முகத்துக்கு நேராகவே ராபர்ட் மாஸ்டரை ரோஸ்ட் செய்த ஜனனி.. ரசிகர்கள் நினைப்பதை அப்படியே சொல்லிட்டாரே
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் ஆறாவது நிகழ்ச்சியில் ராபர்ட் மாஸ்டரை முகத்துக்கு நேராக ஜனனி கலாய்த்து தள்ளிய பிரமோ தற்போது ரசிகர்கள் மத்தியில் பகிரப்பட்டு வருகிறது.
முதல் முறையாக ராபர்ட் மாஸ்டர் நாமினேஷனில் பெயர் வந்திருக்கும் நிலையில் ஜனனி ரசிகர்கள் மனதில் நினைத்துக் கொண்டிருப்பதை அப்படியே மாஸ்டரின் முன்பு பேசி இருக்கிறார்.
இந்த வாரம் லக்ஜரி பட்ஜெட்டில் புதிய டாஸ்க்காக பிக் பாஸ் ரோஸ்ட் தொடங்கப்பட்டிருக்கிறது.
மாமியாரின் காலில் விழுந்த எதிர்நீச்சல் ஜனனி...என்னம்மா நடிக்கிறாங்கப்பா.. நம்ப முடியலையே..!!
ரோஸ்ட் டாஸ்க்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் ஆறாவது நிகழ்ச்சியில் இந்த வார லக்ஜரி பட்ஜெட்டில் போட்டியாளர்களை மாற்றி மாற்றி ரோஸ்ட் செய்யும் பிபி ரோஸ்ட் டாஸ்க் தொடங்கி இருக்கிறது. இதில் யாரு சிறப்பாக ரோஸ்ட் செய்யப்படுகிறார்களோ, அவர்களை சக ஹவுஸ் மேட்டுகள் தேர்ந்தெடுக்க வேண்டும். வெற்றி பெறுபவர்களுக்கு 400 மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது.
சந்தேகமாகத்தான் இருக்காம்
போட்டியாளர்கள் இரண்டு பேர் கொண்ட அணியாக பிரிந்து ஒருவரை மாற்றி ஒருவர் ரோஸ்ட் செய்து வருகின்றனர் பிக் பாஸ் மேடை ரோஸ்ட் செய்வதற்காக பிரம்மாண்டமாகவும், கலர்ஃபுல்லாகவும் இருக்கிறது. இதில் ஜனனி மற்றும் ராபர்ட் மாஸ்டர் இருவரும் ஒரு அணியாக கலந்து கொண்டு இருக்கின்றனர். அதில் ஜனனி, ராபர்ட் மாஸ்டரை பார்த்து எல்லோரையும் டார்லிங் டார்லிங் என்று சொல்கிறீர்கள் நீங்கள் பிக் பாஸ் வீட்டுக்கு வந்து இருக்கீங்களா? இல்ல சுற்றுலாத்தலத்திற்கு வந்திருக்கீங்களா? என்று கேட்கிறார்.
இந்த கேள்வியை எதிர்பார்க்கலை
ராபர்ட் பாஸ்டர் ரட்சிதாவிடம் நடந்து கொள்வதையும் சகப் பெண் போட்டியாளர்களுடன் நடந்து கொள்வதையும் பார்த்து பலரும் இதே கேள்வியைதான் கேட்டு வருகின்றனர். அதை அப்படியே ஜனனி கேட்டு விட்டதால் இந்த ப்ரோமோவுக்கு அதிகமான லைக்குகள் அதிகரித்து வருகிறது. அதே நிலையில் ஜனனிக்கு பலரும் வாழ்த்து கூறி வருகிறார்கள். ஆனால் ராபர்ட் மாஸ்டர், ஜனனியின் பேச்சுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார்.
இன்று பஞ்சாயத்து இருக்கு
அடுத்ததாக அமுதவாணன் மற்றும் மணிகண்டன் இருவரும் ஒரு அணியாக கலந்து கொண்டிருக்கின்றனர். இவர்களில் யார் ரோஸ்ட் செய்யப்படுவார்கள் என்று பார்த்தால் இருவரும் ஏய்.., ஓய் என்று மாற்றி மாற்றி கத்தி கொண்டு இதற்கு மேல் என்னால் கத்த முடியாது என்று மணிகண்டன் விலகி விட்டார். அவர்களைத் தொடர்ந்து ஷுவின் மற்றும் கதிரவன் இருவரும் ஒரு அணியாக கலந்து கொண்டிருக்கின்றனர் .அதில் ஷிவின் இடம் பழகுவதற்கு பயமாக இருக்கிறது. நான் அவரிடம் பேச போனாலும் நீங்கள் என்னிடம் பேச வேண்டாம் என்று ஷிவின் என்னிடம் கூறிவிட்டார் என்று இதுவரைக்கும் சொல்லி வந்த கதிரவன் என்ன பாடுபட போகிறாரோ? என்று பிரமோவை பார்க்கும் போது பலரும் அனுதாபங்களை கூறி வருகிறார்கள்.