Bigg boss 3 tamil: என்னால உன் கூட கதைக்காம இருக்க இயலாது கவின்..ஜெயிலில் லாஸ்
சென்னை: விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு இன்று நம்மவர் உலக நாயகன் கமல்ஹாசன் வரப்போகிறார். இதற்காக ஒரு வாரமா பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸ் மட்டுமில்லை. பார்க்கும் மக்களும் காத்திருக்கார்கள்.
உலக நாயகன் வருவதுதான் நிகழ்ச்சியில் ஹைலைட். அவர் வந்து பேசுவது நாசூக்காக தவறை சுட்டிக் காட்டுவது என்று வாரத்தின் சனி ஞாயிறுகள் ரொம்பவே ஜாலியாய் போகும்.
இன்று இரவு உலக நாயகன் வந்து யார் கதையை எடுத்து கடை விரிக்கப் போகிறாரோ தெரியவில்லை. இன்னும் ஓயாத அந்த முக்கோண காதல் பற்றி கமல் பேசினால் நன்றாக இருக்கும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.
செய்யவில்லை என்று
டாஸ்க் நன்றாக செய்யவில்லை என்று லாஸ்லியாவையும் ஷெரீனையும் ஜெயிலில் போட்டுடறாங்க. லாஸ்லியா ஜெயிலுக்குக்குப் போகிறார் என்றதும் கவின் கண்கள் கலங்குது. உயிருக்கு உயிரான தோழியாச்சே! உடனே ரெண்டு பேரும் கதைச்சுக்கறாங்க.கை குடுத்துக்கறாங்க., இதை பார்த்து சித்தப்புவும், சாண்டியும் பேசாதேன்னு சொன்னா பேசறான் பாருன்னு பேசிக்கறாங்க.
ஜெயிலுக்கு போறாளாம்
பேசாதேன்னு சொன்னா பேசறேன்னு கேட்டதுக்கு ஜெயிலுக்கு போறாளாம். அதனால், ஆறுதல் சொன்னேன்னு சொல்றான்னு சித்தப்பு சரவணன் சொல்றார். இந்த பக்கம் உட்கார்ந்துகிட்டு லாஸ்லியாவுடன் கதைச்சுக் கொண்டு இருக்கார் கவின். கவினைப் பார்த்து அழறாங்க லாஸ்.அப்போ சொல்றாங்க, என்னால் உன் கூட கதைக்காம இருக்க இயலாது கவின்னு.
உனக்கும் எனக்கும்
இப்படியே ரெண்டு பேரும் நல்ல படியா இருந்துட்டு போயிடுவோம் மச்சான்.ரொம்ப எமோஷனல் ஆகாதேன்னு கவின் சொல்ல லாஸ் அழறாங்க. அதுதான் அவன்கிட்ட பேசிகிட்டு இருக்கியே... எதுக்கு அழணும்? டாஸ்க்கை செய்ய வந்த பிக் பாஸ் வீட்டில் நீ உன் பாட்டுக்கு எனக்கென்னன்னு இருக்கே...அதுக்கு உனக்கு எதுக்கு வீண் சம்பளம்?
இலங்கை பெண்
அது சரி இலங்கையிலிருந்து வந்திருக்கே.. சாதிக்கணும்னு ஒரு எண்ணமில்லை. ஒரு நாள் அப்பா அம்மாவை மிஸ் பண்றேன்னு காமிராவைப் பார்த்து சொன்னதில்லை. எப்போதும் என்னை மாதிரி எங்க ஊர் அழகா இருக்கும், என்னை மாதிரி என் அக்கா ரொம்ப அழகா இருக்கும்னு பேசியே கொல்றியேம்மா... நீஅழகா இல்லையான்னு நாங்க சொல்ல வேணாமா?