விதவிதமாய் போஸ் கொடுத்து வில்லங்கமாய் போட்டோ வெளியிட்ட பிக்பாஸ் பிரபலங்கள்..காரணம் இதுதானா??
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் விட்டு வெளியே வந்த பிரபலங்கள் எடுத்த போட்டோ ஷூட் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
ஐந்து பேரும் ஐந்து விதமாக போஸ் கொடுத்திருக்கும் விதத்தைப் பார்த்து நெட்டிசன்கள் பலவிதமாக கலாய்த்து வருகிறார்கள்.
ஓடி ஓளியும் ராஜேந்திர பாலாஜி... விடாது விரட்டும் தனிப்படை.. எங்கே இருக்கிறார்? வெளியான புது தகவல்
திடீர் மீட்டிங்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் ஐந்தாவது சீசனில் அறிமுகமான பல போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறி விட்டனர். இந்த நிகழ்ச்சி முடிவடைவதற்கு இன்னும் ஒரு சில நாட்களே இருக்கும் நிலையில் வெளியே வந்த போட்டியாளர்கள் தங்களது முகத்தை ரசிகர்கள் மறந்து விடக்கூடாது என்பதற்காக அடிக்கடி சமூகவலைத்தளத்தில் போட்டோக்களை வெளியிட்டு வருகின்றனர். இதில் ஒரு சிலர் வெளியே வந்த பிறகு திடீர் மீட்டிங் போட்டு பலருக்கும் அதிர்ச்சி கொடுத்து இருக்கின்றனர்.
எப்போதும் பிரியாத நட்பு
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் இருக்கும் போதுதான் இவர்கள் ஒரு அணியாக இருந்து கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தால் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகும் நாங்கள் அப்படித்தான் என்று நிரூபிக்கும் விதமாக தற்போது 5 போட்டியாளர்கள் செய்திருக்கும் செயல் வைரலாக பரவி வருகிறது. ஐக்கி பெர்ரி ஒரு மருத்துவராக இருந்தாலும், எவ்வளவு பிஸியாக இருந்தாலும் நண்பர்களை பார்ப்பதில் நான் சளைக்க மாட்டேன் என்று தற்போது நிரூபித்துள்ளார்.
திடீர் சந்திப்பு
பிக்பாஸ் நிகழ்ச்சி முடியப் போகும் தருணத்தில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வெளிநாடுகளிலிருந்து வந்த போட்டியாளர்கள் மீண்டும் ஒன்றாக செய்வதற்காக சென்னை வந்துள்ளனர். இதில் அபிஷேக் மற்றும் அவருடைய நான்கு பெண் தோழிகள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து மீட் பண்ணி இருக்கின்றனர். அப்போது இவர்கள் விதவிதமான போட்டோக்களை எடுத்து குவித்துள்ளார்கள். அந்த போட்டோக்களை ஐக்கி பெர்ரி தன்னுடைய இன்ஸ்டாகிராமில் தட்டி விட்டிருக்கிறார்.
Recommended Video
செம போஸ் தான்
நடுவில் அபிஷேக் கன்னத்தில் கை வைத்தபடி குத்தவைத்து அமர்ந்திருக்க, அவர் அருகில் ஒரு பக்கம் நாடியா சாங்க், இன்னொரு பக்கம் ஐக்கி பெர்ரி ஸ்டைலாக அமர்ந்திருக்க, அவர்களை அடுத்து மதுமிதா ஒரு பக்கமும், சுருதி ஒரு பக்கமும் மாடலிங் போஸ் கொடுத்து நின்று கொண்டிருக்கின்றனர். இவர்களை பார்த்ததும் ரசிகர்களுக்கு இதில் யாரைப் பார்ப்பது எதை விடுவது என்று தெரியவில்லையாம். ஆனாலும் ஒரு சில நெட்டிசன்கள் அபிஷேக்கிடம் கவனமாக இருக்கவேண்டும் அட்வைஸ் செய்து காதை அறுத்துவிடுவார் என்று அறிவுரை கூறி வருகின்றனர்.