இனி எனக்கு இது தேவையில்லை.. பாதியிலே விட்டுக் கொடுத்து வெளியேறிய அசீம்.. வேஸ்டா போச்சி!
சென்னை; பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் 85 ஆவது நாளில் இந்த வார போட்டிக்கான தலைவர் போட்டி நடைபெறுகிறது.
இந்த வாரம் தலைவர் போட்டிக்காக ஏடிகே மற்றும் அசீம் இருவரும் போட்டியிடுகின்றனர்.
தன்னுடைய கோபத்தை வைத்து டார்கெட் செய்த ஏடிகேவிற்கு இந்த வார தலைவர் பதவியை கடைசியில் அசீம் விட்டுக் கொடுத்திருக்கிறார்.

அசீமின் புதிய உறுதிமொழி
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது பன்னிரண்டாவது வாரத்தில் அடி எடுத்து வைத்திருக்கும் நிலையில் இந்த வாரத்தில் தலைவர் பதவிக்கான போட்டி தொடங்கி இருக்கிறது. இந்த வாரம் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்கு கடந்த வாரம் பெர்பார்மன்ஸ் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அசீம் மற்றும் ஏடிகே இருவரும் கலந்து கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே அசீம் இந்த வாரத்தில் இனி தன்னுடைய கோபத்தை குறைத்துக் கொள்வேன் என்று நேற்றைய எபிசோடில் கமல் முன்னிலையில் இந்த வருடத்திற்கான புதிய உறுதிமொழி எடுத்திருந்தார். அதன் அடிப்படையில் இன்று தன்னுடைய விளையாட்டை தொடங்கி இருக்கிறார்.

இந்த வார தலைவர்
21 போட்டியாளர்கள் அறிமுகமான நிலையில் இப்போது எட்டு போட்டியாளர்கள் மட்டுமே இருக்கின்றனர். எந்த நிலையில் இந்த வாரத்தின் தலைவராக ஏ டி கே பொறுப்பு ஏற்று இருக்கிறார். இந்த வாரத்தில் தலைவர் பதவிக்காக யாருக்கு தகுதி இருக்கிறது என்பது இந்த வாரம் ஏடிகே மற்றும் அசீம் இருவரும் காரசாரமாக ஒருவரை மாற்றி ஒருவர் கருத்து கூறிக் கொண்டிருக்கின்றனர். இதில் யாருக்கும் யாரும் சளைத்தவர்கள் அல்ல என்று ஆரம்பத்தில் இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

கோபக்காரன் என்கிற முத்திரை
பின்பு ஏடிகே உங்களை விட எனக்கு அதிகமாக ஃபேஷன்ஸ் அதிகம் என்று நினைக்கிறேன். உங்களை விட எனக்கு கோபம் குறைவு என்று நான் நினைக்கிறேன் என பேசுகிறார். அதற்கு அசீம் கேப்டன் ஆகுறதுக்காக தான் நான் கோபப்படுகிறேன். ஏடிகே நீங்க பேசுறது எனக்கு கோபக்காரன் என்கிற முத்திரை குத்துறது போல இருக்குது. கோவக்காரன் என்கிற பெயர் வாங்கினாலும் எனக்கு பரவாயில்லை. நல்லது தான். அதனால் நீங்கள் இந்த வார கேப்டன் என்று ஏடிகேவுக்கு அசீம் கை கொடுக்கிறார். இதை பார்த்து உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் குழப்பம் அடைய ரச்சிதா அதிர்ச்சியாகிறார்.

இதை நம்ப முடியலையே
அசீம் இப்படி மாறியது ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியாக இருக்கிறது. டாஸ்க் நேரத்தில் தான் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக அசீம் கத்தி கூட்பாடு போடுவார் அல்லது ஏடிகே மீது பல்வேறு குற்ற சாட்டுகளை சுமத்துவார் என்று எதிர்பார்த்தவர்களுக்கு கடைசியில் ஏமாற்றம்தான் மிஞ்சியது. ஏடிகேயும் டாஸ்க் நேரத்தில் பலமுறை கோபப்பட்டு இருந்தாலும் தற்போதைய தலைவர் பதவிக்கான டாஸ்க்கின் அமைதியாகவே பேசிக் கொண்டிருக்கிறார். இதை பார்த்து நெட்டிசன்கள் பலரும் நேற்று கமல் கொடுத்த அட்வைஸ் இன்று எப்படி மாறிவிட்டதே என்று ஆச்சரியம் பட்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications