ஈஸ்வரிக்கு சரியான அடி கொடுத்த ராதிகா.. ஆனால் இனியா இப்படி செய்வாங்கன்னு நினைக்கலையே!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் மார்ச் 11ஆம் தேதியிலிருந்து 16ஆம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் பாக்கியலட்சுமி ரெஸ்டாரண்ட் திறப்பு விழாவுக்கு போன கோபியை ராதிகா அடித்து விடுகிறார்.
அதைப் பார்த்த இனியா ஈஸ்வரியிடம் போட்டுக் கொடுக்க வீட்டில் பிரச்சனை வெடிக்கிறது. இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் பாக்கியலட்சுமி சீரியலில் கடந்த வாரம் முழுக்க பாக்கியா ரெஸ்டாரண்ட் திறப்பது பற்றிய கதை போய்க்கொண்டிருந்தது. அதே நேரத்தில் பாக்யாவின் ரெஸ்டாரண்ட் திறப்பு விழாவுக்கு மினிஸ்டரை வர விடாமல் தடுப்பதற்காக கோபி பல முயற்சிகளை எடுத்திருந்தார். தன்னுடைய நண்பரின் உதவியோடு மினிஸ்டர் அதே நாளில் இன்னொரு ஸ்கூல் பங்சனில் கலந்து கொள்ளும்படி பிஏவுக்கு பணம் கொடுத்து செட் பண்ணி வைத்திருந்தார்.

ஆனால் கடைசி நேரத்தில் பாக்யா பகிர்ந்து கொண்டு பதறிப் போய் இருக்கும் நிலையில் யாரும் எதிர் பார்க்காத வகையில் மினிஸ்டர் வந்து சேர்ந்து விட்டார். இது கோபிக்கு பெரிய ஏமாற்றமாக இருந்தது. அதே நேரத்தில் ஆரம்பத்தில் பாக்யாவின் ரெஸ்டாரண்டுக்கு நான் போக மாட்டேன் என்று வீர வசனம் பேசிக் கொண்டிருந்த கோபி பாக்கியா ரெஸ்டாரண்ட் திறக்க மினிஸ்டர் வராததால் அவமானப்படுவதை பார்க்க வேண்டும் என்பதற்காக கோபி அங்கே வந்திருந்தார்.
இப்படியான நிலையில் வரும் வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ராதிகா கோபியிடம் எனக்கு இனியா சில புகைப்படங்களை அனுப்பி இருந்தா... அதுவும் பாக்யா ரெஸ்டாரண்ட் புகைப்படங்கள் தான் அதிலிருந்த எல்லாரையும் எனக்கு தெரிந்தது. ஆனால் ஒரே ஒரு நபரை மட்டும் தெரியவில்லை.

அது யாருன்னு உங்களுக்கு தெரியுதா என்று கோபியிடம் போட்டோவை காட்ட, அதில் கோபி அங்கே நிற்பதை பார்த்ததும் கோபி பதறி போய்விடுகிறார். அப்போது ராதிகா கோபியை போட்டு அடிக்கிறார். இதை எல்லாம் இனியா பார்த்துக் கொண்டு இருந்து ஈஸ்வரி இடம் போட்டு கொடுத்து விடுகிறார். ஈஸ்வரி அடுத்த நாள் ராதிகாவிடம் பாக்யாவை அதட்டுவது போலவே நீ என் பையனை பாடாய் படுத்துவியா? உனக்கு என்ன பிரச்சனை என்று கேட்க,
அதற்கு ராதிகா மாமா கிட்ட நீங்க போடுற சண்டை கூட கம்பேர் பண்ணும் போது இதெல்லாம் சண்டையே கிடையாது என்று சொல்ல அதை கேட்டு ஈஸ்வரி கடும் கோபத்தில் அதிர்ச்சியாகி நிற்கிறார். அதைத் தொடர்ந்து ராதிகா ஈஸ்வரியை பார்த்து முறைத்துக் கொண்டிருக்க பாக்கியா அடுத்து என்ன செய்யப் போகிறார் என்பது போன்று ப்ரோமோ முடிவடைந்து இருக்கிறது.












Click it and Unblock the Notifications