கோபத்தில் பிக் பாஸ் வெளியிட்ட திடீர் அறிவிப்பு.. கதறி அழுத போட்டியாளர்கள்.. எதிர்பார்க்காத சம்பவம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியில் டிசம்பர் 20ஆம் தேதிக்கான எபிசோடின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் பிக் பாஸ் சொன்ன புது அறிவிப்பை கேட்டு பவித்ரா மற்றும் முத்துக்குமரன் கதறி அழுது இருக்கிறார்கள். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

பொதுவாக ஒரு விஷயத்தை செய்யும்போது நாம் ஒரு விதமான முடிவு வரும் என்று நினைத்து செய்வோம். ஆனால் அங்கு எதிர்பார்க்காத இன்னொரு சம்பவம் நடந்துவிடும். அதுபோலத்தான் இன்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடந்திருக்கிறது. அதாவது அடுத்த வாரத்திற்கான தலைவர் பதவிக்கான டாஸ்க் நடைபெறுகிறது.

Television Bigg Boss Tamil 8 Bigg Boss 8

அதில் முத்துக்குமரன் மற்றும் பவித்ரா இருவரும் போட்டி போடுகிறார்கள். அப்போது ஒரு பந்து கொடுக்கப்படுகிறது. அந்த பந்தை வைத்து கோல் யார் போடுகிறார்களோ அவர்கள் வெற்றியாளர் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் முத்துக்குமரன் பவித்ராவிற்கு விட்டுக் கொடுத்து விடுகிறார். இதனால் பிக் பாஸ் கோபம் ஆகி இருக்கிறார்.

நான் உங்களிடம் எத்தனையோ முறை சொல்லி இருக்கிறேன் இங்கு யாரும் விட்டுக்கொடுத்து விளையாட வரவில்லை, விளையாட்டை உண்மையாக விளையாடுங்கள் என்று.. ஆனால் நீங்கள் மீண்டும் மீண்டும் கேட்காமல் விளையாடுகிறீர்கள். அதனால் இந்த வாரத்திற்கான தலைவர் டாஸ்க் இனி கிடையாது.

அதுபோல ஒரு நபரை சேவ் பண்ணுவதற்காக எவிக்ஷன் ஃப்ரீ பாசும் கிடையாது என்று சொல்லி இருக்கிறார். ஏற்கனவே இந்த வாரம் கடும் போராட்டத்திற்கு இடையே தான் எவிக்ஷன் பாஸை ரயான் பெற்றிருக்கிறார். இந்த பாஸுக்காக தான் ரஞ்சித் மற்றும் ஜாக்லின் இடையே கூட பிரச்சனை ஏற்பட்டது.

இவ்வளவு கஷ்டப்பட்டு பிரச்சனைகளுக்கு இடையே ரயான் இந்த பாஸ் பெற்றிருந்தார். ஆனால் முத்துக்குமரன் மற்றும் பவித்ரா செய்த செயலால் இப்போது அந்த பாஸும் செல்லாமல் ஆகிவிட்டது. அதுபோல தலைவராக பவித்ரா போக முடியாது என்றும் கூறிவிட்டார். இதனால் முத்துக்குமரன் மற்றும் பவித்ரா இருவரும் ப்ரோமோவில் அழுது கொண்டிருக்கின்றனர்.

ஏற்கனவே இது போல் தான் தொழிலாளர்கள் மற்றும் மேனேஜர் டாஸ்க் நடைபெற்ற போது கூட முத்துக்குமரன் அங்கிருக்கும் சைக்கிளை ஓட்ட வேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டிருந்த போது அதை வேகமாக சுற்றி தன்னுடைய கையை எடுத்து, உங்களுக்கு சைக்கிள் தானே ஓட்ட வேண்டும் இப்போ தன்னாலே சைக்கிள் ஓடிக்கொண்டிருக்கிறது என்று சொல்லி இருந்தார்.

ஆனால் அது தவறு என்று பிக் பாஸ் அப்போதும் வீட்டிற்குள் தண்ணியை கட் பண்ணி இருந்தார். ஆனால் இப்போது மீண்டும் பவித்ராவுக்காக விட்டுக்கொடுக்கிறேன் என்று தியாகியாக மாறிய முத்துக்குமரனுக்கு செக் வைக்கிறேன் என்கிற பெயரில் மொத்த போட்டியாளர்களையும் பிக் பாஸ் தண்டித்திருக்கிறார்.

ஆனாலும் முத்துக்குமரன் அழுது கொண்டிருப்பதற்கு உள்ளிருக்கும் போட்டியாளர்கள் சிலர் அவருக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருப்பது பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. எப்படியும் இத்தனைக்கும் காரணம் நீங்கதான் என்று எல்லோரும் வாக்குவாதம் செய்வார்கள், ஆனால் ப்ரோமோவில் அது காட்டப்படவில்லை. எபிசோடில் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+