பிக் பாஸ் 3:சுற்றி வளைத்த போலீஸ்.. நெருக்கடியில் மீரா, வனிதா.. வெளியேறும் 3 போட்டியாளர்கள்?
பிக் பாஸ் வீட்டில் இருந்து அடுத்தடுத்து மூன்று போட்டியாளர்கள் வெளியேறலாம் எனக் கூறப்படுகிறது.
Recommended Video
சென்னை: பிக் பாஸ் வீட்டில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. அடுத்தடுத்து மூன்று போட்டியாளர்கள் வெளியேறும் சூழல் அங்கு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் சிசன் 3 கடந்த வாரம் தொடங்கியது. முதல் வாரம் அனைத்து போட்டியாளர்களும் ஒற்றுமையாக, அன்பாகவே இருந்தனர். மீரா மிதுனின் வருகையால் அவர்களுக்குள் சலசலப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், மதுமிதா கூறிய தமிழ்ப் பொண்ணு பிரச்சினையால் பலரது எதிர்ப்புகளை அவர் சம்பாதித்துள்ளார். இந்த வார நாமினேசன் லிஸ்டிலும் அவரது பெயர் இடம் பெற்றுள்ளது.

குத்திக் காட்டிய வனிதா:
இதனால் பிக் பாஸ் வீட்டில் அவர் தனிமைப் படுத்தப் பட்டுள்ளார். அவரைப் பற்றி நேற்றைய எபிசோட்டில் வனிதா விஜயகுமாரும் காட்டமாகப் பேசினார். ‘அவர் தாலியைக் கழட்டி வைத்து விட்டு வந்திருப்பதாகவும், கலாச்சாரத்தைப் பற்றி பேசத் தகுதி இல்லை' என்றும் குத்திக் காட்டிப் பேசினார். இதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளான மதுமிதா, அடிக்கடி தனியாக பேசி வருகிறார்.

மது புலம்பல்:
‘வீட்டில் பிரச்சினை இருந்தா பரவாயில்ல, வீடே பிரச்சினையா இருந்தா எப்படி?' என அவர் புலம்பி வருகிறார். இதேபோல், நெருக்கடிகள் அதிகரித்தால் அவர் வீட்டை விட்டு வெளியேறும் முடிவில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. வீட்டில் உள்ள மற்ற போட்டியாளர்களும் இந்தப் பிரச்சினையை விடுவதாயில்லை. ஊதி ஊதி பெரிதாக்கி தான் வருகின்றனர்.

மீரா:
இது ஒருபுறம் இருக்க, ஏற்கனவே வெளியில் பிரச்சினைகளோடு பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தவர்கள் தான் வனிதாவும், மீராவும். அழகிப் போட்டி நடத்தி மோசடி செய்ததாக மீரா மீது போலீசில் புகார் உள்ளது. தற்போது அவருக்கு சம்மனும் அளிக்கப்பட்டுள்ளது. 19ம் தேதி அவர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் மீரா வீட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

எதிர்பார்ப்பு:
இதேபோல், தன்னுடைய மகளைக் கடத்தி சென்று விட்டதாக வனிதாவின் இரண்டாவது கணவரும் போலீசில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில், வனிதாவைக் கைது செய்ய நேற்று உதவியை நாடி இருக்கிறது ஆந்திர போலீஸ். இதனால் எந்நேரமும் பிக் பாஸ் வீட்டில் வைத்து வனிதா கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஓவியா, பரணி:
ஓவியா, பரணி:
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications