“ஆமா.. பழிக்குப் பழி தான் வாங்குறேன்”.. பப்ளிக்காக உண்மையை ஒப்புக் கொண்ட ’கொழந்தப்புள்ள’!
ஜனனியை பழிக்குப் பழி வாங்குவதாக ஐஸ்வர்யா கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: பிக் பாஸ் வீட்டின் இந்த வார தலைவியாக உள்ள ஐஸ்வர்யா தத்தா, ஏறக்குறைய சர்வாதிகாரியாக நடந்து வருகிறார்.
கடந்த வார இறுதியில் நடத்தப்பட்ட போட்டியின் மூலம் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டின் தலைவியாகியுள்ளார் ஐஸ்வர்யா தத்தா. அதன் தொடர்ச்சியாக வீட்டில் உள்ள போட்டியாளர்களை சமையலுக்கு, பாத்திரம் கழுவ மற்றும் கழிப்பறை தூய்மைப் படுத்த என மூன்று குழுக்களை அவர் பிரித்தார்.
இதில் மும்தாஜுக்கும் அவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

டாஸ்க் இல்லை:
அதனைத் தொடர்ந்து டாஸ்க்குகள் ஏதும் இல்லாததால், அனைவரும் அமர்ந்து முந்தைய வாரங்களில் நடந்த சம்பவங்கள் குறித்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது புறணி பேசுபவர்கள் குறித்து மாறிய பேச்சு, பின்னர் வாக்குவாதம் ஆனது.

பகலில் உறக்கம்:
ஐஸ்வர்யாவும், பாலாஜியும் இது குறித்து காரசாரமாகப் பேசினர். பின்னர் பிக் பாஸ் வீட்டில் ஜனனி, சாரிக் மற்றும் யாஷிகா ஆகியோர் உடல் நலக் குறைவாக இருப்பதாகவும், அதனால் அவர்கள் பகலில் சிறிது நேரம் உறங்குவது குறித்தும் பேச்சு திரும்பியது.

யாஷிகா விவகாரம்:
ஆனால், அதற்கு அனுமதி இல்லை என தலைவி ஐஸ்வர்யா வாதம் செய்தார். அதோடு ஜனனி முதல் வாரம் தலைவியாக இருந்தபோது, உடல்நலமில்லாமல் இருந்த யாஷிகாவிற்கு இரக்கம் காட்டவில்லை என்றும் வாதிட்டார்.

ஜனனி விளக்கம்:
ஆனால், அப்போது வீட்டிற்கு அனைவரும் புதியவர்கள் என்பதால் தனக்கு விதிமுறைகள் சரிவரத் தெரியவில்லை என தன் பக்க நியாயத்தை எடுத்துரைத்தார் ஜனனி. ஆனாலும் தன் பிடியில் இருந்து இறங்கி வர ஐஸ்வர்யா மறுத்தார்.

ஒப்புக் கொண்ட ஐஸ்:
இதனால், ‘அப்போது நடந்ததற்கு இப்போது பழிக்குப் பழி வாங்குகிறாயா?' என பாலாஜி கேள்வி எழுப்பினார். அதற்கு ஐஸ்வர்யா, ‘ஆமாம் பழி தான் வாங்குகிறேன்' என குழந்தைத்தனமாக ஒப்புக் கொண்டார். பின்னர் ஒரு வழியாக உடல்நலக் குறைவானவர்கள் சிறிது நேரம் ஓய்வெடுக்கட்டும், நாய் குரைத்தால் பிறகு எழுப்பி விடலாம் என அனைவரும் ஒருமனதாக ஒப்புக் கொண்டனர்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications