பாக்கியலட்சுமி: கோபிக்கு அதிர்ச்சி கொடுத்த எழில்.. அப்போ எல்லாமே பிளான் தானா? பாக்யாவுக்கு சர்ப்ரைஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் நவம்பர் ஒன்பதாம் தேதிக்கான எபிசோடில் பாக்யாவை எழிலின் பட பூஜையில் கலந்து கொள்ள கூடாது என்று சொன்ன கோபிக்கு எழில் அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். மகனை நினைத்து பாக்கியா கண்ணீர் சிந்தி இருக்கிறார். என்ன நடந்தது பாக்கலாம்.

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் பாக்கியா பங்க்ஷன் நடக்கும் இடத்திற்கு வந்திருக்கிறார். அங்கு வந்ததும் உன் எழிலிடம் நான் உனக்காக கோயிலுக்கு போயிட்டு வந்தேன் என்று திறுநீரு வைத்துவிட்டு வா உள்ளே போகலாம் என்று கூப்பிட, எழில் நீ நான் என்ன சொன்னாலும் கேட்பதானே அம்மா என்று கேட்க, அதற்கு பாக்கியா ஆமா எனக்கு எப்போதும் உன்னுடைய சந்தோசம் தான் முக்கியம்.

baakiyalakshmi serial vijay tv

சொல்லு எழில் என்ன செய்யணும் என்று கேட்க, நான் சந்தோஷமா இருக்கணும் என்றால் நீ இந்த ஃபங்ஷனில் கலந்து கொள்ள வேண்டாம் வெளியே போயிருமா.. என்று சொல்ல பாக்கியா அதிர்ச்சியாகி இருக்கிறார். அதோடு நீ உள்ளே வந்தால் பங்க்ஷன் நடக்காது நீ வெளியே போயிருமா என்று சொல்ல பாக்கியா எதுவும் சொல்லாமல் வெளியே போகப் போகிறார்.

அப்போது அமிர்தா ஓடி வந்து அம்மா எங்க போறீங்க உள்ள வாங்க என்று கூப்பிட போகிறார். ஆனால் எழில் அமிர்தாவை கையை பிடித்து தடுத்து விடுகிறார். அம்மா போகட்டும் விட்டுவிடு என்று சொல்லிவிடுகிறார். அந்த நேரத்தில் உள்ளிருந்து ஒரு நபர் வந்து உங்களை பங்க்ஷனில் கூப்பிட்டாங்க என்று கூப்பிடுகிறார். எழில் பங்க்ஷன் நடக்கும் இடத்திற்கு வருகிறார்.

baakiyalakshmi serial vijay tv

அப்போது புரொடியூசர் எல்லாரும் வந்தாச்சா? பங்ஷனை தொடங்கிடலாமா? என்று கேட்க, எல்லாரும் வந்தாச்சு என்று எழில் சொல்கிறார். அப்போது செழியன், ஜெனி, இனியா எல்லோரும் அம்மா இன்னும் வரலையே என்று சொல்லிக் கொண்டிருக்கின்றனர். அதற்கு எழில் அவங்க வர மாட்டாங்க என்று சொல்கிறார். ஆனாலும் செழியன், அமிர்தா என எல்லோரும் பாக்யாவுக்கு போன் செய்து கொண்டிருக்கின்றனர்.

பாக்யா போனை எடுக்கவில்லை. அழுது கொண்டே ஹோட்டலை விட்டு வெளியே போகிறார். அப்போது இதையெல்லாம் பார்த்து கோபி சந்தோஷப்படுகிறார். பிறகு பங்க்ஷன் தொடங்கப்படுகிறது. அப்போது திரைப்படத்திற்கான டைட்டில் சொல்லிவிடலாம் என்று ஒரு ஸ்கிரீனை இழுக்க அங்கு படத்தின் டைட்டில் தெரிகிறது. அதில் பாக்கியலட்சுமி என்ற படத்தின் பெயர் இருப்பதை பார்த்து கோபி அதிர்ச்சி ஆகிறார்.

baakiyalakshmi serial vijay tv

அதுபோல வாசலில் வந்த பாக்கியா அங்கு ஒட்டப்பட்டு இருக்கும் பேனரில் பாக்கியலட்சுமி என்று படத்திற்கு பெயர் வைக்கப்பட்டிருப்பதை பார்த்து அழுது கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் ஹோட்டலுக்குள் எழில் மைக்கில் பேசுகிறார். அப்போது என்னுடைய வெற்றிக்கு காரணம் என்னுடைய அம்மா தான். ஒவ்வொரு இடத்திலும் நான் சோர்ந்து போகும்போதெல்லாம் உன்னால் முடியும் என்று எனக்கு தன்னம்பிக்கை கொடுத்துக் கொண்டே இருந்தாங்க.

baakiyalakshmi serial vijay tv

நான் இந்த அளவிற்கு வளர்ந்து கொண்டிருக்கிறேன் என்றால் என்னுடைய அம்மா மட்டும்தான் அதற்குக் காரணம் என்று சொல்ல, இதை எல்லாம் பார்த்து கோபி கோபத்தில் இருக்கிறார். குடும்பத்தினர் எல்லோரும் எழில் பேசுவதை பார்த்து சந்தோஷப்படுகின்றனர். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+