Captain Prabhakaran Box Office: 3வது நாள் கேப்டன் பிரபாகரனின் வசூல் சாதனை! - அழியாத விஜயகாந்தின் புகழ்
சென்னை: நடிகர் விஜயகாந்தின் திரைப் பயணத்தில் ஒரு மைல்கல்லாக அமைந்த திரைப்படம், அவரது 100-வது படமான 'கேப்டன் பிரபாகரன்'. 1991-ம் ஆண்டு வெளியான இந்தப் படம், இயக்குனர் ஆர்.கே.செல்வமணியின் விறுவிறுப்பான கதை மற்றும் திரைக்கதையால் ரசிகர்களைக் கட்டிப்போட்டது. தற்போது, இந்த கிளாசிக் திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகி, அதன் புகழ் காலத்தால் அழியாதது என்பதை நிரூபித்துள்ளது.

பிரம்மாண்டத்தின் பின்னணி
'கேப்டன் பிரபாகரன்' திரைப்படம், தனது சாகசங்கள் மற்றும் ஆழமான வசனங்களால் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்தது. இந்த படத்தில் தான் மன்சூர் அலிகான் வில்லனாக அறிமுகப்படுத்தப்பட்டார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் கேரளாவின் அடர்ந்த காடுகளில் படமாக்கப்பட்டன. லியாகத் அலிகான் எழுதிய வசனங்களை, விஜயகாந்த் தனது கம்பீரமான குரலில் பேசி, ரசிகர்களின் கைதட்டல்களை அள்ளினார்.
ரீ-ரிலீஸில் புதிய சாதனை
ஆகஸ்ட் 22-ம் தேதி, தமிழகத்தில் சுமார் 100 திரையரங்குகளில் 'கேப்டன் பிரபாகரன்' திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. முதல் நாளில் ₹42 லட்சத்தையும், இரண்டாவது நாளில் ₹86 லட்சத்தையும் வசூலித்த இந்தப் படம், மூன்றாவது நாளான நேற்று ₹1.30 கோடிகளை வசூல் செய்து ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது.
அனைவரையும் கவர்ந்த படம்
இந்தப் படம் விஜயகாந்தின் ரசிகர்களால் மட்டுமல்லாமல், இப்போதைய தலைமுறை இளைஞர்கள் மற்றும் சிறுவர்களாலும் ரசிக்கப்படுகிறது. இது, விஜயகாந்த் சினிமா உலகில் இன்றும் கொண்டிருக்கும் மதிப்பையும், அவரது படங்கள் பெற்றிருக்கும் வரவேற்பையும் தெளிவாகக் காட்டுகிறது. 'கேப்டன் பிரபாகரன்' படத்தின் இந்த ரீ-ரிலீஸ் வெற்றி, விஜயகாந்தின் புகழ், அரசியல் மற்றும் சமூக வாழ்க்கையைப் போலவே, சினிமா உலகிலும் காலத்தால் அழியாதது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தப் படத்தில் விஜயகாந்த் கதாநாயகனாக நடித்தார். சந்தன கடத்தல் வீரப்பனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படத்தில் நடிகர் சரத்குமார் சிறப்பு வேடத்தில் நடித்திருந்தார். மேலும் நடிகை ரூபினி, ரம்யா கிருஷ்ணன், லிவிங்ஸ்டன் மற்றும் வில்லனாக மன்சூர் அலி கான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
ஆர்.கே. செல்வமணியின் கடின உழைப்பு
'கேப்டன் பிரபாகரன்' திரைப்படம் தற்போது 'கூலி' திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் 400 திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. இதுவே படக்குழுவினருக்கு பெரிய வெற்றி என்று செல்வமணி கூறினார். "இந்தப் படம் வெளியான போது விஜயகாந்தின் 100வது படம் என்பதால் சென்டிமென்டாக ஓடாது என்று சிலர் சொன்னார்கள். அது போலவே நான் விஜயகாந்துடன் இணைந்த இரண்டாவது படம் என்பதாலும் ஓடாது என்று சிலர் கூறினர். ஆனால் அனைத்தையும் முறியடித்து இந்தப் படம் பெரும் வெற்றி பெற்றது" என்று செல்வமணி கூறினார்.
இந்த படம் எடுத்த காலகட்டத்தில் எந்த ஒரு வசதியும் கிடையாது CG, ட்ரோன் கேமரா என்று எந்த வசதியும் கிடையாது. ஒரு காட்சியில் 2000 பேர் நடிக்க வேண்டும் என்றால் அந்த காட்சி எடுப்பதற்காக 2000 பேரையும் நேரில் அழைத்து வரவேண்டும். அப்படி இந்த படத்தில் எடுக்கப்பட்ட ஒவ்வொரு காட்சிக்கும் நாங்கள் அதிகமாக சிரமப்பட்டு இருந்தோம்.
விஜயகாந்த் சார், மன்சூர் அலிகான், ரம்யா கிருஷ்ணன் மற்றும் எங்களுடன் பணியாற்றிய டெக்னீசியன்கள் என எல்லோருமே கஷ்டப்பட்டு இருக்கிறார்கள். உயிரைக் கொடுத்து படம் எடுத்து முடித்தோம். இந்த படம் எடுக்கும்போது இரண்டு, மூன்று பேர் உயிரை கூட இழந்து இருக்கிறார்கள். ஏன் விஜயகாந்த் சார் கூட இரண்டு மூன்று முறை மரணத்தின் விளிம்பு வரை சென்று வந்தார்.
எனக்கும் அதுபோல நடந்தது ஆனாலும் எங்கள் அனைவரின் குறிக்கோளும் இந்த படம் பிரமாண்டமாக படமாக இருக்க வேண்டும் என்று நினைத்தோம். 100 நாட்கள் காட்டுக்குள் தான் பயணம் செய்தோம். அங்கு ரூம் கிடையாது, கேரவன் கிடையாது, பாத்ரூம் இருக்காது இதையெல்லாம் உங்களுக்கு ஓகே என்றால் படம் பண்ணுவோம் என்று விஜயகாந்த் சாரிடம் முதலில் நான் சொன்னேன். அதற்கு அவர் எனக்கு ஓகே என்று சொல்லிவிட்டார். அவரே ஓகே சொன்ன பிறகு மற்றவர்களும் ஓகே சொல்லி விட்டார்கள். அதனால் தான் அந்த படத்தை எங்களால் வெற்றி படமாக எடுக்க முடிந்தது என்று ஆர் கே செல்வமணி பேசி இருந்தார்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications