்த நிலையில் பாக்யாவை ஜெயிக்க விடாமல் வைப்பதற்காக ராதிகா தாடி பாலாஜியோடு சேர்ந்து எதாவது பிளான் போட போகிறாரா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.
ஆனாலும் பாக்கியாவிற்கு கோபியும் ராதிகாவும் பாண்டிச்சேரியில் தான் சமையல் செய்யப் போகும் ஃபங்ஷனுக்கு தான் வர போகிறார்கள் என்பது தெரியாது. அது போல கோபிக்கும் ராதிகாவிற்கும் நான் தாங்கள் போகும் பங்க்ஷன் வீட்டிலிருந்து பாக்கியா தான் சமைக்கப் போகிறார் என்பது தெரியாது. இதனால் கோபியோ அல்லது ராதிகாவோ பாக்யாவிற்கு பிரச்சனை செய்ய இருக்கிறார்கள் என்பது மட்டும் தெரிகிறது.












Click it and Unblock the Notifications