பிக் பாஸில் அன்ஷிதாவை தொடர்ந்து வெளியேற போகும் நபர் இவரா? குவியும் கம்ப்ளைன்ட்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியில் இந்த வாரத்தில் யார் வெளியேறப் போகிறார்கள் என்ற எவிக்ஷனுக்கான நாமினேஷன் லிஸ்ட் வெளியாகி இருக்கிறது. அதில் யாரெல்லாம் இடம் பிடித்திருக்கிறார்கள் என்று பார்க்கலாம்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8வது நிகழ்ச்சி கடந்த அக்டோபர் ஆறாம் தேதி தொடங்கப்பட்டது. நிகழ்ச்சி தொடங்கி 80 நாட்களை கடந்துவிட்ட நிலையில் இன்னும் மூன்று வாரங்களில் இந்த நிகழ்ச்சி முடிவுக்கு வர இருக்கிறது. அதுபோல இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்களும் பிறகு 6 வைல்ட் கார்ட் போட்டியாளர்களும் கலந்து கொண்டனர்.

அதில் 14 போட்டியாளர்கள் எவிக்ஷனாகி வெளியே அனுப்பப்பட்டிருக்கிறார்கள். மீண்டும் 10 போட்டியாளர்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கிறார்கள். அதுபோல இந்த வாரத்தில் டிக்கெட் 2 பினாலே டாஸ்க் தொடங்கப்பட்டு இருக்கிறது. அதில் முதல் டாஸ்க்கில் சௌந்தர்யா வெற்றி பெற்று இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
அதுபோல இந்த வாரத்தில் யார் வெளியேறப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. கடந்த வாரத்தில் ஜெஃப்ரி மற்றும் அன்ஷிதா வெளியேற்றப்பட்டு இருக்கும் நிலையில் இந்த வாரத்தின் எவிக்ஷனுக்கான நாமினேஷன் காலையிலேயே நடைபெற்றது. அதற்கான முதல் ப்ரோமோ வெளியாக இருந்தது.

அதில் லிவிங் ஏரியாவில் போட்டியாளர்கள் அமர்ந்திருக்கின்றனர். அப்போது பிக் பாஸ் இந்த வீட்டில் இருந்து வெளியேற சரியான காரணம் உடன் இரண்டு நபர்களை தேர்வு செய்து சொல்லுங்க என்று டாஸ்க் கொடுத்திருக்கிறார். அதில் ஜாக்குலின் விமர்சனங்கள் வைத்தால் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார் அதனால் நாமினேட் பண்ணுகிறேன் என்று விஷாலை நாமினேட் செய்கிறார்.
அடுத்ததாக வரும் முத்து, ரயான் ஆகியோர் கேம் பற்றிய புரிதல் ராணவிற்கு இல்லை என்று அவரை நாமினேட் செய்கிறார்கள். மேலும் நாம யாரை வைத்து விளையாடலாம் என்று பிளான் பண்ணி விளையாடுறாங்க, பிரண்ட்ஸ் எதாவது சொல்லிவிட்டால் வெளியே நாங்க தப்பா தெரிஞ்சிடுவோம் என்று சேஃப் கேம் விளையாடுறாங்க என்று விஷால் மற்றும் சௌந்தர்யா ஜாக்குலினை நாமினேட் செய்கிறார்கள்.

இப்படியாக முதல் ப்ரோமோ இருக்கும் நிலையில் இரண்டாவது ப்ரோமோவில் பிக் பாஸ் நாமினேஷன் ஆனவர்களின் லிஸ்ட் சொல்கிறார். அதில் ராணவ், பவித்ரா, விஷால், அருண், தீபக், ரயான், மஞ்சரி மற்றும் ஜாக்குலின் போன்ற 8 பேர் இடம் பிடித்திருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து முத்துக்குமரன் நாமினேஷன் குறித்து மஞ்சரி மற்றும் ராயனிடம் பேசிக் கொண்டிருக்கிறார். இதனால் இதை வைத்து இந்த வாரத்தில் ஒரு பஞ்சாயத்து வரும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications