நீண்ட நாள் ஆசை நிறைவேறுது.. நடிகர் பாலாவின் நாலாவது கல்யாணமும், கோகிலாவின் காதலும்! ஹேப்பி குடும்பம்
சென்னை: 250 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கு அதிபரான நடிகர் பாலாவின் 4வது திருமணம்தான் சோஷியல் மீடியாவில் வைரலாகி கொண்டிருக்கிறது.. பாலா திருமணம் செய்துள்ள மணமகள் பற்றின தகவல் தற்போது வெளியாகி அதற்கு மேல் ஆச்சரியத்தை தந்து கொண்டிருக்கிறது.
பிரபல நடிகர் பாலா, தமிழில் வாய்ப்பு கிடைக்காத நிலையில், மலையாள படத்தில் அதிக கவனத்தை செலுத்தி வருகிறார். 41 வயதாகும் பாலா, ஏற்கனவே திருமணமானவர்.. 2010 முதல் 2019 வரை முதல் மனைவி பாடகி அம்ருதா சுரேஷுடன் மணவாழ்க்கையில் ஈடுபட்டு வந்தார். இவர்களுக்கு ஒரு மகளும் இருக்கிறார்.

2வதாக டாக்டர் எலிசபெத் என்பவருடன் லிவ்விங் இன் உறவு என்றார்கள், திருமணமே செய்துவிட்டார்கள் என்றார்கள்.. ஆனால், அது உறுதியாவதற்கு முன்பேயே எலிசபெத்தை பிரிந்தார் பாலா...
நடிகையுடன் கல்யாணம்: இதற்கு பிறகு பாலா ஒரு நடிகையை கல்யாணம் செய்யப்போகிறார் என்றார்கள்.. இப்படிப்பட்ட சூழலில்தான், தன்னுடைய திருமணத்தை அறிவித்துள்ளார் பாலா.. தான் திருமணம் செய்யப்போகும் பெண் பெயர் கோகிலா என்று கூறிய பாலா, திருமணத்தை முடித்துக் கொண்டு ஒரு பேட்டியும் தந்துள்ளார்.
அதில், "ஆபரேஷனுக்கு பிறகு எனக்கு ஒரு துணை தேவை என்ற உணர்வு தோன்றியது. அதனால்தான் திருமணம் செய்துகொண்டேன்.. கோகிலா என்னுடைய உறவுக்கார பெண். நாங்கள் இருவருமே மனதளவில் ஒத்துப்போய்விட்டோம்.. இது எங்களுடைய ஆரம்பம்தான்.. எங்களுக்கு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி.. " என்று மகிழ்ச்சியுடன் கூறியிருந்தார்.
உறவுக்கார பெண்: இந்நிலையில், உறவுப்பெண்ணான கோகிலா, பாலா மீது வைத்திருந்த காதல் பற்றின தகவல்கள் வெளியாகி வியப்பை கூட்டி வருகிறது.. தன்னுடைய சிறுவயதிலிருந்தே பாலாவை நேசித்து வந்துள்ளாராம் கோகிலா.. ஒரு கட்டத்தில் பாலாவின் மீதான தனது அன்பை யாருக்கும் தெரியாமல் தன்னுடைய டைரியிலேயே எழுதி பாதுகாத்து வந்தாராம்..

3வது மனைவி எலிசபெத்துடன் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் மன அமைதிக்காக பாலா சென்னையில் தங்கியிருந்தபோதுதான், கோகிலாவை பற்றியும், தன்மீது சிறுவயதில் இருந்தே அவர் கொண்டிருந்த காதல் பற்றியும் பாலாவுக்கு தெரியவந்ததாம்..
பூரித்த கோகிலா: அதுமட்டுமல்ல, கோகிலாவின் சிறுவயது காதல் அன்பு மட்டுமல்லாமல், வயதான தனது தாயின் ஆசைகளை நிறைவேற்றும் விதமாகவே, கோகிலாவை உடனடியாக திருமணம் செய்து கொள்ள நேரிட்டதாகவும் பாலா கூறுகிறார்.. அந்தவகையில், சிறு வயது காதல் பாலாவுடன் முதல் திருமணத்தில் கைகூடாவிட்டாலும் அவரது நான்காவது திருமணத்திலாவது ஒன்று சேர முடிந்ததே என்கிற சந்தோஷத்தில் இருக்கிறாராம் புது மனைவி கோகிலா. தம்பதியின் திருமண போட்டோக்கள்தான் இணையத்தில் கலக்கி கொண்டிருக்கின்றன.
முன்னதாக நடிகர் பாலாவின் முன்னாள் மனைவி அம்ருதா மற்றும் தனது மகளை தொடர்ந்து துன்புறுத்தி வருவதாக புகாரளித்தார். இதனைத் தொடர்ந்து காவல் துறை அவரை கைது செய்திருந்தது.. பிறகு ஜாமீனில் வெளியே வந்து செய்தியாளர்களைச் சந்தித்த பாலா, மூன்றாவது முறையாக சட்ட ரீதியாக திருமணம் செய்து குடும்பத்துடன் வாழ விரும்புகிறேன். தனது ரூ.250 கோடி சொத்துக்கு நான் சொல்பவரே வாரிசு என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், தனது முறைப்பெண் கோகிலாவை திருமணம் செய்துகொண்டுள்ளார் பாலா
இந்த திருமணம் குறித்து பாலா சொல்லும்போது,"கோகிலாவின் கனவை இந்த திருமணம் நிறைவேற்றும். கோகிலாவுக்கு மலையாளம் தெரியாது. இருந்தாலும், கடந்த ஒரு வருடமாக என்னுடைய உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதில் அவர் எனக்குப் பெரும் ஆதரவாக இருந்தார். இந்த திருமண வாழ்க்கை நன்றாகச் செல்லும் என்று நம்புகிறேன். கோகிலா எனது உறவினர் என்பதால் எனக்கு இதில் நம்பிக்கை இருக்கிறது" என்று கூறினார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications