Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நடிகை லட்சுமி பற்றி பகீர் கிளப்பிய பயில்வான்.. என்ன இப்படி சொல்லிவிட்டார்? இதை கவனிச்சீங்களா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சினிமா விமர்சகராகவும் நடிகராகவும் இருக்கும் பயில்வான் ரங்கநாதன் தொடர்ச்சியாக நடிகைகள் பற்றி விமர்சித்து பேசி வருகிறார்.

அந்த வகையில் நடிகை லட்சுமி குறித்து அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள் பற்றியும் பயில்வான் ரங்கநாதன் பேட்டியில் பேசியிருக்கிறார்.

Bhilwan Ranganathan talked about Actress Lakshmi having three legal husbands

அந்த வகையில் நடிகை லட்சுமிக்கு சட்டப்படி மூன்று கணவர்கள் என்றும் அதோடு மேலும் சில நடிகர்கள் பற்றியும் அந்த வீடியோவில் பேசியிருக்கிறார்.

நடிகர் பயில்வான் ரங்கநாதன் சினிமா விமர்சனராகவும், பிக் பாஸ் நிகழ்ச்சியை விமர்சனம் செய்பவராகவும் இருந்து வந்த நிலையில் இப்போது பல நடிகர் நடிகைகள் பற்றியும் அந்தரங்க விஷயங்களையும் பேட்டிகளில் அவ்வப்போது பேசிக் கொண்டிருக்கிறார். இது குறித்து அவர் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டிருந்தாலும் தொடர்ச்சியாக தன்னுடைய அதே வேலையை செய்து கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகை லட்சுமி, மோகன் என்பவரை பிரிவதற்கு முன்பு லட்சுமிக்கு திருமணம் ஆகி இருந்தது. பாஸ்கர் என்கிற சேலத்துகாரரை தான் லட்சுமி முதலில் திருமணம் செய்தார். லட்சுமி அந்த நேரத்தில் உச்சபட்ச நடிகையாக இருந்த போது பாஸ்கர் அவரை திருமணம் செய்து இருந்தார்.

அப்படி இருக்கையில் பாஸ்கருக்கும் லட்சுமிக்கும் பிறந்தது தான் ஐஸ்வர்யா. ஆனால் இருவரும் பிரிந்து விட்டார்கள். அதற்குப் பிறகு பாஸ்கர் சேலத்தில் இறந்து விட்டார். அதற்கு பிறகு தான் லட்சுமி, மோகனை திருமணம் செய்து கொண்டார். மோகனுக்கு அப்புறம் சிவசந்திரன் என்பவரையும் திருமணம் செய்து கொண்டார். சட்டப்படி லட்சுமிக்கு மூன்று கணவர்கள். இதில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி உடன் இல்லை. அவர் தீநகரில் உள்ள அவருடைய அப்பா பாஸ்கரின் சொந்த வீடு ஒன்று இருக்கிறது. அங்கு தான் தன்னுடைய மகளோடு இருக்கிறார் என்றும் பயில்வான் ரங்கநாதன் பேசியிருக்கிறார்.

அத்தோட அந்த வீடியோவில் நடிகர் பிரசாந்த் பற்றியும் பேசி இருக்கிறார். அதில் பிரசாந்த் கிரகலட்சுமியை திருமணம் செய்தார். ஆனால் அவருடைய திருமணத்திற்கு பிறகு தான் ஏற்கனவே கிரகலட்சுமிக்கு விவாகரத்து ஆக்கியிருக்கிறது என்பது பிரசாந்துக்கு தெரிய வந்தது. பல ஆண்டுகளுக்குப் பிறகு கிரகலட்சுமிக்கும் பிரசாந்துக்கும் விவாகரத்து ஆகிவிட்டது. அதற்கு பிறகு பிரசாந்த் ஐ அம் சிங்கிள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால் கிரகலட்சுமி கல்யாணம் பண்ணாங்களான்னு எனக்கு தெரியாது என்றும் பேசி இருக்கிறார்.

இப்படியாக பயில்வான் ரங்கநாதன் பேசியிருக்கும் வீடியோ கிளிப்சுகள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் பயில்வான் ரங்கநாதனுக்கு இதே வேலையாக போச்சு என்று பலர் அவரை திட்டிக் கொண்டிருக்கின்றனர். அதே நேரத்தில் இது என்ன வெளியே தெரியாத ரகசியமா? அது அவர்களுடைய பர்சனல் வாழ்க்கை அது உங்களுக்கு எங்கே பாதித்தது என்றும் சிலர் கமெண்ட் கொடுத்து வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+