பாக்கியலட்சுமி சீரியலில் எதிர்பார்க்காத சொதப்பல்.. இத்தனை வருடம் ஆகியும் இது நினைவு இல்லையா?
பாக்கியலட்சுமி சீரியலில் இன்று எபிசோட்டின் டப்பிங் சில குளறுபடிகள் நடந்திருக்கிறது.
சென்னை: விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியல் கடந்த மூன்று வருடங்களாகவே ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் டப்பிங்கில் செல்வியாக நடிக்கும் கம்பம் மீனா சில தவறுகளை செய்திருப்பதை ரசிகர்கள் கண்டுபிடித்து இருக்கின்றனர்.
ராதிகா என்கிற பெயருக்கு பதிலாக கம்பம் மீனா பேசிய வார்த்தையை தற்போது சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.

பெண்ணின் துணிச்சல்
விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் தற்போது விறுவிறுப்பான கதைகளத்தோடு ஒளிபரப்பாகி வருகிறது. தன்னை வேண்டாம் என்று ஆரம்பத்தில் இருந்தே ஒதுக்கி வந்த கணவர் தன்னை விட்டு விலகி சென்று தனக்கு பிடித்த காதலியை திருமணம் செய்து கொண்டு விட்டாலும், தன்னால் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும் என்று ஒவ்வொரு இடத்திலும் பாக்கியா நிரூபித்து வருகிறார். ஒரு நடுத்தர வர்க்கத்து குடும்ப பெண்ணின் கதையை மையமாகக் கொண்ட இந்த கதை தற்போது விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது.

எழில் அமிர்தாவின் திருமணம்
ஏற்கனவே சில வாரங்களாகவே பரபரப்போடு எழில் மற்றும் அமிர்தாவின் திருமணம் இருந்த நிலையில் கடைசியில் பாக்கியாவால் எழில் மற்றும் அமிர்தாவின் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. கடைசி வரைக்கும் எழில் யாரை திருமணம் செய்வார் என்று பெருத்த எதிர்பார்ப்போடு வைத்து முடிவில் பாக்கியாவின் முயற்சியால் எழிலுக்கு அவருக்கு மனதிற்கு பிடித்த அமிர்தாவே மனைவியாக மாறி இருக்கிறார். இந்த நிலையில் தொடர்ந்து அடுத்தடுத்ததாக பாக்யாவுக்கு பிரச்சனை வந்து கொண்டே தான் இருக்கிறது.

தொடரும் பிரச்சனைகள்
வீட்டில் ஒரு பக்கம் மாமியார் ஈஸ்வரி மல்லுக்கட்டி கொண்டிருக்கிறார். தனக்கு பிடிக்காத திருமணத்தை எழிலுக்கு செய்து வைத்து விட்டதால் அமிர்தாவை எப்போதும் கரித்துக் கொட்டிக் கொண்டு இருக்கும் ஈஸ்வரியையும் சமாளித்துக் கொண்டு கோபி தனக்கு இன்னும் 20 லட்சம் தந்தால் தான் இந்த வீட்டை என்னுடைய அம்மா அல்லது அப்பா பெயருக்கு எழுதி வைப்பேன். இல்லை என்றால் எல்லோரும் வீட்டை காலி செய்து கிளம்ப வேண்டியதுதான் என்று கூறிய நிலையில், அந்த சவாலிலும் நானே ஜெயிப்பேன் என்று கூறி தொடர்ந்து எட்டு நாட்கள் சமையல் செய்து அதில் 2 லட்சம் ரூபாயை முதல் தவணையாக கோபி இடம் தூக்கிக் கொடுத்திருக்கிறார்.

என்னது காவியாவா
இந்த நிலையில் அடுத்ததாக ஏற்கனவே ராதிகாவின் ஆபீஸில் கேட்டரிங் ஆர்டருக்காக முயற்சி செய்து பின்பு ராதிகாவின் சூழ்ச்சியால் அது பறிக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் அதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த நிலையில் பல போராட்டங்களுக்குப் பிறகு ராதிகா ஆபீஸில் பாக்யாவிற்க்கு கேட்டரிங் ஆர்டர் என்று பைனல் செய்யப்பட்டு நிலையில், தொடர்ந்து ராதிகா பல கொடைச்சல்களை கொடுத்து வருகிறார். பல பேர் முன்பு பாக்யாவை அவமானம் செய்தும் நோக்கில் பாக்யாவிடம் இங்கிலீஷில் கேள்வி கேட்டு அவமானம் செய்த ராதிகாவை எல்லாம் முடிந்து வீட்டிற்கு பைக்கில் சென்று கொண்டிருக்கும்போது கம்பம் மீனா அதாவது செல்வி, பாக்கியவிடம் திட்டிக்கொண்டே வருகிறார். அப்போது இந்த ராதிகாவுக்கு வேற வேலையே இல்லை என்று சொல்வதற்கு பதிலாக, இந்த காவியாவிற்கு வேலையே இல்லை என்று கூறுகிறார். இதை தற்போது ரசிகர்கள் அதிகமாக கலாய்த்து வருகிறார்கள். அதிலும் யார் அந்த காவியா ஈரமான ரோஜாவே காவியாவா? அங்கே தான் அவர் அழுது கொண்டே இருக்கிறார் என்றால் அவரை எங்கேயுமா இழுப்பீங்க என்று கேள்வி எழுப்புகின்றனர்.
-
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
குலதெய்வ கோவிலில் கணவருடன் மகிழ்ச்சியை பகிர்ந்த மணிமேகலை.. அடடா சூப்பர்! குவியும் வாழ்த்துக்கள் -
Super Singer : சூப்பர் சிங்கர் அருணாவிற்கு கல்யாணம்.. மகிழ்ச்சியோடு வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்து -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி












Click it and Unblock the Notifications