ஆபாசம்.. பிக் பாஸ் செரினாக்கு தொல்லை கொடுத்த டிரைவர்.. வாட்ஸ் அப்பில் வந்த வீடியோ! அதிர்ச்சி சம்பவம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த செரினா சமீபத்தில் காவல் நிலையத்தில் தன்னுடைய முன்னாள் கார் ஓட்டுநர் மீது புகார் அளித்துள்ளார். அதில் சில திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்திருக்கிறது.

தன்னுடைய வீட்டில் டிரைவராக வேலை பார்த்த ரவுடியின் தம்பியை தான் வேலையை விட்டு தூக்கியதால் தனக்கு கொடுத்த தொந்தரவுகள் மற்றும் மிரட்டல்கள் பற்றி செரினா கம்ப்ளைன்ட் கொடுத்ததால் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

bigg boss tamil season 6 sherina complaint over car driver

அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர்தான் செரினா இவர் கேரளாவை சார்ந்தவர். ஆனால் பெங்களூரில் தான் பிறந்து வளர்ந்து இருக்கிறார். இவர் மாடலாகவும் நடிகையாகவும் மட்டுமல்லாமல் சாய் ராம் மோட்டார்ஸ் என்ற ஒரு நிறுவனத்தையும் பெங்களூரில் நடத்தி வருகிறார். மேலும் UVI என்ற ஸ்டூடியோ ஒன்றையும் நடத்தி வருகிறார்.

அதுபோல செரினா பல அழகி போட்டிகளிலும் கலந்து கொண்டு பட்டம் பெற்று இருக்கிறார். குறிப்பாக Grazia Ford super of Indian wor என்ற பட்டத்தை வெற்றி பெற்று இருக்கிறார். இதைப்பற்றி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெருமையாக செரினா பேசி இருந்தார். ஆனால் தான் ஒரு நடிகை என்பதும் ஏற்கனவே சமுத்திரக்கனி இயக்கிய சமுத்திரக்கனி மற்றும் தம்பி ராமையா நடிப்பில் வெளியாகி இருந்த வினோத சித்தம் என்ற திரைப்படத்தில் நடிகர் தீபக்கு மனைவியாக செரினா நடித்திருந்தார் என்பதை சொல்லவில்லை.

ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அதிகமாக செரினா தமிழில் பேசாமல் ஆங்கிலம் மற்றும் மலையாளத்தில் பேசிக் கொண்டிருந்தார் என்று ரசிகர்கள் மட்டுமல்லாமல் மேடையிலேயே கமலும் இவரை வார்னிங் செய்திருந்தார். அதோடு இவருடைய எலிமினேஷன் கார்டில் இவருடைய பெயர் கூட மலையாளத்தில் இருந்தது. இப்படியாக அந்த நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு செரினா சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கிறார்.

இந்த நிலையில் தான் செரினாவுக்கு வாட்ஸ் அப் மூலமாக ஆபாசமாக மிரட்டல் விடுத்ததாக அவருடைய முன்னாள் கார் டிரைவர் கார்த்திக் உட்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்து இருக்கின்றனர். கடந்த மாதம் 20ஆம் தேதி சென்னை அண்ணா சாலை காவல் நிலையத்தில் செரினா புகார் ஒன்றை கொடுத்திருந்தார். அதில் தன்னிடம் டிரைவராக வேலை பார்த்து வந்த கார்த்திக்கும் அவருடைய நண்பர்களும் போன் மூலம் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்கள் என்று கூறியிருந்தாராம்

அதோடு பாலியல் தொல்லைகளும் தந்து சில்மிஷத்தில் ஈடுபட முயன்றதாகவும் அந்த புகாரில் தெரிவித்து இருந்தாராம். அந்த புகாரின் அடிப்படையில் நடத்திய விசாரணை நடத்திய போலீசார் கார்த்திக் மற்றும் அவருடைய நண்பர்களை மயிலாடுதுறையில் வைத்து கைது செய்துள்ளனர். அதாவது மயிலாடுதுறையை சார்ந்த கார்த்திக் ரவுடி ஒருவரின் தம்பி என்று செரினாவிற்கு தெரிய வந்ததால் அவரை டிரைவர் வேலையில் இருந்து செரினா நீக்கியதாகவும் இதனால் கார்த்திக்கும் அவருடைய நண்பரும் செரினாவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் போலீசார் தெரிவித்து இருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+