பிரதீப் மேல எனக்கு கோபம் இருக்கு.. ஆனால்! “இவங்க” தான்.. மொத்த பிக் பாஸ் ரகசியத்தையும் உளறிய மணி
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்ததை தொடர்ந்து இந்த சீசனில் ரன்னராக தேர்வான மணி இன்று முதல்முறையாக பேட்டி கொடுத்திருக்கிறார். அதில் பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்கள். அதோடு பிரதீப்புக்கு தான் எதற்காக ரெட் கார்டு கொடுத்தேன் என்றும் பிரதீப் மீது தனக்கு இப்போதும் கோபம் இருக்கிறது என்றும் மணி கூறி இருக்கிறார்.
அதுபோல பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த மற்ற சில போட்டியாளர்கள் குறித்தும் மணி சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்

அந்த வகையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு மணி முதல் முறையாக இன்று பல youtube சேனல்களில் பேட்டி கொடுத்திருக்கிறார். அதில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது தான் எதற்காக பிரதீப்புக்கு ரெட் கார்ட் கொடுத்தேன் என்பது பற்றி பேசி இருக்கிறார். அப்போது பிரதீப்புக்கும் எனக்கும் பிக் பாஸ் வீட்டிற்குள் நல்ல பாண்டிங் இருந்துச்சு.
பிரதீப் என்னிடம் எப்போதுமே சொல்லுவான். நீ ரொம்ப ஜாலி டைப் நா உன்னை எல்லாம் காலி பண்ண மாட்டேன் என்று சொல்லுவான். அதனால எனக்கு பிரதீப் ரொம்ப பிடிக்கும். பிக்பாஸ் வீட்டுக்குள்ள என்னை பொறுத்த வரையில் ரொம்ப ஸ்ட்ராங்கான பிளேயர் என்றால் அது பிரதீப் தான். ஆனால் சில இடங்களில் பிரதீப் செய்வது எனக்கு பிடிக்கவில்லை. பிரதீப் மீது எனக்கு கோபம் இருக்க தான் செய்கிறது.
பல இடங்களில் நான் பிரதீப்புக்கு அட்வைஸ் கொடுத்திருக்கிறேன். நீ இந்த மாதிரி பேசாத, இப்படி செய்யாதே என்று பிரதீப்க்கு ரெட் கார்டு கொடுத்த அன்று கூட காலையில் நான் பிரதீப் பாத்ரூம் போகும்போது லாக் பண்ணாமல் போன விஷயத்தைப் பற்றி சொன்னேன். அப்போதும் அவன் அலட்சியமாகத்தான் பேசியிருந்தான். அதுபோல கமல் சார் முன்பு கூட எல்லோரும் செங்கொடி தூக்கிய போது நான் பிரதீப்புக்கு எதிராக தூக்கவில்லை.
பிறகு எல்லோரும் தங்களுடைய கருத்தை சொல்லிக் கொண்டிருக்கும்போது உண்மையில் அப்படி எதுவும் நடந்திருக்கும் என்று நினைத்தேன். ஏன்னா என் கண்ணு முன்னாடியே பிரதீப் இந்த மாதிரி எல்லாம் பண்றானே, அப்போ அந்த பெண்களிடமும் இப்படி பண்ணி இருப்பானு நான் நினைச்சிருந்தேன். ஆனா அவங்க சொல்லி எல்லாம் நான் பிரதீப்புக்கு எதிராக ரெட் கார்ட் கொடுக்கல.
பிக்பாஸ் வீட்டு பாத்ரூமில் தாழ்ப்பாள் இல்லைன்னு இப்போ பிரதீப் போஸ்ட் போட்டு இருந்தான். ஆனா உள்ளே தாழ்ப்பாள் இல்லாட்டாலும் ஒரு லாக் இருந்தது. அதை பண்ணி இருக்கலாம்ல, இல்லனா கதவை சாத்தி கூட வச்சிருக்கலாம். அதை நான் பண்ணவே மாட்டேன் என்று சொன்னது தான் எனக்கு புடிக்கல. அது போல பிரதீப் காலி பண்ணனும் என்கிறதுக்காக சிலர் அவன் மீது தவறா குற்றச்சாட்டு வச்சிருக்காங்கறது எனக்கு வெளிய வந்த பிறகுதான் தெரிஞ்சது என்று மணி விளக்கம் கொடுத்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications