பிக் பாஸ் 2 : சினேகன் ‘இப்டி’ பண்ணுவார்னு கமலே எதிர்பார்த்திருக்க மாட்டாரு!
பிக் பாஸ் வகுப்பறையில் சினேகனின் செயல் பார்வையாளர்களிடையே அதிருப்தியை உண்டாக்கியுள்ளது.
சென்னை: பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு தமிழ் ஆசிரியராக வந்த சினேகன், வகுப்பில் ஆண்களும், பெண்களும் சேர்ந்து அமரக் கூடாது எனக் கூறியது பார்வையாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பிக் பாஸ் வீட்டில் இந்த வார லக்ஸரி பட்ஜெட்டிற்காக 'கனா காணும் காலங்கள்' என்ற டாஸ்க் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக மாணவர்களாக மாறினர் போட்டியாளர்கள்.
ஏற்கனவே, மாணவர்கள் என்ற போர்வையில் போட்டியாளர்கள் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் போன்று நடந்து, பார்வையாளர்களை கடுப்பேத்தினர். இது போதாதென்று கவிஞர் சினேகனும் தமிழாசிரியராக பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தார்.

ஆரம்பமே அட்வைஸ்:
"பிள்ளைங்களா.. நல்லா படிக்கணும்.. என்ன..! என்கிற உபதேசத்தோடு வகுப்பில் நுழைந்த சினேகன், அடுத்ததாக செய்தது தான் அதிர்ச்சி ரகம். வகுப்பறையில் கலந்து அமர்ந்திருந்த ஆண்களையும், பெண்களையும் பாலின அடிப்படையில் தனித்தனியாக அமர வைத்தார்.

விழிப்புணர்வு:
பல பள்ளிகளிலேயே இது போல் தற்போது அமர வைப்பதில்லை. சிறு வயது முதலே பாலின சமத்துவத்தை நோக்கிய விழிப்புணர்வு குழந்தைகளுக்கு இருக்க வேண்டும் என்ற காரணத்தினாலேயே இவ்வாறு செய்யப்படுகிறது. ஆனால், அதனை ஊக்குவிக்க வேண்டிய ஊடகத்தில் இப்படி சினேகன் நடந்து கொண்டது ரசிக்கும்படி இல்லை.

கமல்:
நம்மவர் படத்தில் கமல் கல்லூரியிலேயே இத்தகைய புரட்சி வேண்டும் என வாதாடுவார். ஆனால், அவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் சினேகனின் இந்த செயல் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. இந்தவாரம் இது குறித்து கமல், சினேகன் தலையில் குட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

லூட்டி:
அதோடு பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியை சினேகன் டிவியில் பார்க்கிறாரா இல்லையா எனத் தெரியவில்லை. அப்படிப் பார்த்திருந்தால், மஹத் அண்ட் கோ அடிக்கிற லூட்டி பற்றி தெரிந்திருக்கும். அதோடு ஒப்பிடுகையில் வகுப்பறையில் அருகருமே அமர்வது பெரிய விசயமில்லை என்பது அவருக்குப் புரிந்திருக்கும்.












Click it and Unblock the Notifications