நன்றி மறக்காத முத்துக்குமரன்.. சொன்ன சொல்லை காப்பாற்றிட்டாரு.. இதுதான் பாசம்! குவியும் வாழ்த்து
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்ட முத்துக்குமரன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு முதல்முறையாக தீபக்கை சென்று சந்தித்திருக்கிறார். அப்போது எடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிக் பாஸ் தமிழ் 8வது சீசன் அக்டோபர் 6ஆம் தேதி தொடங்கப்பட்டது. நிகழ்ச்சியின் தொடக்கத்தில் 18 போட்டியாளர்களும் அதற்குப் பிறகு ஆறு வைல்டு கார்ட் போட்டியாளர்களும் இந்த விளையாட்டில் விளையாடி வந்தனர். கடைசியில் இந்த நிகழ்ச்சியில் ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே முத்துக்குமரன் வெற்றி பெற்றார்.

அதுபோல இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் எதிர்பார்க்காத பல சம்பவங்கள் நடைபெற்றது. அதாவது ரசிகர்களின் கருத்துப்படி பிக் பாஸ் கிராண்ட் பினாலேவில் முத்துக்குமரன், ஜாக்குலின், தீபக் மூன்று பேரும் இருப்பார்கள் என்று எதிர்பார்த்தனர். ஆனால் தீபக் நிகழ்ச்சி முடிவடைவதற்கு இரண்டு வாரத்திற்கு முன்பே வெளியேற்றப்பட்டார்.
அப்போது முத்துக்குமரன் தான் அளவுக்கு அதிகமாக அழுது கொண்டிருந்தார். அப்போது உன்னை கொன்னுடுவேன்.. போடா நீ என்னை ஏமாத்திட்ட.. என்று தீபக் எவிக்ஷனை நம்ப முடியாமல் விரக்தியில் பேசிக்கொண்டிருந்தார். அதுபோல கிராண்ட் பினாலே மேடையில் இருக்கும் போது கூட தீபக் நான் என்னுடைய தம்பி முத்துக்குமரனை பார்க்க தான் ஆவலாய் இருக்கேன் என்று சொல்லி இருந்தார்.

இவர்கள் இருவருக்கும் பிக்பாஸ் வீட்டிற்குள் நல்ல ஒரு பாண்டிங் இருந்தது. ரசிகர்களை போல சக போட்டியாளர்களின் எதிர்பார்ப்பு படி முத்துக்குமரன் டைட்டில் வின்னராக தேர்வு ஆனார். அதற்குப் பிறகு அவர் தன்னுடைய அன்பை வெளிப்படுத்துவதற்காக தீபக் வீட்டிற்கு முதல்முறையாக சென்று சர்ப்ரைஸ் கொடுத்து இருக்கிறார்.
அப்போது பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும்போது நான் விஷால், அருணோடு போட்டி போட்டு முன்னேறி வந்தேன். ஆனால் என்னால் தீபக்கோடு மட்டும் போட்டி போட்டு ஜெயிக்க முடியவில்லை. என்னால் 45 வயசுக்கு மனுஷனுக்கு ஈடு கொடுத்து ஜெயிக்க முடியல. அந்த அளவிற்கு பிட்டான மனுஷனை நீங்க வெளியே அனுப்பிட்டிங்க. அதனால உங்க மேல கொஞ்சம் கோபமா தான் இருக்கேன் என்று ரசிகர்களிடம் சொல்லி இருக்கிறார்.
அதுபோல தீபக்கை தொடர்ந்து தனக்கு சினிமாவில் வாய்ப்பு வாங்கி தந்த நடிகர் அருணையும் நேரில் சென்று பார்த்திருக்கிறார். சொந்த ஊரிலிருந்து சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று சென்னைக்கு வந்த போது தனக்கு உதவியது நடிகர் அருண் மற்றும் அரவிந்த் என்ற இரட்டை சகோதரர்கள் தான் என்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் முத்துக்குமரன் பேசியிருந்தார். அதுபோல தான் வெற்றி பெற்றதும் தனக்கு உதவியவர்களை நேரில் சென்று அவர்களிடம் நன்றி தெரிவித்திருப்பதை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications